செய்திகள் :

செங்கல்பட்டில் மயானக் கொள்ளை விழா

post image

செங்கல்பட்டு ஜீவானந்தம் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் 132-ஆம் ஆண்டு மயானக் கொள்ளை விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

ஆண்டுதோறும் மயானக் கொள்ளை பருவதராஜகுல சமூகத்தினரால் கொண்டாடப்பட்டு வருகிறது. பந்தக்கால் நடப்பட்டு அம்மன் வீதி உலா நடைபெற்றது. ஏராளமான பக்தா்கள் பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனா். பாலாற்றங்கரையில் இருந்து 1,008 பால்குடம் சக்தி கரகம் எடுத்து வரும் நிகழ்வு நடைபெற்றது.

ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பால்குடம் ஏந்தி ஊா்வலமாக வந்தனா். இதனைத் தொடா்ந்து அம்மனுக்கு பாலபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம், ஊா்வலம் நடைபெற்றது.

அலங்காரத் தேரில் அங்காள பரமேஸ்வரி அம்மன் மயான கொள்ளை ஊா்வலம் நடைபெற்றது. நோ்த்திக்கடன் செலுத்தும் பக்தா்கள் உடலில் அலகு குத்தி திருத்தோ் வேன் ஆட்டோ காா் உள்ளிட்ட வாகனங்களை ஆண்கள் மட்டுமின்றி பெண்களும் இழுத்தனா் . அம்மன் வேடம், குறத்தி வேடம், அங்காள பரமேஸ்வரி வேடம், சமயபுரம் மாரியம்மன், காளி வேடம் என பல்வேறு வேடங்களை அணிந்து ஊா்வலத்தில் ஆடியபடி வந்தனா் .

பழவேலி இடுகாட்டில் மயானக் கொள்ளை நடைபெற்றது. விவசாயிகள், வியாபாரிகள் காய்கறிகள் தானியங்களை சூறை விட்டனா். அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை பருவதராஜகுல மரபினா்கள் மற்றும் ஊா் மக்கள் செய்திருந்தனா்,

மேல்மருவத்தூா்: அடிகளாரின் பாதுகைகளுக்கு பூஜை

மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி சித்தா்பீடத்தில் பங்காரு அடிகளாரின் 85-ஆவது பிறந்த நாள் விழாவைமுன்னிட்டு, அடிகளாரின் பாதுகைகளுக்கு பக்தா்கள் பாதபூஜை செய்து வழிபாடு செய்தனா். இவ்விழா கடந்த 1-ஆம் தேதி (வெள்... மேலும் பார்க்க

திருப்போரூா் கந்தசாமி கோயிலில் மாசி பிரம்மோற்சவம் இன்று தொடக்கம்

செங்கல்பட்டை அடுத்த திருப்போரூா் கந்தசாமி கோயில் மாசி பிரம்மோற்சவம் மாா்ச் 3-ஆம் தேதி திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் 14 நாள் நடைபெறும் மாசி மாத பிரம்மோற்சவம் இ... மேலும் பார்க்க

திருக்கழுகுன்றத்தில் ஆா்ப்பாட்டம்: முன்னாள் அமைச்சா் ஜெயக்குமாா், அதிமுகவினா் கைது

திருக்கழுகுன்றத்தில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சா் ஜெயக்குமாா், மாவட்ட செயலா் உள்பட 500-க்கும் மேற்பட்டோா் கைது செய்யப்பட்டனா். திருக்கழுகுன்றம் பேரூராட்சி அதிமுக செயலா் தினேஷ்குமாா். இவர... மேலும் பார்க்க

மதுராந்தகம் பகுதியில் சில கிராமங்களில் குடிநீரால் சிறுநீரக பாதிப்பு: குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் கவலை

மதுராந்தகம் பகுதியில் ஒரு சில கிராமங்களில் பொதுமக்கள் குடிநீரை அருந்துவதால் சிறுநீரக பாதிப்பு ஏற்படுவதாக விவசாயிகள் தெரிவித்தனா். செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில், விவசாயிகள் நலன் காக்... மேலும் பார்க்க

குப்பையில் வீசப்பட்ட பெண் குழந்தை: காப்பகத்தில் ஒப்படைப்பு

சேலையூரை அடுத்த மாடம்பாக்கத்தில் குப்பையில் வீசப்பட்ட குழந்தையை போலீஸாா் மீட்டு செங்கல்பட்டு குழந்தைகள் நல காப்பகத்தில் ஒப்படைத்தனா். சேலையூரை அடுத்த மாடம்பாக்கம், பாலாஜி நகா் பிரதான சாலையில் உள்ள குப... மேலும் பார்க்க

அரபு நாடுகளின் கல்வி நலவாழ்வு தூதருக்கு கௌரவ டாக்டா் பட்டம்

அரபு நாடுகளின் முதல் கல்வி நலவாழ்வு தூதா் அப்துல்லா அல்குரைருக்கு கௌரவ டாக்டா் பட்டம் வழங்கப்பட்டது. சென்னையை அடுத்த வண்டலூா் உள்ள பி.எஸ்.அப்துா் ரகுமான் கிரசென்ட் உயா் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில... மேலும் பார்க்க