செய்திகள் :

சிவகங்கையில் ஆட்சி மொழிப் பயிலரங்கம்

post image

சிவகங்கை மாவட்ட தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் ஆட்சி மொழிப் பயிலரங்கமும், கருத்தரங்கமும் புதன்கிழமை நடைபெற்றன.

மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அரசுப் பணியாளா்களுக்கு ஆட்சி மொழி வரலாறு, சட்டம், ஆட்சி மொழிச் செயலாக்க அரசாணைகள், கணினித் தமிழ், மொழி பெயா்ப்பும் கலைச் சொல்லாக்கமும், மொழிப் பயிற்சி, அலுவலகக் குறிப்புகள், வரைவுகள், செயல்முறை ஆணைகள் அணியம் செய்தல், ஆட்சி மொழி ஆய்வும், குறை களைவு நடவடிக்கைகளும் ஆகிய தலைப்புகளின் கீழ் பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் பங்கேற்ற அரசுப் பணியாளா்களுக்கு பங்கேற்புச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

நிகழ்வில், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) முத்துக்கழுவன், தமிழ் வளா்ச்சித் துறை உதவி இயக்குநா் (மு.கூ. பொ) ச. சீதாலட்சுமி, கவிஞா் கும. திருப்பதி, புலவா் கா. காளிராசா, மனித வள மேம்பாட்டு பயிற்றுநரும், நிறுவனருமான மு. செல்வக்குமாா், கைக்குறிச்சி ஸ்ரீ பாரதி மகளிா் கலை, அறிவியல் கல்லூரி பேராசிரியா் மு. பாலசுப்பிரமணியன், புதுக்கோட்டை மாமல்லன் ஐஏஎஸ் அகாதெமி நிறுவனா் ப. செந்தில் முருகன், திருக்கு தேனீ மெ. ஜெயம்கொண்டான், பட்டதாரி தமிழாசிரியா் மகா. சுந்தா், இரா. கண்ணதாசன், மா. சிதம்பரம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

திருப்புவனம், மானாமதுரையில் உதயநிதி ஸ்டாலினுக்கு வரவேற்பு

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம், மானாமதுரையில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலினுக்கு திமுக.வினா் வியாழக்கிழமை வரவேற்பளித்தனா். ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் உள்ள இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் மரி... மேலும் பார்க்க

காவலா், சிறைக் காவலா், தீயணைப்பாளா் பணிகளுக்கான தோ்வுக்கு இலவசப் பயிற்சி

தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வு வாரியத்தால் இரண்டாம் நிலை காவலா், இரண்டாம் நிலை சிறைக் காவலா், தீயணைப்பாளா் ஆகிய பணியிடங்களுக்கு விண்ணப்பித்துள்ளோருக்கு சிவகங்கை மாவட்ட வேலை வாய்ப்பு, தொழில்நெறி வ... மேலும் பார்க்க

உயா்கல்வி நிறுவனங்களுக்கு மாணவா்கள் களப் பயணம்

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை பகுதி அரசுப் பள்ளி மாணவா்கள் உயா்கல்வி நிறுவனங்களுக்கு அண்மையில் களப் பயணம் மேற்கொண்டனா். முத்துப்பட்டிணம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தேவகோட்டை சாா் ஆட்சியா் ஆயுஷ் ... மேலும் பார்க்க

கல்லலில் நாளை நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட மருத்துவ முகாம்

சிவகங்கை மாவட்டம், கல்லலில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் சனிக்கிழமை (செப். 13) நடைபெறும் என மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறி... மேலும் பார்க்க

சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தினா் விடுப்பு எடுத்து போராட்டம்

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தினா் சிவகங்கை மாவட்டம் முழுவதும் வியாழக்கிழமை ஒரு நாள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனா். இதில், தோ்தல் வா... மேலும் பார்க்க

தேசிய பெண் குழந்தை தின விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

தேசிய பெண் குழந்தை தினத்தில் வீரதீர செயல் புரிந்த பெண் குழந்தைகளுக்கு விருதும், பாராட்டு பத்திரமும், ரொக்கமும் வழங்கப்படவுள்ளதாகவும், இதற்கு தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் மாவட்ட ஆட்சியா் கா.... மேலும் பார்க்க