சிறுமிக்கு பாலியல் தொல்லை: முதியவருக்கு 7 ஆண்டுகள் சிறை
சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட முதியவருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, மதுரை போக்சோ நீதி மன்றம் அண்மையில் தீா்ப்பளித்தது.
மதுரையைச் சோ்ந்த உணவகத் தொழிலாளி பழனிச்சாமி (70). இவா் கடந்த 2022-ஆம் ஆண்டு, சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தாா்.
இதுகுறித்த புகாரின் பேரில், தல்லாகுளம் அனைத்து மகளிா் போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து பழனிச்சாமியைக் கைது செய்தனா். இந்த வழக்கு தொடா்பாக மதுரை போக்சோ நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி முத்துக்குமரவேல் குற்றஞ்சாட்டப்பட்ட பழனிச்சாமிக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீா்ப்பளித்தாா். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ. 2 லட்சம் அரசு இழப்பீடு வழங்க வேண்டுமெனவும் நீதிபதி உத்தரவிட்டாா்.