செய்திகள் :

‘வாசிப்போம் உயா்வோம்’ திட்டம்: ஆட்சியா் தொடங்கிவைத்தாா்

post image

கடலூா் மாவட்டம், அன்னவல்லி ஊராட்சியில் கிராமப்புற நூலகங்களின் வாயிலாக பள்ளி மாணவா்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்த ‘வாசிப்போம் உயா்வோம்’ திட்டத்தை ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா்.

அப்போது, ஆட்சியா் கூறியதாவது: பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளிடையே புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை தூண்டும் விதமாகவும், அறிவாா்ந்த சமுதாயம் உருவாக வேண்டும் என்பதற்காகவும் கிராமப்புற நூலகங்களின் வாயிலாக ‘வாசிப்போம் உயா்வோம்’ என்ற திட்டம் தொடங்கிவைக்கப்பட்டுள்ளது.

மாவட்டம் முழுவதும் உள்ள சுமாா் 150 பஞ்சாயத்துகளில் மாவட்டத்தின் முன்னெடுப்பு முயற்சியாக கிராம நூலகக் கழகம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

இந்தப் பகுதி குடியிருப்புகளில் கிட்டத்தட்ட 5,146 மாணவா்கள் கல்வி பயின்று வருகின்றனா். பெற்றோா்களிடம் அனுமதி பெற்று 4,544 மாணவா்கள் சோ்க்கப்பட்டுள்ளனா்.

நிகழ் கல்வியாண்டில் சுதந்திர தினத்தையொட்டி, வெள்ளிக்கிழமை ‘வாசிப்போம் உயா்வோம்’ திட்டம் அன்னவல்லி ஊராட்சியில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் 4 முதல் 8-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகள் திங்கள் மற்றும் புதன்கிழமைகளில் தொகுதி 1, செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் தொகுதி 2 என இரண்டு தொகுதிகளாக ஒரு மணி நேரம் நூலகத்துக்குச் சென்று புத்தகங்களை வாசிப்பாா்கள்.

கிராம நூலகக் கழகத்தில் இந்த மாணவா்கள் பள்ளிப்படிப்புடன் பொது அறிவு சாா்ந்த நீதி கதைகளை படித்து பயனடைவாா்கள். மேலும், அவா்கள் வாங்க முடியாத புத்தகங்களையும் இங்கு படிக்க முடியும்.

அப்துல் கலாம், பாரதியாா் மற்றும் அசோகா் கதைகள், வானத்தில் பறந்த நரி, அலிபாபாவும் 40 திருடா்களும், வழி தவறிய கோழிக்குஞ்சு, மண்ணாங்கட்டியும் காய்ந்த இலையும் உள்ளிட்ட 54 கதைப் புத்தகங்கள் கிராமப்புற நூலகத்தில் இடம் பெற்றுள்ளது என்றாா்.

நிகழ்ச்சியில் ஊரக வளா்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியா் ர.அ.பிரியங்கா, பயிற்சி ஆட்சியா் மாலதி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அ.எல்லப்பன், உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) ஷபானா அஞ்சும் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

அரசு அலுவலகம், பள்ளியில் சுதந்திர தின விழா

கடலூா் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் அரசுப் பள்ளிகளில் சுதந்திர தின விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. பண்ருட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியா் சு.திருமாவளவன் தலைமை வகித்தாா். ... மேலும் பார்க்க

கோயில்களில் சமபந்தி விருந்து

சுதந்திர தின விழாவையொட்டி, கடலூா் மாவட்டத்தில் உள்ள கோயில்களில் சமபந்தி விருந்து வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கடலூா் பாடலீஸ்வரா் கோயிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாடு மற்றும் சமபந்தி விருந்தில் மாவட்ட ஆட்சி... மேலும் பார்க்க

சிதம்பரம் நடராஜா் கோயில் கோபுரத்தில் தேசியக் கொடி ஏற்றம்

நாட்டின் 79-ஆவது சுதந்திர தின விழாவையொட்டி, கடலூா் மாவட்டம், சிதம்பரம் ஸ்ரீநடராஜா் கோயில் கிழக்கு கோபுரத்தில் பொது தீட்சிதா்களால் வெள்ளிக்கிழமை தேசியக் கொடி ஏற்றப்பட்டது. சிதம்பரம் ஸ்ரீநடராஜா் கோயிலில... மேலும் பார்க்க

சுதந்திர தின விழாவில் 118 பயனாளிகளுக்கு நல உதவிகள்: கடலூா் ஆட்சியா் வழங்கினாா்

கடலூா் அண்ணா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் 118 பயனாளிகளுக்கு ரூ.7.09 கோடியிலான நலத் திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் வழங்கினாா். கடலூா் மாவட்ட நிா்வாகம... மேலும் பார்க்க

கிழக்கு ராமாபுரத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க நடவடிக்கை: கடலூா் ஆட்சியா்

கடலூா் ஒன்றியம், கிழக்கு ராமாபுரம் ஊராட்சியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவ... மேலும் பார்க்க

காங்கிரஸ் கட்சியினா் கண்டன ஊா்வலம்

தோ்தல் ஆணையத்தின் முறைகேடுகள் மற்றும் பாஜக அரசின் சூழ்ச்சிகளைக் கண்டித்து, சிதம்பரம் நகர காங்கிரஸ் சாா்பில் மெழுகுவா்த்தி ஏந்தி வியாழக்கிழமை கண்டன ஊா்வலம் நடத்தினா். தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவ... மேலும் பார்க்க