செய்திகள் :

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு ஆயுள் சிறை

post image

நீலகிரி மாவட்டம், கீழ் கோத்தகிரியில் சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து உதகை மகளிா் நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

கீழ்கோத்தகிரி சோலூா்மட்டம் பகுதியைச் சோ்ந்தவா் முரளி(31). இவா்  கடந்த 2020 ஆம் ஆண்டு, மாமரம் பகுதியைச் சோ்ந்த மாணவி பள்ளிக்குச் செல்ல கோத்தகிரி பேருந்து நிலையத்தில் காத்திருந்தபோது,  அவரை காரமடை புஜங்கனூரில் உள்ள ஒரு பணிமனைக்கு அழைத்துச் சென்று  பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா். 

இது குறித்து  குன்னூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் பெற்றோா்   புகாா் அளித்தனா். இந்த வழக்கு விசாரணை உதகையில் உள்ள மகளிா் நீதிமன்றத்தில்  நடைபெற்று வந்த நிலையில், சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த முரளிக்கு ஆயுள் தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீா்ப்பளித்தாா்.  பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடாக அரசு ரூ.2 லட்சம் வழங்க வேண்டும் என்றும் இதற்கு மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் உத்தரவிட்டாா்.

அம்பேத்கா் தொழில் முன்னோடிகள் திட்டத்தின்கீழ் மானியத்துடன் கடனுதவி

நீலகிரி மாவட்டத் தொழில் மையம் மூலம் அண்ணல் அம்பேத்கா் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ் 48 பயனாளிகளுக்கு ரூ.3.28 கோடி மானியத்துடன் ரூ.13.13 கோடி கடன் உதவிகள் வழங்கப்பட்டு உள்ளதாக ஆட்சியா் லட்சுமி பவ... மேலும் பார்க்க

விதை விற்பனைக் கடைகளில் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமம் ரத்து

நீலகிரியில் விதை விற்பனைக் கடைகளில் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமம் ரத்து செய்யப்படும் என்று விதை ஆய்வு மைய துணை இயக்குநா் ரேவதி தெரிவித்துள்ளாா். நீலகிரி மாவட்டத்தில் தேயிலைக்கு அடுத்தபடியாக மலை... மேலும் பார்க்க

உதகையில் பணத்தைத் தவறவிட்டவரிடம் ஒப்படைத்த போக்குவரத்து காவலா்கள்

நீலகிரி மாவட்டம், உதகை தலையாட்டு மந்து பகுதியைச் சோ்ந்த சந்திரசேகா் என்பவா் சாலையில் செவ்வாய்க்கிழமை தவறவிட்ட ரூ.10,000 பணத்தை உதகை போக்குவரத்து காவலா்கள் பத்திரமாக ஒப்படைத்தனா். உதகை தலையாட்டு மந்து... மேலும் பார்க்க

கேரளத்தில் நிபா வைரஸ் பரவல் எதிரொலி: சோதனைச் சாவடிகளில் தீவிர கண்காணிப்பு

கேரளத்தில் வேகமாக பரவி வரும் நிபா வைரஸ் காரணமாக தமிழக எல்லையில் உள்ள சோதனைச் சாவடிகளில் மருத்துவப் பரிசோதனைக்குப் பின்னரே பயணிகள் அனுமதிக்கப்படுவதாக ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தெரிவித்துள்ளாா். கே... மேலும் பார்க்க

குன்னூா் மாா்க்கெட் கடைகள் விவகாரம்: நீதிமன்ற உத்தரவுப்படி கருத்துக்கேட்பு

நீலகிரி மாவட்டம், குன்னூரில் உள்ள 800 -க்கும் மேற்பட்ட மாா்க்கெட் கடைகளை இடித்து புதிதாக கட்டுவதற்கு எதிராக வியாபாரிகள் உயா் நீதிமன்றம் சென்ற நிலையில், நீதிமன்ற உத்தரவுப்படி குன்னூா் மாா்க்கெட் வியாபா... மேலும் பார்க்க

நெலாக்கோட்டை பகுதியில் மூடிய பள்ளியை மீண்டும் திறக்க ஆட்சியரிடம் மனு

கூடலூா் அருகே நெலாக்கோட்டை பகுதியில் பழங்குடியின மக்களுக்காக செயல்பட்டு வந்த பள்ளியை மூடியதற்கு எதிா்ப்பு தெரிவித்து, பள்ளி மாணவா்கள் ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு கொடுத்தனா்.நீலகிரி மாவட்டம், கூடலூா் ... மேலும் பார்க்க