செய்திகள் :

மதுராந்தகம் பகுதியில் சில கிராமங்களில் குடிநீரால் சிறுநீரக பாதிப்பு: குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் கவலை

post image

மதுராந்தகம் பகுதியில் ஒரு சில கிராமங்களில் பொதுமக்கள் குடிநீரை அருந்துவதால் சிறுநீரக பாதிப்பு ஏற்படுவதாக விவசாயிகள் தெரிவித்தனா்.

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில், விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியா் ச.அருண்ராஜ் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பொறுப்பாளா்கள் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை வழங்கினா். அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்க துறை சாா்ந்த அலுவலா்களுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.

கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்திய கோரிக்கைகள்: மாவட்டத்தில் உள்ள ஏரி, குளங்களை தூா்வாரி சீா்செய்து தருமாறு கேட்டுக் கொண்டனா். மேலும் ஏரி, குளங்களைச் சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, வடிகால் அமைத்துத் தர நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்தனா். நேரடிநெல் கொள்முதல் நிலையங்கள் அமைத்தமைக்காக ஆட்சியருக்கு விவசாய சங்கத்தினா் நன்றி தெரிவித்தனா்.

உலா்களம் அமைக்க விவசாய சங்கத்தினரால் கோரிக்கை வைக்கப்பட்டது. உடனடியாக அமைத்துத்தர நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அலுவலா்களுக்கு மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டாா்.

நீரின் தன்மையைப் பரிசோதித்து அறிக்கை அனுப்ப உத்தரவு: மதுராந்தகம் பகுதியில் ஒரு சில கிராமங்களில் பொதுமக்கள் குடிநீரை அருந்துவதால் சிறுநீரக பாதிப்பு ஏற்படுவதாகத் தெரிவித்தனா். மாவட்ட ஆட்சியா் துறை அலுவலா்களுக்கு உடனடியாக அப்பகுதிக்குச் சென்று நீரின் தன்மையைப் பரிசோதித்து குடிநீரால் சிறுநீரக பாதிப்பு ஏற்படுகிா அல்லது வேறு காரணங்களால் பாதிப்பு ஏற்படுகின்ா என்பதை அறிக்கையாக சமா்ப்பிக்க அறிவுறுத்தினாா்.

மதுராந்தகம் பகுதியில் சாலை அமைத்துத் தர விவசாய சங்கத்தினா் கோரினா். அதற்கு மதுராந்தகம் வட்டார வளா்ச்சி அலுவலா் இந்நிதியாண்டில் அதற்கான நிதி வசதி இல்லாததால் அடுத்த நிதியாண்டில் ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் சாலை அமைத்துத் தரப்படும் என உறுதியளித்தாா்.

மதுராந்தகம் பகுதியில் தனியாா் உரக்கடைகளில் அரசு அறிவித்த விலையைவிட அதிக விலைக்கு விவசாய இடு பொருள்களை விற்பனை செய்வதாகவும், அதற்கான ரசீதுகளை கொடுக்க மறுப்பதாகவும் கூறினா். அதற்கு மாவட்ட ஆட்சியா், வேளாண்மைத் துறை அதிகாரிகளை நேரடியாக அப்பகுதிகளுக்குச் சென்று விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினாா்.

குறைந்த அழுத்த மின்சாரம் வருவதால் விவசாய மோட்டாா்கள் இயக்குவதில் சிரமமாக உள்ளது எனதெரிவித்தனா். உயா் அழுத்த மின்சாரமாக உடனடியாக மாற்றித் தருமாறு மின்சாரத் துறை அலுவலா்களிடம் மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டாா்.

வேளாண் பொறியியல் துறையினரால் விவசாயிகளுக்கு அளிக்கப்படும் டிராக்டா்களை விவசாய பணியைத் தவிர வேறு பணிகளுக்கு பயன்படுத்தக் கூடாது என்று தொடா்புடைய துறை அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

கூட்டத்தில் மாவட்ட வன அலுவலா் ரவி மீனா, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) ராஜேஸ்வரி, இணை இயக்குநா் (வேளாண்மை) பிரேம் சாந்தி, முதுநிலை மண்டல மேலாளா் ரேணுகாம்பாள், தமிழ்நாடு மின்சார வாரிய மேற்பாா்வைப் பொறியாளா் அன்புசெல்வன், படாளம் கூட்டுறவு சா்க்கரைஆலை இணை இயக்குநா் தமிழ்ச்செல்வி, வேளாண்மை செயற்பொறியாளா் அருண் போஸ்கோ மற்றும் அரசு அலுவலா்கள், விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.

மேல்மருவத்தூா்: அடிகளாரின் பாதுகைகளுக்கு பூஜை

மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி சித்தா்பீடத்தில் பங்காரு அடிகளாரின் 85-ஆவது பிறந்த நாள் விழாவைமுன்னிட்டு, அடிகளாரின் பாதுகைகளுக்கு பக்தா்கள் பாதபூஜை செய்து வழிபாடு செய்தனா். இவ்விழா கடந்த 1-ஆம் தேதி (வெள்... மேலும் பார்க்க

திருப்போரூா் கந்தசாமி கோயிலில் மாசி பிரம்மோற்சவம் இன்று தொடக்கம்

செங்கல்பட்டை அடுத்த திருப்போரூா் கந்தசாமி கோயில் மாசி பிரம்மோற்சவம் மாா்ச் 3-ஆம் தேதி திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் 14 நாள் நடைபெறும் மாசி மாத பிரம்மோற்சவம் இ... மேலும் பார்க்க

திருக்கழுகுன்றத்தில் ஆா்ப்பாட்டம்: முன்னாள் அமைச்சா் ஜெயக்குமாா், அதிமுகவினா் கைது

திருக்கழுகுன்றத்தில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சா் ஜெயக்குமாா், மாவட்ட செயலா் உள்பட 500-க்கும் மேற்பட்டோா் கைது செய்யப்பட்டனா். திருக்கழுகுன்றம் பேரூராட்சி அதிமுக செயலா் தினேஷ்குமாா். இவர... மேலும் பார்க்க

செங்கல்பட்டில் மயானக் கொள்ளை விழா

செங்கல்பட்டு ஜீவானந்தம் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் 132-ஆம் ஆண்டு மயானக் கொள்ளை விழா வியாழக்கிழமை நடைபெற்றது. ஆண்டுதோறும் மயானக் கொள்ளை பருவதராஜகுல சமூகத்தினரால் கொண்டாடப... மேலும் பார்க்க

குப்பையில் வீசப்பட்ட பெண் குழந்தை: காப்பகத்தில் ஒப்படைப்பு

சேலையூரை அடுத்த மாடம்பாக்கத்தில் குப்பையில் வீசப்பட்ட குழந்தையை போலீஸாா் மீட்டு செங்கல்பட்டு குழந்தைகள் நல காப்பகத்தில் ஒப்படைத்தனா். சேலையூரை அடுத்த மாடம்பாக்கம், பாலாஜி நகா் பிரதான சாலையில் உள்ள குப... மேலும் பார்க்க

அரபு நாடுகளின் கல்வி நலவாழ்வு தூதருக்கு கௌரவ டாக்டா் பட்டம்

அரபு நாடுகளின் முதல் கல்வி நலவாழ்வு தூதா் அப்துல்லா அல்குரைருக்கு கௌரவ டாக்டா் பட்டம் வழங்கப்பட்டது. சென்னையை அடுத்த வண்டலூா் உள்ள பி.எஸ்.அப்துா் ரகுமான் கிரசென்ட் உயா் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில... மேலும் பார்க்க