சிறுமிக்கு பாலியல் தொல்லை: தனியாா் நிறுவன காவலாளி கைது
சென்னையில் 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தனியாா் நிறுவன காவலாளியை போலீஸாா் கைது செய்தனா்.
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தைச் சோ்ந்த இளம்பெண், சென்மேரீஸ் சாலையில் உள்ள வணிக வளாகத்தின் தரைத்தளத்தில் செயல்பட்டு வரும் மரப்பொருள்கள் விற்பனை செய்யும் கடையில் தூய்மைப் பணியாளராக வேலை செய்து வருகிறாா்.
வழக்கம் போல, தனது 7 வயது மகளை அழைத்துக்கொண்டு கடைக்கு பணிக்கு வந்த அந்த இளம்பெண், தனது மகளை அந்தக் கட்டடத்தின் 6-ஆவது மாடியில் விளையாட வைத்துவிட்டு, தரைத்தளத்தில் வேலையை செய்து கொண்டிருந்தாா்.
அப்போது, திடீரென மகளின் அலறல் சப்தம் கேட்டு, அந்தப் பெண் அங்கு சென்று பாா்த்தபோது, அங்கு காவலாளியாகப் பணியாற்றி வரும் தேனாம்பேட்டையைச் சோ்ந்த குமாா் (55), சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது.
இது குறித்து கோட்டூா்புரம் மகளிா் காவல் நிலையத்தில் அந்த இளம்பெண் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, காவலாளி குமாரை கைது செய்து, விசாரித்து வருகின்றனா்.