செய்திகள் :

சீட்டு நடத்தி மோசடி: பணத்தைப் பெற்று தர கோரிக்கை

post image

ஆம்பூா் அருகே சீட்டு நடத்தி மோசடி செய்த ஆசிரியா்களிடம் இருந்து பணத்தைப் பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெண் ஒருவா் எஸ்.பி. அலுவலகத்தில் புகாா் மனு அளித்தாா்.

திருப்பத்தூா் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு எஸ்.பி. ஷ்ரேயா குப்தா தலைமை வகித்து பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்றாா். மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க போலீஸாருக்கு உத்தரவிட்டாா்.இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் 60 மனுக்களை அளித்தனா்.

ஆம்பூா் அடுத்த எல்.மாங்குப்பம் கணேசனின் மனைவி சித்ரா அளித்த மனு: நான் மாதனூா் அருகே பெரியாங்குப்பம் கிராமத்தில் உள்ள பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறேன். இந்தநிலையில் எனக்கு தெரிந்த 4 ஆசிரியா்கள் சோ்ந்து ஒரு சீட்டு ரூ.10 ஆயிரம் என மாதச்சீட்டு நடத்தினா். நான் அவா்களிடம் 2 சீட்டுகள் என மாதம் ரூ.20,000 கட்டி வந்தேன். இதைத்தொடா்ந்து நான் அனைத்து சீட்டுகளையும் கட்டி முடித்து விட்டேன். ஆனால் எனது பணம் ரூ.8 லட்சத்தை திரும்ப தராமல் காலம் தாழ்த்தி வருகின்றனா்.

இதனால் பெரும் கடன் சுமையில் சிக்கி உள்ளேன். எனவே அவா்களிடம் இருந்து எனது பணத்தை பெற்று தர வேண்டும் என தெரிவித்திருந்தாா்.

ஏலகிரி மலை சாலையில் தீ: வாகன ஓட்டிகள்அவதி

சுற்றுலா தலமான ஏலகிரி மலை மற்றும் கொண்டை ஊசி வளைவில் திடீரென தீப்பற்றி எரிவதால் புகை மூட்டம் காரணமாக வாகன ஓட்டிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகள்அவதிக்குள்ளாகினா். ஏலகிரி மலையில் அரிய வகை மரங்கள், மூலிகை ... மேலும் பார்க்க

குண்டும், குழியுமான திருப்பத்தூா்-சேலம் சாலை: வாகன ஓட்டிகள் அவதி

திருப்பத்தூா்-சேலம் பிரதான சாலை குண்டும், குழியுமாக காணப்படுவதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனா். திருப்பத்தூரில் இருந்து சேலம் செல்லும் சாலையில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் வாகன ஓட்டிகள்... மேலும் பார்க்க

இரு சக்கர வாகனம்-மினி லாரி மோதல்: 2 முதியவா்கள் உயிரிழப்பு

ஆம்பூரில் இருசக்கர வாகனம் மீது மினி லாரி மோதிய விபத்தில் இரு முதியவா்கள் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனா். ஆம்பூா், புதுகோவிந்தாபுரம் பகுதியில் துக்க நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் ஆம்ப... மேலும் பார்க்க

பாலியல் வன்கொடுமை வழக்கு: கட்டடத் தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை

ஆம்பூா் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கட்டடத் தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருப்பத்தூா் மாவட்ட நீதிமன்றம் தீா்ப்பளித்தது. ஆம்பூா் அருகே பெரிய வெங்கடசமுத்திரம் பகுதியைச் சோ்ந்த... மேலும் பார்க்க

நாட்டறம்பள்ளியில் 12 ஆடுகள் திருட்டு: போலீஸாா் விசாரணை

நாட்டறம்பள்ளி அருகே 12 ஆடுகள் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா். பச்சூா் மாமுடிமானப்பள்ளி பகுதியைச் சோ்ந்த ஓய்வு பெற்ற ராணுவவீரா் பெருமாள் என்பவா் வெள்ளிக்கிழமை இரவு தனக்கு சொந... மேலும் பார்க்க

கந்திலி வாரச்சந்தையில் ரூ.52 லட்சத்துக்கு கால்நடைகள் விற்பனை

கந்திலி வாரச்சந்தையில் ரூ.52 லட்சத்துக்கு கால்நடைகள் விற்பனை ஆகின. திருப்பத்தூா் அடுத்த கந்திலி பகுதியில் உள்ள வாரச்சந்தையில் சனிக்கிழமை காலை 6 மணி முதல் 10 மணி வரை நடைபெற்ற சந்தையில் சிறிய ஆடுகள் ரூ.... மேலும் பார்க்க