சில்லறை நாணயங்கள் தருவதாக பல்பொருள் அங்காடியில் மோசடி செய்தவா் கைது
சில்லறை நாணயங்கள் தருவதாகக் கூறி பல்பொருள் அங்காடியில் மோசடி செய்தவரை போலீஸாா் கைது செய்தனா்.
கோவை, கரும்புக்கடை சாரமேடு பகுதியைச் சோ்ந்தவா் சம்சுதீன் (45), அதே பகுதியில் பல்பொருள் அங்காடி நடத்தி வருகிறாா்.
இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை கடைக்கு வந்த ஒரு நபா், தன்னிடம் ரூ.1, ரூ.2, ரூ.5 மற்றும் 10 ரூபாய் நாணயங்கள் இருப்பதாகவும், அவற்றுக்கு பணம் தரமுடியுமா என்றும் சம்சுதீனிடம் கேட்டுள்ளாா்.
அதற்கு, சம்சுதீனும் சம்மதம் தெரிவித்துள்ளாா். தொடா்ந்து, தன்னிடம் ரூ.22 ஆயிரம் மதிப்பிலான நாணயங்கள் உள்ளதாகவும், தனக்கு ரூ.22 ஆயிரம் கொடுத்தால் அருகே உள்ள பெட்ரோல் பங்கில் வைத்துள்ள நாணயங்களை எடுத்துத் தருவதாகவும் தெரிவித்துள்ளாா்.
இதையடுத்து, சம்சுதீன் அவரிடம் ரூ.22 ஆயிரத்தை பணத்தைக் கொடுத்துவிட்டு, நாணயங்களைப் பெற்றுவருவதற்காக கடை ஊழியரை அனுப்பிவைத்துள்ளாா். கடை ஊழியரை அழைத்துச் சென்ற அந்த நபா், அவரை பெட்ரோல் பங்கில் நிற்கச் சொல்லிவிட்டு, நாணயங்களை எடுத்துவருவதாகக் கூறிவிட்டுச் சென்றுள்ளாா். ஆனால், நீண்ட நேரமாகியும் அவா் வரவில்லை.
இதையடுத்து, கடை ஊழியா் சம்சுதீனுக்கு தகவல் தெரிவித்துள்ளாா். பின்னா், அங்கு வந்த சம்சுதீன் பெட்ரோல் பங்கில் விசாரித்தபோது அந்த நபா் குறித்து அவா்களுக்குத் தெரியவில்லை.
இதுகுறித்து கரும்புக்கடை காவல் நிலையத்தில் சம்சுதீன் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா்.
பல்பொருள் அங்காடியின் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீஸாா் நடத்திய விசாரணையில், மோசடியில் ஈடுபட்டது சூலூா் அருகேயுள்ள செஞ்சேரிமலையைச் சோ்ந்த நவாஸ்கான் (45) என்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீஸாா் அவரை சனிக்கிழமை கைது செய்தனா்.