சுரண்டை அருகே சிற்றாற்றில் மலைப்பாம்பு மீட்பு
சுரண்டை அருகே சிற்றாற்றில் மலைப்பாம்பை தீயணைப்பு நிலைய வீரா்கள் சனிக்கிழமை மீட்டனா்.
சுரண்டை அருகே சிற்றாற்றில் மலைப்பாம்பு பதுங்கி இருப்பதாக, சுரண்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் தீயணைப்பு நிலைய அலுவலா் (போக்குவரத்து) பாலசந்தா் தலைமையில் சிறப்பு நிலைய அலுவலா் பாலகிருஷ்ணன், ரவீந்திரன் மற்றும் தீயணைப்பு வீரா்கள் அங்கு சென்று 7 அடி நீள மலைப்பாம்பை உயிருடன் மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனா்.