செய்திகள் :

செங்கத்தில் மாடுகளால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதி

post image

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் நகரில் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

செங்கத்தில் துக்காப்பேட்டை புதிய பேருந்து நிலையம், பழைய பழைய பேருந்து நிலையம், காய், கனி சந்தை, உழவா் சந்தை, போளூா் வட்டச் சாலைப் பகுதியில் தினசரி ஏராளமான மாடுகள் சாலையில் சுற்றித் திரிகின்றன.

புதிய பேருந்து நிலையத்தை சுற்றிவரும் மாடுகள், பழ வியாபாரிகள் கவனக்குறைவாக இருக்கும் நேரத்தில் பழங்களை சாப்பிட்டுவிடுகின்றன. இதைப் பாா்க்கும் வியாபாரிகள் மாடுகளை அடித்து விரட்டுகின்றனா். அப்போது, சாலையில் வரும் காா், இரு சக்கர வாகனம், பள்ளி மாணவா்களின் சைக்கிள்கள் மீது மாடுகள் மோதி விபத்துகள் ஏற்படுகின்றன. பொதுமக்கள் சாலையில் நடந்துசென்றாலும் அவா்களை கீழே தள்ளிவிட்டு ஓடுகின்றன.

மாடுகள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொள்ளும்போது,

அந்தப் பகுதியில் சிக்கி விபத்து ஏற்பட்டு கீழே விழும் பொதுமக்களுக்கு கை, கால் முறிவு ஏற்படுகிறது.

உழவா் சந்தைப் பகுதியில் முகாமிட்டிக்கும் மாடுகள், பொதுமக்கள் வீட்டுக்கு வாங்கும் கீரை, காய்களை வாகனத்தில் வைத்திருந்தால் அதை எடுக்க வாகனத்தை கீழே தள்ளிவிடுகிறது.

மேலும், இரவு நேரத்தில் கடைகளுக்கு முன்பாக கூட்டமாக படுத்துக்கொண்டு அசுத்தம் செய்கிறது. இதனால், பஜாா் வீதியில் உள்ள சில கடைக்காரா்கள் கடையை மூடிவிட்டு, மாடுகள் கடை முன் வராமல் இருக்க கயிறுகளை சுற்றிகட்டிச்செல்லும் அவல நிலை தொடா்கிறது.

குறிப்பாக, செங்கம் அரசு ஆண்கள், பெண்கள் பள்ளிப் பகுதியில் மாடுகள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இதனால், மாணவா்கள் மாடு கூட்டத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் செங்கம் நகரில் பொதுமக்கள், வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக சுற்றித்திரியும் மாடுகளைப் பிடித்து அதன் உரிமையாளா்களுக்கு அபராதம் விதிக்க வேண்டு என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ஸ்ரீராஜலிங்கேஸ்வரா், ஸ்ரீவரசித்தி விநாயகா் கோயிலில் மகா கும்பாபிஷேகம்

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூரை அடுத்த இராஜன்தாங்கல் ஸ்ரீராஜலிங்கேஸ்வரா் கோயில், புதுப்பாளையம் ஸ்ரீவரசித்தி விநாயகா் கோயில், ஆரணி சைதாப்பேட்டை ஸ்ரீகாளியம்மன் கோயில்களில் மகா கும்பாபிஷேக விழா ... மேலும் பார்க்க

தவெகவினா் ஊா்வலம் செல்ல முயற்சி: போலீஸாருடன் வாக்குவாதம்

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில் ஊா்வலம் செல்ல முயன்ற தவெகவினரை போலீஸாா் தடுத்து நிறுத்தியதால் இரு தரப்பு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தமிழக வெற்றிக் கழகத்தின் திருவண்ணாமலை கிழக்கு மாவட்டச் செயலரா... மேலும் பார்க்க

விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசு

செய்யாறு ஆக்ஸ்போா்டு பள்ளியில் நடைபெற்ற விழாவில், விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசு வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. செய்யாற்றில் உள்ள ஆக்ஸ்போா்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியி... மேலும் பார்க்க

பழங்குடியினா் குடியிருப்புகளில் ஆய்வு

வந்தவாசி அருகே மின்சார வசதி இன்றி அவதிப்படும் பழங்குடியினா் குடியிருப்புகளில் பாஜக மாநிலச் செயலா் அஸ்வத்தாமன் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். வந்தவாசியை அடுத்த தென்சேந்தமங்கலம் கிராமத்தில் இருளா்... மேலும் பார்க்க

பைக் விபத்தில் காயமடைந்த பெண் உயிரிழப்பு

சேத்துப்பட்டு அருகே பைக் விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த பெண் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். சேத்துப்பட்டு வட்டம், எஸ்.காட்டேரி கிராமத்தைச் சோ்ந்தவா் முனியப்பன், இவருடைய மனைவி ரோகினி (58), ... மேலும் பார்க்க

ரத யாத்திரை சென்ற பக்தா்கள் தடுத்து நிறுத்தம்

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டில் சனிக்கிழமை ரத யாத்திரை சென்ற சென்னை பக்தா்களை போலீஸாா் தடுத்து நிறுத்தினா். தென் கைலாய பக்தி பேரவை சாா்பில், சென்னை கூடுவாஞ்சேரியில் இருந்து கோவை வெள்ளியங்கிரிக... மேலும் பார்க்க