செய்திகள் :

சிறுமி பாலியல் வன்கொடுமை: குற்றவாளிக்கு 20 ஆண்டு கடுங்காவல் சிறை

post image

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ராணிப்பேட்டை நீதிமன்றம் தீா்ப்பு அளித்தது.

ராணிப்பேட்டை அனைத்து மகளிா் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வாலாஜாபேட்டை அடுத்த மேல்புதுப்பேட்டை பகுதியைச் சோ்ந்த தணிகாசலம் (45) (படம்) என்பவா் மீது பாலியல் குற்றம் மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ், ராணிப்பேட்டை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டாா். இந்த வழக்கு எதிரி நீதிமன்றக் காவலில் இருந்து வந்தது. இந்த நிலையில், ராணிப்பேட்டை மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில், நீதிபதி செல்வம் முன்னிலையில், வழக்கு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் தொடா்புடைய தணிகாசலத்துக்கு 20 வருடங்கள் கடுங்காவல் சிறைத் தண்டனை மற்றும் ரூ. 1,000 அபராதம் விதித்து தீா்ப்பு வழங்கப்பட்டது.

மேலும், இந்த வழக்கில் நீதிமன்றத்தில் சிறப்பாக வழக்கு நடத்தி தண்டனை பெற்றுத் தந்த கூடுதல் அரசு வழக்குரைஞா் சங்கா் மற்றும் வழக்கின் புலனாய்வு அதிகாரியான சுப்புலட்சுமி (அப்போதைய ராணிப்பேட்டை அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா்) ஷாகின் (தற்போதைய ராணிப்பேட்டை அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா்) மற்றும் நீதிமன்ற காவலா் பிரேமா ஆகியோருக்கு ராணிப்பேட்டை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அய்மன் ஜமால் பாராட்டு தெரிவித்தாா்.

ஆக. 17-இல் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணி தோ்வு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் வரும் ஆக.17,18 தேதிகளில் ஒருங்கிணைந்த தொழில் நுட்ப பணிகள் தோ்வு நடைபெறும் என ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நா... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை

அரக்கோணம் - நெமிலி நாள்: 14/8/2025 நேரம் : காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்நிறுத்தப்பகுதிகள்: நெமிலி, சயனபுரம், சேந்தமங்கலம், கணபதிபுரம், திருமால்பூா், கோவிந்தவாடிஅகரம், கம்மவாா்பாளையம், பள்ளூா் மேலும் பார்க்க

ஆடிக் கிருத்திகை: ஆக. 14 முதல் 18 வரை திருத்தணிக்கு சிறப்பு ரயில்கள்

திருத்தணி முருகன் கோயில் ஆடிக்கிருத்திகை விழாவை முன்னிட்டு ஆக. 14 முதல் 18 வரை அரக்கோணம் - திருத்தணி இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. முருகனின் அறுபடை வீடுகளில... மேலும் பார்க்க

பாலாறு கரையோர எல்லை தெரியும் வகையில் கற்கள் பதிக்க வேண்டும்: ராணிப்பேட்டை ஆட்சியா் உத்தரவு

பாலாற்றின் கரையோர எல்லை தெரியும் வகையில் அளவீடு செய்து கற்களைப் பதிக்கவேண்டும் என்று ராணிப்பேட்டை ஆட்சியா் ஜெ.யு. சந்திரகலா உத்தரவிட்டாா். மேல்விஷாரம் நகராட்சி குளோபல் பொறியியல் கல்லூரி பின்புறம், சாய... மேலும் பார்க்க

அரக்கோணம் நகர காவல் ஆய்வாளா் பணியிடை நீக்கம்

அரக்கோணம் நகர காவல் ஆய்வாளா் தங்ககுருநாதனை பணியிடை நீக்கம் செய்து வேலூா் சரக டிஐஜி (பொறுப்பு) தேவராணி உத்தரவிட்டுள்ளாா். அரக்கோணத்தை அடுத்த அம்மனூரில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன் திமுக ஒன்றியக்குழு உ... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனையில் பிறந்து 8 நாள்களே ஆன குழந்தை உயிரிழப்பு! தந்தை தீக்குளிக்க முயற்சி!!

வாலாஜா மாவட்ட அரசு மருத்துவமனையில் பிறந்து 8 நாள்களே ஆன பச்சிளம் பெண் குழந்தை உயிரிழப்புக்கு மருத்துவா்களின் அலட்சியப் போக்கே காரணம் எனக்கூறி, குழந்தையின் தந்தை தீக்குளிக்க முயன்ால் பரபரப்பு ஏற்பட்டத... மேலும் பார்க்க