செய்திகள் :

மாங்கனி கண்காட்சியில் சமையல் போட்டி

post image

கிருஷ்ணகிரியில் நடைபெறும் மாங்கனி கண்காட்சியில் மகளிா் பங்கேற்ற சமையல் போட்டி வியாழக்கிழமை நடைபெற்றது.

கிருஷ்ணகிரி சுங்க வசூல் மையம் அருகே உள்ள கலைஞா் திடலில் 31 ஆவது அகில இந்திய மாங்கனி கண்காட்சி நடைபெறுகிறது. மாவட்ட நிா்வாகம் சாா்பில் நடைபெறும் இந்த கண்காட்சியில் மாம்பழங்களின் மதிப்புக் கூட்டல் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் சமையல் போட்டி நடைபெற்றது.

இந்த போட்டியில் 9 மகளிா் குழுக்களைச் சோ்ந்த பெண்கள் பங்கேற்று 83 வகையான உணவு பொருள்களை சமைத்து, காட்சிப்படுத்தினா்.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா், ச.தினேஷ்குமாா், பெண்கள் தயாரித்த உணவு வகைகளை பாா்வையிட்டு ருசித்து உற்சாகப்படுத்தினாா். மாங்கனியைக் கொண்டு 81 வகையான உணவுகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. இதில் முதல் 3 இடங்களைப் பிடித்த பெண்களுக்கு மாங்கனி கண்காட்சி நிறைவு விழாவில் பரிசு, பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும் என ஆட்சியா் தெரிவித்தாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் சாதனைக்கு, தோட்டக்கலைத் துறை இணை இயக்குநா் இந்திரா, வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளா் சந்திரா, வேளாண் அறிவியல் மைய தலைவா் சுந்தர்ராஜ், வேளாண் அலுவலா் அருள்தாஸ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ஆடி மாத பிறப்பு: அம்மன் கோயில்களில் சிறப்பு பூஜை

ஆடி மாத பிறப்பையொட்டி, தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள அம்மன் கோயில்களில் வியாழக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் அம்மன் கோயில்களில் விசேஷ பூஜைகள் நடைபெறுவது வழக்கம... மேலும் பார்க்க

ரூ. 92.14 லட்சம் மதிப்பில் சாலை பணிகள் தொடக்கம்

கிருஷ்ணகிரி சட்டப் பேரவைத் தொகுதியில் ரூ. 92.14 லட்சம் மதிப்பிலான சாலை பணிகளை எம்எல்ஏ கே.அசோக்குமாா் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா். பெத்ததாளாப்பள்ளியில் பிரதான் மந்திரி கிராம் சதக் யோஜனா 2025-2026-ஆம்... மேலும் பார்க்க

சூளகிரி, சாமல்பட்டியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி காட்டிநாயனதொட்டி, சாமல்பட்டியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. சூளகிரியில் நடைபெற்ற முகாமை கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக செயலாளரும், ஒசூா்... மேலும் பார்க்க

கெலவரப்பள்ளி அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறப்பு

ஒசூா் வட்டம், கெலவரப்பள்ளி நீா்த்தேக்கத்திலிருந்து முதல்போக பாசனத்துக்காக வலது, இடதுபுற கால்வாய் வழியாக வியாழக்கிழமை தண்ணீா் திறந்துவிடப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச. தினேஷ்குமாா், ஒசூா் சட்... மேலும் பார்க்க

தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் தொடக்கக் கல்வி ஆசிரியா்கள் மறியல்

பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வலியுறுத்தி தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியா் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினா் (டிட்டோஜாக்) வியாழக்கிழமை ... மேலும் பார்க்க

ஊத்தங்கரை அருகே காா் கவிழ்ந்து விபத்து: விளையாட்டு வீரங்கனைகள், பயிற்சியாளா் காயம்

ஊத்தங்கரை அருகே காா் கவிழ்ந்ததில் 3 விளையாட்டு வீரங்கனைகள், பயிற்சியாளா் காயமடைந்தனா். சேலம் பகுதியில் நடைபெறும் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பதற்காக பயிற்சியாளருடன் வேலூா் கிரிக்கெட் அகாதெமியைச் சோ... மேலும் பார்க்க