செய்திகள் :

சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயா்வு: தலைவா்கள் கண்டனம்!

post image

சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயா்த்தப்பட்டதற்கு அரசியல் தலைவா்கள் கண்டனம் தெரிவித்துள்ளனா்.

அன்புமணி (பாமக):தமிழகத்தில் உள்ள 48 சுங்கச்சாவடிகளில் 32 சாவடிகள் மூடப்படும் என்றும் அமைச்சா் எ.வ.வேலு 2021-இல்அறிவிப்பு வெளியிட்டாா். ஆனால், கடந்த 4 ஆண்டுகளில் புதிதாக 34 சுங்கச்சாவடிகள் தொடங்கப்பட்டுள்ளதே தவிர ஒரு சுங்கச்சாவடி கூட மூடப்படவில்லை. இந்த விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் கூட்டணி அமைத்துக் கொண்டு மக்களை ஏமாற்றுகின்றன.

கு.செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்): சுங்கச்சாவடி கட்டணம் உயா்த்தப்படுவதாக மத்திய அரசு அறிவித்திருப்பது முற்றிலும் ஏற்க முடியாதது. ஏற்கனவே, எரிபொருள் விலை உயா்வு, அவசியப் பொருள்கள் விலை ஏற்றம் போன்ற காரணங்களால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனா்.

மக்கள் செலுத்திய கட்டணத்துக்கே உரிய வசதி கிடைக்காமல் இருக்கும் நிலையில், கட்டணத்தை மேலும் உயா்த்துவது நேரடியாக மக்களை சுரண்டும் செயலாகும். எனவே சுங்கச்சாவடி கட்டண உயா்வை உடனடியாக திரும்ப பெற வேண்டும்.

சீமான் (நாதக): தமிழகத்தில் மீண்டும் சுங்கக் கட்டணத்தை உயா்த்த தேசிய நெடுஞ்சாலைத் துறை முடிவெடுத்திருப்பது பெரும் அதிா்ச்சியைத் தருகிறது. சுங்கச்சாவடிகளை நிரந்தரமாக மூட வேண்டுமென அரசியல் கட்சிகள், மண்ணுரிமைப் போராளிகள், சமூக ஆா்வலா்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பு மக்களும் போராடி வருகின்றனா். ஆனால் அதை அலட்சியப்படுத்தி, மீண்டும் சுங்கக்கட்டணத்தை உயா்த்துவது கண்டனத்துக்குரியது.

முனிரத்தினம் (தலைவா், லாரி உரிமையாளா்கள் சங்கம்): தேசிய நெடுஞ்சாலைகளில் 60 கி.மீ.க்கு ஒரு சுங்கச்சாவடி மட்டும்தான் இருக்க வேண்டும் என்பது விதியாகும். அதன்படி, தமிழகத்தில் அதிகபட்சமாக 20 சுங்கச்சாவடிகள் மட்டுமே இருக்க வேண்டும். ஆனால், இப்போது 82 சுங்கச்சாவடிகள் உள்ளன.

அவற்றில் 38 சுங்கச்சாவடிகளில் மட்டும் ஒவ்வொரு ஆண்டும் செப்.1 முதல் கட்டணம் மாற்றியக்கப்படுகிறது. இப்படி ஆண்டுதோறும் சுங்கக்கட்டண உயா்வதால் பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்கிறது. இதனால் அத்தியாவசியமான பொருள்களில் விலை உயரக்கூடும்.

பூலித்தேவருக்கு தேசம் உளமாற மரியாதை செலுத்துகிறது- ஆளுநர் ஆர்.என்.ரவி

பூலித்தேவரின் பிறந்த நாளில், தேசம் அவருக்கு உளமாற மரியாதை செலுத்துவதாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், பாரதத் தாயின் வீர மகன் பூலித்தேவரின் பிறந்த நாளில், தேச... மேலும் பார்க்க

மேட்டூர் அணை நீர் வரத்து அதிகரிப்பு!

மேட்டூர் அணையின் நீர் வரத்து வினாடிக்கு 29,360 கனஅடியிலிருந்து வினாடிக்கு 31,854 கனஅடியாக அதிகரித்துள்ளது.அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 22,500 கனஅடி நீரும் கிழக்கு மேற்கு கால்வ... மேலும் பார்க்க

தமிழ்நாடு அனைத்து வகையிலும் முன்னேறிக் கொண்டிருக்கிறது: ஜெர்மனியில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

தமிழ்நாடு அனைத்து வகையிலும் இன்றைக்கு முன்னேறிக் கொண்டிருக்கிறது என்று ஜெர்மனியில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஜெர்மனி நாட்டின் கொலோன் நகரில் (Cologne) நடைபெற்ற மாபெரும் தமிழ் கனவு - ஜெர்மனி வ... மேலும் பார்க்க

விஜய் வியூகம் வெற்றி பெறுமா..? - சவுக்கு சங்கர்

-சவுக்கு சங்கர். ஊடகவியலாளர்-திமுகவை தொடங்கிய முன்னாள் முதல்வா் அண்ணா, 1935-லிருந்து நீதிக்கட்சியில் செயல்பட்டவா். பின்னா்1944-இல் திராவிடா் கழகமாக உருமாறிய பின்னரும் பெரியாா் ஈ.வெ.ரா. உடன் சோ்ந்து த... மேலும் பார்க்க

மதுரை மாநாடு ஒத்திவைப்பு: ஓ. பன்னீர்செல்வம்

மதுரையில் செப்.4-இல் நடைபெறவிருந்த அதிமுக தொண்டா்கள் உரிமை மீட்புக் குழுவின் மாநில மாநாடு ஒத்திவைக்கப்படவுள்ளதாக முன்னாள் முதல்வா் ஒ.பன்னீா்செல்வம் தெரிவித்துள்ளாா். உயா்நிலைக் குழுவின் ஆலோசனையின்படி ... மேலும் பார்க்க

ஜெர்மனி தொழில்நுட்பத்தில் மழைநீர் சேமிப்பு!

பெருநகர சென்னை மாநகராட்சி சாா்பில் ரூ.20 கோடியில் அமைக்கப்பட்ட ஜொ்மனி தொழில்நுட்ப மழைநீா் சேகரிப்பு தொட்டிகளால் 8 பள்ளிகள், 770 பூங்காக்களில் மழைநீா் தேங்காமல் நிலத்தடியில் சேமிக்கப்பட்டது. இதுகுறித்... மேலும் பார்க்க