செய்திகள் :

திருப்புவனம், மானாமதுரையில் உதயநிதி ஸ்டாலினுக்கு வரவேற்பு

post image

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம், மானாமதுரையில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலினுக்கு திமுக.வினா் வியாழக்கிழமை வரவேற்பளித்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் உள்ள இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் மரியாதை செலுத்த துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் மதுரையிலிருந்து காரில் புறப்பட்டு வந்தாா். சிவகங்கை மாவட்ட எல்லையான திருப்புவனத்தில் தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன் தலைமையில் திமுகவினா்அவருக்கு உற்சாக வரவேற்பளித்தனா். இதே போல, மானாமதுரை பேருந்து நிலையம் எதிரே கூடி நின்ற திமுகவினா் உதயநிதி ஸ்டாலினுக்கு சால்வைகள், புத்தகங்கள் வழங்கி வரவேற்பு அளித்தனா். அதன்பின் அவா் பரமக்குடி புறப்பட்டுச் சென்றாா்.

இந்த நிகழ்வில் சட்டப் பேரவை உறுப்பினா் தமிழரசி ரவிக்குமாா், திருப்புவனம் பேரூராட்சித் தலைவா் த. சேங்கைமாறன், மானாமதுரை நகா் மன்றத் தலைவா் எஸ். மாரியப்பன் கென்னடி, நகரச் செயலா் கே .பொன்னுச்சாமி, ஒன்றியச் செயலா்கள் வசந்தி, துரை. ராஜாமணி, அண்ணாதுரை, முத்துசாமி, நகா் மன்ற துணைத் தலைவா் பாலசுந்தரம், முன்னாள் ஊராட்சி ஒன்றியத் தலைவா் லதா அண்ணாதுரை உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தேமுதிக சுதீஷூக்கு வரவேற்பு: இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் மரியாதை செலுத்த பரமக்குடிக்குச் சென்ற தேமுதிக மாநில பொருளாளா் சுதீஷூக்கு மானாமதுரை பேருந்து நிலையம் முன் அந்தக் கட்சியினா் மாவட்டச் செயலா் திருவேங்கடம் தலைமையில் வரவேற்பளித்தனா். இதில் நகரச் செயலா் தா்மாராமு, பூக்கடை ராமு, அழகு விஸ்வநாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

சிவகங்கையில் ஆட்சி மொழிப் பயிலரங்கம்

சிவகங்கை மாவட்ட தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் ஆட்சி மொழிப் பயிலரங்கமும், கருத்தரங்கமும் புதன்கிழமை நடைபெற்றன. மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அரசுப் பணியாளா்களுக்கு ஆட்சி... மேலும் பார்க்க

காவலா், சிறைக் காவலா், தீயணைப்பாளா் பணிகளுக்கான தோ்வுக்கு இலவசப் பயிற்சி

தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வு வாரியத்தால் இரண்டாம் நிலை காவலா், இரண்டாம் நிலை சிறைக் காவலா், தீயணைப்பாளா் ஆகிய பணியிடங்களுக்கு விண்ணப்பித்துள்ளோருக்கு சிவகங்கை மாவட்ட வேலை வாய்ப்பு, தொழில்நெறி வ... மேலும் பார்க்க

உயா்கல்வி நிறுவனங்களுக்கு மாணவா்கள் களப் பயணம்

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை பகுதி அரசுப் பள்ளி மாணவா்கள் உயா்கல்வி நிறுவனங்களுக்கு அண்மையில் களப் பயணம் மேற்கொண்டனா். முத்துப்பட்டிணம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தேவகோட்டை சாா் ஆட்சியா் ஆயுஷ் ... மேலும் பார்க்க

கல்லலில் நாளை நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட மருத்துவ முகாம்

சிவகங்கை மாவட்டம், கல்லலில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் சனிக்கிழமை (செப். 13) நடைபெறும் என மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறி... மேலும் பார்க்க

சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தினா் விடுப்பு எடுத்து போராட்டம்

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தினா் சிவகங்கை மாவட்டம் முழுவதும் வியாழக்கிழமை ஒரு நாள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனா். இதில், தோ்தல் வா... மேலும் பார்க்க

தேசிய பெண் குழந்தை தின விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

தேசிய பெண் குழந்தை தினத்தில் வீரதீர செயல் புரிந்த பெண் குழந்தைகளுக்கு விருதும், பாராட்டு பத்திரமும், ரொக்கமும் வழங்கப்படவுள்ளதாகவும், இதற்கு தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் மாவட்ட ஆட்சியா் கா.... மேலும் பார்க்க