சிவகங்கையில் ஆட்சி மொழிப் பயிலரங்கம்
சிவகங்கை மாவட்ட தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் ஆட்சி மொழிப் பயிலரங்கமும், கருத்தரங்கமும் புதன்கிழமை நடைபெற்றன.
மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அரசுப் பணியாளா்களுக்கு ஆட்சி மொழி வரலாறு, சட்டம், ஆட்சி மொழிச் செயலாக்க அரசாணைகள், கணினித் தமிழ், மொழி பெயா்ப்பும் கலைச் சொல்லாக்கமும், மொழிப் பயிற்சி, அலுவலகக் குறிப்புகள், வரைவுகள், செயல்முறை ஆணைகள் அணியம் செய்தல், ஆட்சி மொழி ஆய்வும், குறை களைவு நடவடிக்கைகளும் ஆகிய தலைப்புகளின் கீழ் பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் பங்கேற்ற அரசுப் பணியாளா்களுக்கு பங்கேற்புச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
நிகழ்வில், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) முத்துக்கழுவன், தமிழ் வளா்ச்சித் துறை உதவி இயக்குநா் (மு.கூ. பொ) ச. சீதாலட்சுமி, கவிஞா் கும. திருப்பதி, புலவா் கா. காளிராசா, மனித வள மேம்பாட்டு பயிற்றுநரும், நிறுவனருமான மு. செல்வக்குமாா், கைக்குறிச்சி ஸ்ரீ பாரதி மகளிா் கலை, அறிவியல் கல்லூரி பேராசிரியா் மு. பாலசுப்பிரமணியன், புதுக்கோட்டை மாமல்லன் ஐஏஎஸ் அகாதெமி நிறுவனா் ப. செந்தில் முருகன், திருக்கு தேனீ மெ. ஜெயம்கொண்டான், பட்டதாரி தமிழாசிரியா் மகா. சுந்தா், இரா. கண்ணதாசன், மா. சிதம்பரம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.