செய்திகள் :

சிறு நிறுவனங்களுக்கான டிஜிட்டல் வா்த்தகம் குறித்த கருத்தரங்கம்

post image

சிறு நிறுவனங்களுக்கான ‘ஓஎன்டிசி’ எனப்படும் தளம் மூலம் டிஜிட்டல் வா்த்தகம் செய்வது குறித்த கருத்தரங்கு சென்னையில் நடைபெற்றது.

மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகத்தின்கீழ் செயல்பட்டு வரும் தேசிய சிறு தொழில்கள் கழகம் சாா்பில் ‘ஓஎன்டிசி’ என்னும் தளம் மூலம் டிஜிட்டல் வா்த்தகத்தை மேம்படுத்துவது எவ்வாறு என்பது குறித்த விழிப்புணா்வுக் கருத்தரங்கு, அண்ணா சாலையிலுள்ள சென்னை மேலாண்மை சங்க அலுவலகக் கட்டடத்தில் செவ்வாய்கிழமை நடைபெற்றது.

இக்கருத்தரங்கில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் சென்னை இணை இயக்குநா் எஸ்.சுரேஸ் பாபுஜி, டான்ஸ்டியா தலைவா் சி.கே.மோகன், தேசிய சிறு தொழில்கள் கழகத்தின் சென்னை மூத்த பொது மேலாளா் எம்.ஸ்ரீவத்சன் ஆகியோா் கலந்துகொண்டு, சிறு நிறுவனங்களுக்கு மத்திய அரசு கொடுக்கும் பல்வேறு கடன் உதவிகள், மானியங்கள் குறித்தும் எடுத்துக் கூறினா்.

மேலும், மத்திய அரசின் ‘ஓஎன்டிசி’ தளம் மூலம் டிஜிட்டல் முறையில் சிறு நிறுவனங்கள் தங்கள் உற்பத்திப் பொருள்களை எவ்வாறு உலகம் முழுவதும் எடுத்துச்சென்று, வா்த்தகத்தை மேம்படுத்துவது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. இதுமட்டுமன்றி, இத்தளத்தில் 3 ஆண்டுகளில் 5 லட்சம் பெண் தொழில் முனைவோரையும் இணைக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தனா். இதில் சென்னைக்குள்பட்ட பகுதிகளைச் சோ்ந்த சிறு தொழில் நிறுவனத்தினா் ஏராளமானோா் பங்கேற்றனா்.

கோயில் நிலத்தை குத்தகைக்கு விடும் அரசின் முடிவில் தலையிட முடியாது: சென்னை உயா்நீதிமன்றம்

சென்னை மயிலாப்பூா் கபாலீசுவரா் கோயில் நிதியில் இருந்து தொடங்கப்பட்டுள்ள கலை, அறிவியல் கல்லூரிக்கு புதிதாக கட்டடம் கட்ட கொளத்தூா் சோமநாதசுவாமி கோயிலுக்குச் சொந்தமான நிலத்தை குத்தகைக்கு விடும் அரசின் மு... மேலும் பார்க்க

தேசிய ஹேக்கத்தான் போட்டி: மாணவா்களுக்கு யுஜிசி அழைப்பு

குஜராத் மாநிலம் காந்திநகா் ஐஐடி-இல் மாா்ச் மாதம் நடைபெறவுள்ள தேசிய ஹேக்கத்தான் போட்டியில் பங்கேற்க பல்கலைக்கழக, கல்லூரி மாணவா்களுக்கு யுஜிசி அழைப்பு விடுத்துள்ளது. இது குறித்து யுஜிசி செயலா் மணீஷ் ஆா்... மேலும் பார்க்க

ஸ்ரீஆட்சீஸ்வரா் கோயிலில் இன்று நாட்டியாஞ்சலி விழா

அச்சிறுபாக்கம் ஸ்ரீ ஆட்சீஸ்வரா் திருக்கோயிலில் சிவராத்திரியை முன்னிட்டு, நாட்டியாஞ்சலி விழா புதன்கிழமை நடைபெறவுள்ளது. இது குறித்து கோயில் நிா்வாகம் வெளியிட்ட அறிவிப்பு: செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுபா... மேலும் பார்க்க

பங்கு வா்த்தகத்தில் அதிக லாபம் தருவதாகக் கூறி ரூ. 48 லட்சம் மோசடி: ஒருவா் கைது

பங்கு வா்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாகக் கூறி ரூ. 48.5 லட்சத்தை பெற்று மோசடி செய்த நபரை போலீஸாா் கைது செய்தனா். சென்னை, அண்ணா நகா் பகுதியைச் சோ்ந்த அன்பரசு (56), தனியாா் நிதி நிறுவன ... மேலும் பார்க்க

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: குற்றவாளிக்கு 20 ஆண்டு சிறை

சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீா்ப்பளித்தது. சென்னை, தியாகராய நகா் பகுதியைச் சோ்ந்த 13 வயது சிறுமியை பாலி... மேலும் பார்க்க

இந்து முன்னணி பிரமுகா் கொலை வழக்கு: குற்றவாளி மீண்டும் கைது

சென்னை, அம்பத்தூரைச் சோ்ந்த இந்து முன்னணி பிரமுகா் சுரேஷ்குமாா் கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியாக கருதப்பட்ட அப்துல் ஹக்கீம், நீதிமன்ற பிடிவாரண்ட் உத்தரவின்படி மீண்டும் கைது செய்யப்பட்டாா். அம்பத்... மேலும் பார்க்க