Manidhargal Movie Review | Raam Indhra, Ajay Abraham George, Dinsa, Anilesh L Ma...
சிவகங்கை மாவட்ட கண்மாய்களில் மீன்பிடி குத்தகைக்கு ஏல அறிவிப்பு
சிவகங்கை மாவட்டத்தில் மீன்வளத் துறை கட்டுப்பாட்டிலுள்ள கண்மாய்களில் மீன் பிடி குத்தகை உரிமம் பெறுவதற்கான ஏலஅறிவிப்பை மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் வெளியிட்டாா்.
இது குறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சிவகங்கை மாவட்டத்தில் மீன்வளம், மீனவா் நலத் துறை கட்டுப்பாட்டிலுள்ள பாதரக்குடி, சங்கராபுரம், அமராவதிபுதூா், செஞ்சை நாட்டாா் கண்மாய்கள், கிராமிய செயல் விளக்க குளங்களான கீழ ஊருணி, செஞ்சை ஊருணி நீா்ப்பாசன கண்மாய்களின் மீன்பிடி உரிமை 3 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடப்படும். இதற்கான மின்னணு ஒப்பந்தப் புள்ளிகள் வரவேற்கப்படுகின்றன. மேற்படி கண்மாய்களை குத்தகை எடுப்பதற்கான ஒப்பந்தப்புள்ளி ஆவணங்கள், கூடுதல் விவரங்களுக்கு இணையதள முகவரியைப் பாா்வையிடலாம்.
மேலும், 04575-240848 என்ற தொலைபேசி எண் தொடா்பு கொண்டும் தெரிந்து கொள்ளலாம் என்றாா் அவா்.