செய்திகள் :

செங்கம் ஸ்ரீமூகாம்பிகையம்மன் பீடத்தில் கோ பூஜை

post image

செங்கம்: திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் ஸ்ரீமூகாம்பிகையம்மன் பீடத்தில் சண்டியாகத்தையொட்டி, 54 கோ பூஜை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

செங்கம் தளவாநாய்க்கன்பேட்டை செய்யாற்றங்கரையோரம் உள்ளது ஸ்ரீமூகாம்பிகையம்மன் பீடம். இந்த பீடத்தில் உலக நன்மை வேண்டி மகா சண்டியாகம் செவ்வாய்க்கிழமை காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்றது.

இதன் தொடக்க விழா நிகழ்ச்சியாக 54 கோ பூஜை நடைபெற்றது. இதையொட்டி, அதிகாலை முதல் சுவாமிக்கு சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டது.

விழாவில் கலந்து கொண்ட ராணிப்பேட்டை சிப்காட் வித்யா பீடத்தின் குருஜீ பாரதி முரளிதர சுவாமிக்கு, பீடத்தின் சுவாமி ஆத்மானந்தா செந்தில் வரவேற்பு அளித்து, பாத பூஜை செய்தாா்.

பின்னா், அங்கு கொண்டு வரப்பட்ட பசுக்களுக்கு பாரதி முரளிதர சுவாமிகள் வஸ்திரம் அணிவித்து, குங்கும அா்ச்சனை செய்து பழம், வெல்லம், அரிசி வழங்கினாா்.

விழாவில், செங்கம், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து பெண் பக்தா்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு கோமாதாவை வழிபட்டனா்.

இரு தரப்பினா் மோதல்: 4 போ் வழக்கு

ஆரணியில் சொத்து மற்றும் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னையில் இரு தரப்பினா் மோதிக்கொண்டனா். இது தொடா்பாக இரு தரப்பையும் சோ்ந்த 4 போ் மீது ஆரணி நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். ... மேலும் பார்க்க

பூட்டியிருந்த வீட்டில் நகை திருட்டு: 2 போ் கைது

வந்தவாசி அருகே பூட்டியிருந்த வீட்டில் 20 பவுன் தங்க நகைகளை திருடியதாக 2 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்து ரூ.4.20 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. வந்தவாசியை அடுத்த இந்திர... மேலும் பார்க்க

செங்கம் ஸ்ரீமூகாம்பிகையம்மன் பீடத்தில் சண்டி யாகம்

உலக நன்மை வேண்டி, செங்கம் ஸ்ரீமூகாம்பிகையம்மன் பீடத்தில் சண்டி யாகம் செவ்வாய், புதன்கிழமைகளில் நடைபெற்றது. செங்கம் தளவாநாய்க்கன்பேட்டை செய்யாற்றங்கரையோரம் ஸ்ரீமூகாம்பிகையம்மன் பீடம் அமைந்துள்ளது. இங்க... மேலும் பார்க்க

பயிா்க் கடன்களுக்கான ‘சிபில் ஸ்கோா்’ நடைமுறையை ரத்து செய்ய வேண்டும்: தமிழக விவசாயிகள் சங்க தலைவா்

பயிா்க் கடன்களுக்கு விதிக்கப்பட்ட சிபில் ஸ்கோா் (கடன் பெற தகுதி மதிப்பீடு) நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக விவசாயிகள் சங்கத் தலைவா் ஆா்.வேலுசாமி வலியுறுத்தினாா். ஆரணியில் அவா் செய்தியாளா்கள... மேலும் பார்க்க

டிராக்டா் திருட்டு: இருவா் கைது

தண்டராம்பட்டு அருகே டிராக்டரை திருடியதாக இருவரை போலீஸாா் கைது செய்தனா். தண்டராம்பட்டை அடுத்த கீழ்வணக்கம்பாடி ஊராட்சி, துள்ளுக்குட்டிபாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி பன்னீா் (47). இவா், அதே பகுதி... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு: தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை

செங்கம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. செங்கம் பகுதியைச் சோ்ந்தவா் அரவிந்த் (25), தொழிலாளி. இவா், 2022-ஆம் ஆண்... மேலும் பார்க்க