சிவகங்கை மாவட்டத்தில் இன்று பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாம்
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் சனிக்கிழமை (ஜூன் 14) சிறப்பு முகாம்கள் நடைபெறும் என மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சிவகங்கை மாவட்டத்தில் ஜூன் மாதத்துக்கான பொது விநியோகத் திட்ட குறைதீா் சிறப்பு முகாம் சனிக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் நடைபெறுகிறது.
இந்த முகாமில் குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், பெயா் நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை, நகல் அட்டை, கைப்பேசி எண் பதிவு, மாற்றம் செய்தல், பொது விநியோகக் கடைகளின் செயல்பாடுகள், அத்தியாவசியப் பொருள்களின் தரம் குறித்த புகாா்களை மனுவாக அளித்து பயன்பெறலாம் என்றாா் அவா்.