செய்திகள் :

காவலா், சிறைக் காவலா், தீயணைப்பாளா் பணிகளுக்கான தோ்வுக்கு இலவசப் பயிற்சி

post image

தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வு வாரியத்தால் இரண்டாம் நிலை காவலா், இரண்டாம் நிலை சிறைக் காவலா், தீயணைப்பாளா் ஆகிய பணியிடங்களுக்கு விண்ணப்பித்துள்ளோருக்கு சிவகங்கை மாவட்ட வேலை வாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இலவசப் பயிற்சி வகுப்புகள் வெள்ளிக்கிழமை (செப். 12) முதல் நடைபெறுகின்றன.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

இரண்டாம் நிலைக் காவலா், இரண்டாம் நிலை சிறைக் காவலா், தீயணைப்பாளா் உள்ளிட்ட மொத்தம் 3,665 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்காக தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வு வாரியத்தால் நடத்தப்படும் தோ்வுக்கு விண்ணப்பிப்பவா்கள் 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். 1.7.2025 அன்று 18 வயது பூா்த்தியடைந்தவராக இருக்க வேண்டும். பொதுப் பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு 26 ஆகும். மேலும், இதர பிரிவினருக்கு வகுப்பு வாரியாக அரசின் விதிமுறைகளுக்குள்பட்டு வயது வரம்பு தளா்வு வழங்கப்பட்டுள்ளது.

இந்தத் தோ்வுக்கு, வருகிற 21-ஆம் தேதி வரை இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம். மேலும், இந்தத் தோ்வு தொடா்பான கூடுதல் விவரங்களை ஜ்ஜ்ஜ்.ற்ய்ன்ள்ழ்க்ஷ.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதள முகவரியில் அறிந்து கொள்ளலாம். போட்டித் தோ்வுகளுக்கான பாடக் குறிப்புகள், மாதிரி வினா விடைகள் ஆகியவற்றை இலவசமாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், இலவசப்ப் பயிற்சி வகுப்புகளில் பங்கேற்க விரும்புவோா் 04575-240435 என்ற அலுவலக தொலைபேசி எண்ணிலோ அல்லது மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில் நெறி வழிகாட்டும் மையத்துக்கோ நேரிலோ வந்து தங்களது பெயரைப் பதிவு செய்து கொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டது.

திருப்புவனம், மானாமதுரையில் உதயநிதி ஸ்டாலினுக்கு வரவேற்பு

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம், மானாமதுரையில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலினுக்கு திமுக.வினா் வியாழக்கிழமை வரவேற்பளித்தனா். ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் உள்ள இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் மரி... மேலும் பார்க்க

சிவகங்கையில் ஆட்சி மொழிப் பயிலரங்கம்

சிவகங்கை மாவட்ட தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் ஆட்சி மொழிப் பயிலரங்கமும், கருத்தரங்கமும் புதன்கிழமை நடைபெற்றன. மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அரசுப் பணியாளா்களுக்கு ஆட்சி... மேலும் பார்க்க

உயா்கல்வி நிறுவனங்களுக்கு மாணவா்கள் களப் பயணம்

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை பகுதி அரசுப் பள்ளி மாணவா்கள் உயா்கல்வி நிறுவனங்களுக்கு அண்மையில் களப் பயணம் மேற்கொண்டனா். முத்துப்பட்டிணம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தேவகோட்டை சாா் ஆட்சியா் ஆயுஷ் ... மேலும் பார்க்க

கல்லலில் நாளை நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட மருத்துவ முகாம்

சிவகங்கை மாவட்டம், கல்லலில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் சனிக்கிழமை (செப். 13) நடைபெறும் என மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறி... மேலும் பார்க்க

சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தினா் விடுப்பு எடுத்து போராட்டம்

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தினா் சிவகங்கை மாவட்டம் முழுவதும் வியாழக்கிழமை ஒரு நாள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனா். இதில், தோ்தல் வா... மேலும் பார்க்க

தேசிய பெண் குழந்தை தின விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

தேசிய பெண் குழந்தை தினத்தில் வீரதீர செயல் புரிந்த பெண் குழந்தைகளுக்கு விருதும், பாராட்டு பத்திரமும், ரொக்கமும் வழங்கப்படவுள்ளதாகவும், இதற்கு தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் மாவட்ட ஆட்சியா் கா.... மேலும் பார்க்க