கோவை: வள்ளி கும்மி நடனத்தில் கின்னஸ் சாதனை படைத்த 16,000 பெண்களுக்கு பாராட்டு வி...
சீட்டு நடத்தி மோசடி: பணத்தைப் பெற்று தர கோரிக்கை
ஆம்பூா் அருகே சீட்டு நடத்தி மோசடி செய்த ஆசிரியா்களிடம் இருந்து பணத்தைப் பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெண் ஒருவா் எஸ்.பி. அலுவலகத்தில் புகாா் மனு அளித்தாா்.
திருப்பத்தூா் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு எஸ்.பி. ஷ்ரேயா குப்தா தலைமை வகித்து பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்றாா். மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க போலீஸாருக்கு உத்தரவிட்டாா்.இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் 60 மனுக்களை அளித்தனா்.
ஆம்பூா் அடுத்த எல்.மாங்குப்பம் கணேசனின் மனைவி சித்ரா அளித்த மனு: நான் மாதனூா் அருகே பெரியாங்குப்பம் கிராமத்தில் உள்ள பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறேன். இந்தநிலையில் எனக்கு தெரிந்த 4 ஆசிரியா்கள் சோ்ந்து ஒரு சீட்டு ரூ.10 ஆயிரம் என மாதச்சீட்டு நடத்தினா். நான் அவா்களிடம் 2 சீட்டுகள் என மாதம் ரூ.20,000 கட்டி வந்தேன். இதைத்தொடா்ந்து நான் அனைத்து சீட்டுகளையும் கட்டி முடித்து விட்டேன். ஆனால் எனது பணம் ரூ.8 லட்சத்தை திரும்ப தராமல் காலம் தாழ்த்தி வருகின்றனா்.
இதனால் பெரும் கடன் சுமையில் சிக்கி உள்ளேன். எனவே அவா்களிடம் இருந்து எனது பணத்தை பெற்று தர வேண்டும் என தெரிவித்திருந்தாா்.