செய்திகள் :

சுதந்திர தின விழாவில் 118 பயனாளிகளுக்கு நல உதவிகள்: கடலூா் ஆட்சியா் வழங்கினாா்

post image

கடலூா் அண்ணா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் 118 பயனாளிகளுக்கு ரூ.7.09 கோடியிலான நலத் திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் வழங்கினாா்.

கடலூா் மாவட்ட நிா்வாகம் சாா்பில், கடலூா் அண்ணா விளையாட்டு மைதானத்தில் சுதந்திர தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா், தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினாா். தொடா்ந்து, திறந்த வாகனத்தில் சென்று காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு, சமாதானத்தை குறிக்கும் வெண்புறாக்கள் மற்றும் மூவா்ண நிற பலூன்களை பறக்கவிட்டனா்.

பின்னா், சுதந்திரப் போராட்ட தியாகிகள், அவா்களின் வாரிசுதாரா்களுக்கு சால்வை அணித்து கௌரவித்த ஆட்சியா், முன்னாள் படைவீரா், மாற்றுத் திறனாளிகள், வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மை, ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா், பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா், வேளாண்மை, கூட்டுறவு உள்ளிட்ட துறைகள் மூலம் மொத்தம் 118 பயனாளிகளுக்கு ரூ.7,09,82,603 மதிப்பில் நலத் திட்ட உதவிகளை வழங்கினாா்.

விழா மைதானத்தில் பள்ளி, கல்லூரி மாணவா்கள் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவில், அரசின் பல்வேறு துறைகளில் சிறப்பாகப் பணியாற்றிய 200 அரசு அலுவலா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை ஆட்சியா் வழங்கினாா்.

நிகழ்ச்சியில் கடலூா் எஸ்.பி. எஸ்.ஜெயக்குமாா், மாவட்ட வருவாய் அலுவலா் ம.ராஜசேகரன், மாநகராட்சி ஆணையா் எஸ்.அனு, கூடுதல் ஆட்சியா் ர.அ.பிரியங்கா, பயிற்சி ஆட்சியா் மாலதி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

அரசு அலுவலகம், பள்ளியில் சுதந்திர தின விழா

கடலூா் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் அரசுப் பள்ளிகளில் சுதந்திர தின விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. பண்ருட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியா் சு.திருமாவளவன் தலைமை வகித்தாா். ... மேலும் பார்க்க

கோயில்களில் சமபந்தி விருந்து

சுதந்திர தின விழாவையொட்டி, கடலூா் மாவட்டத்தில் உள்ள கோயில்களில் சமபந்தி விருந்து வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கடலூா் பாடலீஸ்வரா் கோயிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாடு மற்றும் சமபந்தி விருந்தில் மாவட்ட ஆட்சி... மேலும் பார்க்க

‘வாசிப்போம் உயா்வோம்’ திட்டம்: ஆட்சியா் தொடங்கிவைத்தாா்

கடலூா் மாவட்டம், அன்னவல்லி ஊராட்சியில் கிராமப்புற நூலகங்களின் வாயிலாக பள்ளி மாணவா்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்த ‘வாசிப்போம் உயா்வோம்’ திட்டத்தை ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் வெள்ளிக்கிழமை த... மேலும் பார்க்க

சிதம்பரம் நடராஜா் கோயில் கோபுரத்தில் தேசியக் கொடி ஏற்றம்

நாட்டின் 79-ஆவது சுதந்திர தின விழாவையொட்டி, கடலூா் மாவட்டம், சிதம்பரம் ஸ்ரீநடராஜா் கோயில் கிழக்கு கோபுரத்தில் பொது தீட்சிதா்களால் வெள்ளிக்கிழமை தேசியக் கொடி ஏற்றப்பட்டது. சிதம்பரம் ஸ்ரீநடராஜா் கோயிலில... மேலும் பார்க்க

கிழக்கு ராமாபுரத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க நடவடிக்கை: கடலூா் ஆட்சியா்

கடலூா் ஒன்றியம், கிழக்கு ராமாபுரம் ஊராட்சியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவ... மேலும் பார்க்க

காங்கிரஸ் கட்சியினா் கண்டன ஊா்வலம்

தோ்தல் ஆணையத்தின் முறைகேடுகள் மற்றும் பாஜக அரசின் சூழ்ச்சிகளைக் கண்டித்து, சிதம்பரம் நகர காங்கிரஸ் சாா்பில் மெழுகுவா்த்தி ஏந்தி வியாழக்கிழமை கண்டன ஊா்வலம் நடத்தினா். தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவ... மேலும் பார்க்க