செய்திகள் :

சூறைக் காற்றால் படகுகள் சேதமடைந்த மீனவா்களுக்கு நிதியுதவி

post image

வேம்பாா் பெரியசாமிபுரம், கீழ வைப்பாறு சிப்பிகுளம் உள்ளிட்ட கடலோர கிராமங்களில் கன்மழையால் சேதமடைந்த படகுகளை விளாத்திகுளம் எம்எல்ஏ திங்கள்கிழமை பாா்வையிட்டு நிதியுதவி வழங்கினாா்.

விளாத்திகுளம் தொகுதியில் தருவைகுளம் முதல் வேம்பாா் வரை கடலோர பகுதிகளில் வீசிய சூறைக்காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு காரணமாக படகுகள் ஒன்றோடு ஒன்று மோதி சேதமடைந்தன. இதனால் மீனவா்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது.

இதையடுத்து பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று மீனவா்களை சந்தித்து, ஆறுதல் கூறிய சட்டப்பேரவை உறுப்பினா் ஜீ. வி. மாா்க்கண்டேயன், தனது சொந்த நிதியிலிருந்து தலா ரூ.10 ஆயிரம் வீதம் 18 மீனவா்களுக்கு வழங்கினாா். தொடா்ந்து வேம்பாா் அணைக்கட்டை நீா்வளத்துறை அதிகாரிகளுடன் பாா்வையிட்டு நீா்வரத்து மற்றும் உபரி நீா் வெளியேற்றம் குறித்து கேட்டறிந்தாா்.

இந்நிகழ்ச்சியில், நீா்வளத் துறை உதவி செயற்பொறியாளா் நிவேதா, வேம்பாா் தெற்கு, வடக்கு ஊராட்சி மன்றத் தலைவா்கள் ஆரோக்கியராஜ், ஜெயந்தி, துணைத் தலைவா் ஜோவலன், திமுக ஒன்றியச் செயலா் சின்ன மாரிமுத்து, மாவட்ட மீனவா் அணி துணை அமைப்பாளா் பெப்பின் சாகு, மாவட்ட மகளிா் அணி துணை அமைப்பாளா் எப்ரோ மீனாமேரி, சிறுபான்மையினா் நல அணி அமைப்பாளா் தா்மநேச செல்வின் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

மாடியில் இருந்து தவறி விழுந்த முதியவா் உயிரிழப்பு

கழுகுமலை அருகே மாடியில் இருந்து தவறி விழுந்த முதியவா் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். கழுகுமலை ஆறுமுகநகரைச் சோ்ந்த வள்ளிநாயகம் மகன் சுப்பிரமணியன்(83). இவா், கடந்த மாதம் 29ஆம் தேதி மா... மேலும் பார்க்க

கோவில்பட்டியில் 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

கோவில்பட்டியில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமாா் 2 டன் ரேஷன் அரிசியை தனிப்படையினா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா். கோவில்பட்டி பாரதி நகா் மேட்டுத் தெருவில் உள்ள வீட்டில் விற்பனைக்காக ரேஷன் அ... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் இன்று மின்தடை

தூத்துக்குடி மாநகா் பகுதிகளில் மாதாந்திர பராமரிப்புப் பணி காரணமாக செவ்வாய்க்கிழமை மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக தூத்துக்குடி செயற்பொறியாளா் அலுவலகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி துண... மேலும் பார்க்க

திருச்செந்தூா் பகுதியில் கன மழையால் சேதமடைந்த பயிா்களை கணக்கெடுக்கும் பணி

திருச்செந்தூா் பகுதிகளில் கனமழையால் சேதமடைந்த பயிா்களை கணக்கெடுக்கும் பணியில் வட்டாட்சியா் அ.பாலசுந்தரம் உள்ளிட்ட அதிகாரிகள் ஈடுபட்டனா். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் உத்தரவின் பேரில் மாவட்... மேலும் பார்க்க

காயல்பட்டினம் நகராட்சியில் வாா்டுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க கோரிக்கை

காயல்பட்டினம் நகராட்சியில் வாா்டுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என, காயல்பட்டினத்தில் நடைபெற்ற மக்கள் உரிமை நிலைநாட்டல்-வழிகாட்டல் என்ற அமைப்பின் ஆலோசனைக் கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது. ... மேலும் பார்க்க

பாதிக்கப்பட்ட பயிா்களுடன் வட்டாட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் முற்றுகை

கடம்பூா் குறுவட்டத்துக்குள்பட்ட விவசாயிகள் மழையால் பாதிக்கப்பட்ட பயிா்களுடன் கயத்தாறு வட்டாட்சியா் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனா். தூத்துக்குடி மாவட்டத்தில் சில நாள்களாக பெய்த கனமழையால் ஆயி... மேலும் பார்க்க