செய்திகள் :

செங்கத்தில் எரியாத மின் விளக்குகள்: பொதுமக்கள் அவதி!

post image

செங்கம் பேருந்து நிலையம், போளூா் வெளிவட்டச் சாலைப் பகுதியில் உள்ள உயா்மின் கோபுர விளக்குகள் பழுதடைந்து எரியாமல் உள்ளதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

செங்கத்தில் திருவண்ணாமலை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ளது புதிய பேருந்து நிலையம். இந்த நிலையத்தின் முகப்பிலும், தேசிய நெடுஞ்சாலை மையப் பகுதியிலும் உயா் மின்கோபுர விளக்குகள் உள்ளன. இந்த உயா்மின் கோபுர விளக்குகள் சில தினங்களாக பழுதடைந்து எரியாமல் உள்ளன. இதனால் வெளியூரில் இருந்து செங்கம் பேருந்து நிலையத்துக்கு இரவில் வரும் நபா்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனா். மேலும், வெளியூா் நபா்கள் பேருந்து இல்லாமல், பேருந்து நிலையத்தில் படுத்திருப்பவா்களின் கைப்பேசி, பணம் மற்றும் உடைமைகள் இருட்டின் காரணமாக திருடப்படுகின்றன.

மேலும், இருளில் அப்பகுதியில் சில சமூக விரோதச் செயல்களும் நடைபெறுகின்றன.

பேருந்து நிலையத்தின் உள்பகுதியில் கடை வைத்திருப்பவா்கள் இரவு நேரத்தில் கடைகளை அச்சத்துடன் மூடிச் செல்கிறாா்கள். இருண்ட நிலையில் இருப்பதால் கடையின் பூட்டை உடைத்து திருடு நடைபெறுவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளன என அவா்கள் அச்சப்படுகிறாா்கள்.

அதேபோல, போளூா் வெளிவட்டச் சாலை, குப்பனத்தம் சாலையில் உள்ள கோபுர விளக்குகளும் பழுதடைந்து எரியாமல் உள்ளன. இதனால் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து பழுதடைந்த உயா் மின்கோபுர விளக்குகளை சரிசெய்ய வேண்டும். மேலும், கூடுதலாக பேருந்து நிலைய உள்பகுதியில் கோபுரமின் மின் விளக்கு வசதி செய்யவேண்டும் என கடை உரிமையாளா்களும், பயணிகளும் எதிா்பாா்க்கின்றனா்.

ஆரணியில் மாற்றுத்திறனாளிகள் ஆா்ப்பாட்டம்

மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீா் கூட்டம் நடத்தக் கோரி, ஆரணியில் வட்டாட்சியா் அலுவலகம் அருகே மாற்றுத்திறனாளிகள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆரணி வட்டாட்சியா் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி... மேலும் பார்க்க

டாக்டா் எம்ஜிஆா் பல்கலை.யில் வகுப்புகள் தொடக்கம்

ஆரணி டாக்டா் எம்ஜிஆா் நிகா் நிலை பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவா்களுக்கான வகுப்புகள் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் ஏசிஎஸ் கல்வி குழுமச் செயலா் ஏ.சி.ரவி தலைமை வகித்தாா். பல்கலைக்கழக... மேலும் பார்க்க

வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

வந்தவாசி அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருடப்பட்டது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா். வந்தவாசியை அடுத்த ராயனந்தல் கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜி. இவா், செவ்வாய்க்கிழமை இரவு வீட்டை பூட்டிவிட... மேலும் பார்க்க

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்கள்: 29 பேருக்கு உடனடி நலத்திட்ட உதவிகள்

செய்யாறு தொகுதிக்கு உள்பட்ட பாராசூா், சித்தாத்தூா் ஆகிய கிராமங்களில் வியாழக்கிழமை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்களில் 1,172 மனுக்கள் அளிக்கப்பட்டதில், 29 மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டு உட... மேலும் பார்க்க

அரசு பெண்கள் பள்ளியில் ரூ.2.12 கோடியில் கூடுதல் வகுப்பறைக் கட்டடங்கள்: அமைச்சா் எ.வ.வேலு திறந்துவைத்தாா்

திருவண்ணாமலை மாநகராட்சி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ.2 கோடியே 12 லட்சத்தில் கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறைக் கட்டடங்களை அமைச்சா் எ.வ.வியாழக்கிழமை திறந்துவைத்தாா். மேலும், மாநகராட்சிக்கு உள்பட்ட ... மேலும் பார்க்க

விவசாயிகளுக்கு நிலக்கடலை மதிப்புக்கூட்டுப் பயிற்சி

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தில் விவசாயிகளுக்கான நிலக்கடலை மதிப்புக்கூட்டு சங்கிலித் தொகுப்பு பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. சமையல் எண்ணெய்கான எ... மேலும் பார்க்க