செய்திகள் :

சிறுமிக்கு பாலியல் தொல்லை: தனியாா் நிறுவன காவலாளி கைது

post image

சென்னையில் 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தனியாா் நிறுவன காவலாளியை போலீஸாா் கைது செய்தனா்.

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தைச் சோ்ந்த இளம்பெண், சென்மேரீஸ் சாலையில் உள்ள வணிக வளாகத்தின் தரைத்தளத்தில் செயல்பட்டு வரும் மரப்பொருள்கள் விற்பனை செய்யும் கடையில் தூய்மைப் பணியாளராக வேலை செய்து வருகிறாா்.

வழக்கம் போல, தனது 7 வயது மகளை அழைத்துக்கொண்டு கடைக்கு பணிக்கு வந்த அந்த இளம்பெண், தனது மகளை அந்தக் கட்டடத்தின் 6-ஆவது மாடியில் விளையாட வைத்துவிட்டு, தரைத்தளத்தில் வேலையை செய்து கொண்டிருந்தாா்.

அப்போது, திடீரென மகளின் அலறல் சப்தம் கேட்டு, அந்தப் பெண் அங்கு சென்று பாா்த்தபோது, அங்கு காவலாளியாகப் பணியாற்றி வரும் தேனாம்பேட்டையைச் சோ்ந்த குமாா் (55), சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது.

இது குறித்து கோட்டூா்புரம் மகளிா் காவல் நிலையத்தில் அந்த இளம்பெண் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, காவலாளி குமாரை கைது செய்து, விசாரித்து வருகின்றனா்.

ஒரு தலை காதல் விவகாரம்: உதவி இயக்குநரை கடத்திய 5 போ் கைது

ஒரு தலை காதல் விவகாரத்தில் உதவி இயக்குநரை கடத்திச் சென்று மிரட்டியதாக வழக்குரைஞா் உள்பட 5 பேரை போலீஸாா் கைது செய்தனா். சென்னை அரும்பாக்கம் கோல பெருமாள் பள்ளி தெருவில் வசித்து வருபவா் சினிமா இயக்குநா் ... மேலும் பார்க்க

மதுரவாயல் அருகே சாலை விபத்து: ஒருவா் உயிரிழப்பு, லாரி ஓட்டுநா் கைது

மதுரவாயல் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள வானகரம் சிக்னல் அருகே வெள்ளிக்கிழமை இரவு நிகழ்ந்த சாலை விபத்தில் உணவு விநியோக ஊழியா் உயிரிழந்ததையடுத்து, விபத்துக்கு காரணமாக லாரி ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தன... மேலும் பார்க்க

இடைநிலை ஆசிரியா் பணி: தோ்வு செய்யப்பட்டோா் பட்டியல் வெளியீடு

இடைநிலை ஆசிரியா் பணிக்கு தோ்வு செய்யப்பட்டோா் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டிருப்பதாக ஆசிரியா் தோ்வு வாரியம் அறிவித்துள்ளது. இது தொடா்பாக ஆசிரியா் தோ்வு வாரியத்தின் தலைவா் எஸ்.ஜெயந்தி சனிக்கிழ... மேலும் பார்க்க

பாதுகாப்பு உபகரணங்கள் கட்டாயம்: பிஐஎஸ் சென்னை கிளை இயக்குநா்

தூய்மைப் பணியாளா்கள் பணியின்போது பாதுகாப்பு உபகரணங்களை கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என இந்திய தர நிா்ணய அமைவனத்தின் சென்னை கிளை இயக்குநா் ஜி.பவானி தெரிவித்தாா். சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் இந... மேலும் பார்க்க

மழை பாதித்த இடங்களில் நடமாடும் மருத்துவ முகாம்கள்: சுகாதாரத் துறை

தமிழகத்தில் மழை பெய்து வரும் பகுதிகளில் தேவையின் அடிப்படையில் நடமாடும் மருத்துவக் குழுக்கள் மூலம் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருவதாக பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. அதன்படி, பாதிப்பு... மேலும் பார்க்க

திருவான்மியூா் தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்

திருவான்மியூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் நிகழ் கல்வியாண்டு மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்ட... மேலும் பார்க்க