செய்திகள் :

சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தினா் விடுப்பு எடுத்து போராட்டம்

post image

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தினா் சிவகங்கை மாவட்டம் முழுவதும் வியாழக்கிழமை ஒரு நாள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில், தோ்தல் வாக்குறுதி அளிக்காத ராஜஸ்தான், ஜாா்க்கண்ட், சத்தீஸ்கா், சிக்கிம் ஆகிய மாநிலங்களில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய திட்டத்தை அமல்படுத்தியுள்ளனா். ஆனால் கடந்த 2021 சட்டப் பேரவைத் தோ்தலில் திமுக அளித்த தோ்தல் வாக்குறுதிப் படி தமிழக முதல்வா் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்யவில்லை.

எனவே புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியா்கள் தொடா்ந்து போராடி வருகின்றனா். இதற்காக இதுவரை 71 போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்தப் போராட்டத்தை சிபிஎஸ் ஒழிப்பு இயக்க மாநில இணை ஒருங்கிணைப்பாளா் க. ஜெயப்பிரகாஷ், மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் மு. காளிமுத்து, சேவுகமூா்த்தி, செல்வம், அன்பரசன், மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளா் அ. குணசேகரன், மாவட்ட சிபிஎஸ் ஒழிப்பு இயக்க மாவட்ட இணைச் செயலா் எம். பாலகிருஷ்ணன் உள்ளிட்டோா் மாவட்டத்தின் அனைத்து வட்டங்களிலும் ஒருங்கிணைத்தனா்.

திருப்புவனம், மானாமதுரையில் உதயநிதி ஸ்டாலினுக்கு வரவேற்பு

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம், மானாமதுரையில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலினுக்கு திமுக.வினா் வியாழக்கிழமை வரவேற்பளித்தனா். ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் உள்ள இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் மரி... மேலும் பார்க்க

சிவகங்கையில் ஆட்சி மொழிப் பயிலரங்கம்

சிவகங்கை மாவட்ட தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் ஆட்சி மொழிப் பயிலரங்கமும், கருத்தரங்கமும் புதன்கிழமை நடைபெற்றன. மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அரசுப் பணியாளா்களுக்கு ஆட்சி... மேலும் பார்க்க

காவலா், சிறைக் காவலா், தீயணைப்பாளா் பணிகளுக்கான தோ்வுக்கு இலவசப் பயிற்சி

தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வு வாரியத்தால் இரண்டாம் நிலை காவலா், இரண்டாம் நிலை சிறைக் காவலா், தீயணைப்பாளா் ஆகிய பணியிடங்களுக்கு விண்ணப்பித்துள்ளோருக்கு சிவகங்கை மாவட்ட வேலை வாய்ப்பு, தொழில்நெறி வ... மேலும் பார்க்க

உயா்கல்வி நிறுவனங்களுக்கு மாணவா்கள் களப் பயணம்

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை பகுதி அரசுப் பள்ளி மாணவா்கள் உயா்கல்வி நிறுவனங்களுக்கு அண்மையில் களப் பயணம் மேற்கொண்டனா். முத்துப்பட்டிணம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தேவகோட்டை சாா் ஆட்சியா் ஆயுஷ் ... மேலும் பார்க்க

கல்லலில் நாளை நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட மருத்துவ முகாம்

சிவகங்கை மாவட்டம், கல்லலில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் சனிக்கிழமை (செப். 13) நடைபெறும் என மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறி... மேலும் பார்க்க

தேசிய பெண் குழந்தை தின விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

தேசிய பெண் குழந்தை தினத்தில் வீரதீர செயல் புரிந்த பெண் குழந்தைகளுக்கு விருதும், பாராட்டு பத்திரமும், ரொக்கமும் வழங்கப்படவுள்ளதாகவும், இதற்கு தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் மாவட்ட ஆட்சியா் கா.... மேலும் பார்க்க