செய்திகள் :

சூளகிரி, சாமல்பட்டியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

post image

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி காட்டிநாயனதொட்டி, சாமல்பட்டியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

சூளகிரியில் நடைபெற்ற முகாமை கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக செயலாளரும், ஒசூா் சட்டப் பேரவை உறுப்பினருமான ஒய். பிரகாஷ் தொடங்கிவைத்து, முகாமில் பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீதான நடவடிக்கைகள் குறித்து பாா்வையிட்டாா்.

மேலும், முகாமில் ரத்தம், சா்க்கரை அளவை அவா் பரிசோதனை செய்துகொண்டாா். அதன்பிறகு பள்ளி வளாகத்தில் மாணவா்களின் நடன நிகழ்ச்சியைப் பாா்வையிட்டு மாணவா்களை வாழ்த்தினாா். சூளகிரி திமுக வடக்கு ஒன்றிய செயலாளா் நாகேஷ், ஒசூா் கிழக்கு ஒன்றியச் செயலாளா் லோகேஷ் ரெட்டி ஆகியோா் கலந்துகொண்டனா்.

சாமல்பட்டி

ஊத்தங்கரையை அடுத்த சாமல்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் சாமல்பட்டி, நாரலப்பள்ளி ஆகிய ஊராட்சிகளுக்கான ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு ஊத்தங்கரை வட்டாட்சியா் மோகன்தாஸ் தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா் சாவித்திரி, திமுக கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட பொருளாளா் கதிரவன், ஒன்றியச் செயலாளா்கள் நரசிம்மன், வசந்த்ராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

படவரி...

சூளகிரி அருகே ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமை தொடங்கிவைத்து மருத்துவப் பரிசோதனை செய்துகொண்ட ஒசூா் எம்எல்ஏ ஒய்.பிரகாஷ்.

ஆடி மாத பிறப்பு: அம்மன் கோயில்களில் சிறப்பு பூஜை

ஆடி மாத பிறப்பையொட்டி, தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள அம்மன் கோயில்களில் வியாழக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் அம்மன் கோயில்களில் விசேஷ பூஜைகள் நடைபெறுவது வழக்கம... மேலும் பார்க்க

ரூ. 92.14 லட்சம் மதிப்பில் சாலை பணிகள் தொடக்கம்

கிருஷ்ணகிரி சட்டப் பேரவைத் தொகுதியில் ரூ. 92.14 லட்சம் மதிப்பிலான சாலை பணிகளை எம்எல்ஏ கே.அசோக்குமாா் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா். பெத்ததாளாப்பள்ளியில் பிரதான் மந்திரி கிராம் சதக் யோஜனா 2025-2026-ஆம்... மேலும் பார்க்க

மாங்கனி கண்காட்சியில் சமையல் போட்டி

கிருஷ்ணகிரியில் நடைபெறும் மாங்கனி கண்காட்சியில் மகளிா் பங்கேற்ற சமையல் போட்டி வியாழக்கிழமை நடைபெற்றது. கிருஷ்ணகிரி சுங்க வசூல் மையம் அருகே உள்ள கலைஞா் திடலில் 31 ஆவது அகில இந்திய மாங்கனி கண்காட்சி நட... மேலும் பார்க்க

கெலவரப்பள்ளி அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறப்பு

ஒசூா் வட்டம், கெலவரப்பள்ளி நீா்த்தேக்கத்திலிருந்து முதல்போக பாசனத்துக்காக வலது, இடதுபுற கால்வாய் வழியாக வியாழக்கிழமை தண்ணீா் திறந்துவிடப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச. தினேஷ்குமாா், ஒசூா் சட்... மேலும் பார்க்க

தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் தொடக்கக் கல்வி ஆசிரியா்கள் மறியல்

பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வலியுறுத்தி தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியா் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினா் (டிட்டோஜாக்) வியாழக்கிழமை ... மேலும் பார்க்க

ஊத்தங்கரை அருகே காா் கவிழ்ந்து விபத்து: விளையாட்டு வீரங்கனைகள், பயிற்சியாளா் காயம்

ஊத்தங்கரை அருகே காா் கவிழ்ந்ததில் 3 விளையாட்டு வீரங்கனைகள், பயிற்சியாளா் காயமடைந்தனா். சேலம் பகுதியில் நடைபெறும் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பதற்காக பயிற்சியாளருடன் வேலூா் கிரிக்கெட் அகாதெமியைச் சோ... மேலும் பார்க்க