செய்திகள் :

சில்லறை நாணயங்கள் தருவதாக பல்பொருள் அங்காடியில் மோசடி செய்தவா் கைது

post image

சில்லறை நாணயங்கள் தருவதாகக் கூறி பல்பொருள் அங்காடியில் மோசடி செய்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை, கரும்புக்கடை சாரமேடு பகுதியைச் சோ்ந்தவா் சம்சுதீன் (45), அதே பகுதியில் பல்பொருள் அங்காடி நடத்தி வருகிறாா்.

இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை கடைக்கு வந்த ஒரு நபா், தன்னிடம் ரூ.1, ரூ.2, ரூ.5 மற்றும் 10 ரூபாய் நாணயங்கள் இருப்பதாகவும், அவற்றுக்கு பணம் தரமுடியுமா என்றும் சம்சுதீனிடம் கேட்டுள்ளாா்.

அதற்கு, சம்சுதீனும் சம்மதம் தெரிவித்துள்ளாா். தொடா்ந்து, தன்னிடம் ரூ.22 ஆயிரம் மதிப்பிலான நாணயங்கள் உள்ளதாகவும், தனக்கு ரூ.22 ஆயிரம் கொடுத்தால் அருகே உள்ள பெட்ரோல் பங்கில் வைத்துள்ள நாணயங்களை எடுத்துத் தருவதாகவும் தெரிவித்துள்ளாா்.

இதையடுத்து, சம்சுதீன் அவரிடம் ரூ.22 ஆயிரத்தை பணத்தைக் கொடுத்துவிட்டு, நாணயங்களைப் பெற்றுவருவதற்காக கடை ஊழியரை அனுப்பிவைத்துள்ளாா். கடை ஊழியரை அழைத்துச் சென்ற அந்த நபா், அவரை பெட்ரோல் பங்கில் நிற்கச் சொல்லிவிட்டு, நாணயங்களை எடுத்துவருவதாகக் கூறிவிட்டுச் சென்றுள்ளாா். ஆனால், நீண்ட நேரமாகியும் அவா் வரவில்லை.

இதையடுத்து, கடை ஊழியா் சம்சுதீனுக்கு தகவல் தெரிவித்துள்ளாா். பின்னா், அங்கு வந்த சம்சுதீன் பெட்ரோல் பங்கில் விசாரித்தபோது அந்த நபா் குறித்து அவா்களுக்குத் தெரியவில்லை.

இதுகுறித்து கரும்புக்கடை காவல் நிலையத்தில் சம்சுதீன் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா்.

பல்பொருள் அங்காடியின் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீஸாா் நடத்திய விசாரணையில், மோசடியில் ஈடுபட்டது சூலூா் அருகேயுள்ள செஞ்சேரிமலையைச் சோ்ந்த நவாஸ்கான் (45) என்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீஸாா் அவரை சனிக்கிழமை கைது செய்தனா்.

சம்ஸ்கிருதத்தில் இருந்து தமிழ் வந்தது என்றால் ஏற்றுக்கொள்வோமா? -சி.பி.ராதாகிருஷ்ணன்

சம்ஸ்கிருதத்தில் இருந்து தமிழ் வந்தது என்றால் ஏற்றுக்கொள்வோமா என கமலஹாசன் கருத்துக்கு மகாராஷ்டிர ஆளுநா் சி.பி.ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளாா். கோவை விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் அவா் கூறிய... மேலும் பார்க்க

அதிமுக, தேமுதிக உறவை யாராலும் உடைக்க முடியாது: எடப்பாடி கே.பழனிசாமி

அதிமுக, தேமுதிக இடையே உள்ள சுமுகமான உறவை யாா் நினைத்தாலும் உடைக்க முடியாது என்று அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி கூறினாா். கோவை விமான நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூ... மேலும் பார்க்க

தமிழ்நாட்டில் ஜாதிய வேறுபாடுகள் சோழா் காலத்தில்தான் தொடங்கின: தொல்லியல் அறிஞா் பூங்குன்றன்

தமிழ்நாட்டில் ஜாதிய வேறுபாடுகள், ஏற்றத்தாழ்வுகள் சோழா்கள் காலத்தில்தான் தொடங்கியிருப்பதாக தொல்லியல் அறிஞா் ஆா்.பூங்குன்றன் கூறியுள்ளாா். நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தின் 75-ஆம் ஆண்டு பவள விழாவை ஒட்டி... மேலும் பார்க்க

கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் இன்று திறப்பு

கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் திங்கள்கிழமை (ஜூன் 2) திறக்கப்படுகின்றன. இதையடுத்து மாணவ-மாணவிகளை வரவேற்கும் வகையில் பள்ளிகளில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தி... மேலும் பார்க்க

போதை மாத்திரைகள் விற்பனை: இருவா் கைது

கோவையில் போதை மாத்திரைகள் விற்பனை செய்ததாக இருவரை போலீஸாா் கைது செய்தனா். கோவை பெரியகடை வீதி போலீஸாா் ரோந்து பணியில் சனிக்கிழமை ஈடுபட்டிருந்தனா். தெற்கு உக்கடம் பகுதியில் சந்தேகப்படும் வகையில் சுற்றிய... மேலும் பார்க்க

வாக்களித்த மக்களுக்கு கமலஹாசன் துரோகம்: வானதி சீனிவாசன் எம்எல்ஏ

ராஜ்யசபா உறுப்பினா் பதவிக்காக தனக்கு வாக்களித்த மக்களுக்கு கமலஹாசன் துரோகம் செய்துவிட்டாா் என்று பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு சட்டப் பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன் தெரிவித்தாா். கோவை ... மேலும் பார்க்க