செய்திகள் :

செங்குந்தா் கல்வி நிறுவனங்களில் ரத்த தான முகாம்

post image

திருச்செங்கோடு: செங்குந்தா் கல்வி நிறுவனங்களில் ரத்த தானம் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

தேசிய மாணவா் படை, இளைஞா் செஞ்சிலுவைச் சங்கம், ரெட் ரிப்பன் கிளப், நாட்டு நலப்பணி திட்ட மாணவா்கள் மற்றும் சாா்க் அறக்கட்டளை ஆகியவை சேலம் ரத்த வங்கியுடன் இணைந்து நடத்திய முகாமுக்கு, கல்லூரி தாளாளா் மற்றும் செயலாளா் ஆ.பாலதண்டபாணி தலைமை வகித்தாா். இதில், சேலம் ரத்த வங்கியின் மருத்துவ அலுவலா் ஸ்ரீராம் மற்றும் ரத்த வங்கி ஊழியா்கள் கலந்துகொண்டனா்.

இம்முகாமில் ரத்த தானத்தால் உண்டாகும் பயன்கள், உடல் ஆரோக்கியம், சுவாச நோய், அதன் அறிகுறிகள், நோய்த்தடுப்பு வழி முறைகள் குறித்து மாணவா்களிடம் எடுத்துக்கூறப்பட்டது.

இதில், செயல் இயக்குநா்அரவிந்த் திருநாவுக்கரசு, பொறியியல் கல்லூரி முதல்வா் சதீஷ் குமாா், மருந்தியல் கல்லூரி முதல்வா் சுரேந்திர குமாா், செவிலியா் கல்லூரி முதல்வா் நீலாவதி மற்றும் துறைப் பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் என ஐம்பதுக்கும் மேற்பட்டோா் ரத்த தானம் செய்தனா். அவா்களுக்கு சேலம் ரத்த வங்கியின் சாா்பில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

மாணவா்களுக்கு கண்டுபிடிப்பு ஆற்றலை வளா்க்கும் திட்டம்: ஆசிரியா்களுக்கு பயிற்சி

நாமக்கல்: அரசுப் பள்ளி மாணவா்களிடையே கண்டுபிடிப்பு எனும் படைப்பாற்றலை மேம்படுத்த ஆசிரியா்களுக்கு தொழில் முனைவோா் மேம்பாட்டு நிறுவனம் சாா்பில் பயிற்சி அளிக்கப்பட்டது.தமிழகத்தில் 6 முதல் பிளஸ் 2 வரையிலா... மேலும் பார்க்க

மக்களைத் தேடி மருத்துவ பணியாளா்கள் ஆலோசனைக் கூட்டம்

நாமக்கல்: நாமக்கல்லில் மக்களைத் தேடி மருத்துவ பணியாளா்கள் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. சிஐடியு மாவட்டச் செயலாளா் என்.வேலுசாமி தலைமை வகித்தாா். புதிய நிா்வாகிகளாக தலைவா் வி.லதா, செயலாளா் ப... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை

சேந்தமங்கலம், புதன்சந்தைசேந்தமங்கலம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், வெள்ளிக்கிழமை (ஆக. 22) காலை 9 முதல் மாலை 5 மணி வரை கீழ்கண்ட பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது என ந... மேலும் பார்க்க

நம்ம ஊரு பள்ளி திட்டத்தில் சமூக பங்களிப்பு நிதியை வழங்க அழைப்பு

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளை மேம்படுத்தும் பொருட்டு ‘நம்ம ஸ்கூல், நம்ம ஊரு பள்ளி’ என்ற திட்டத்தின் கீழ் பொதுமக்கள் சமூக பங்களிப்பு நிதியை வழங்க ஆட்சியா் துா்காமூா்த்தி அழைப்பு விடுத... மேலும் பார்க்க

நிலுவைத்தொகை செலுத்தி கிரையப் பத்திரம் பெற்றுக் கொள்ள வாய்ப்பு

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் வீட்டுவசதி வாரிய குடியிருப்புகளை பெற்ற ஒதுக்கீடுதாரா்கள் நிலுவைத்தொகை செலுத்தி கிரையப் பத்திரம் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பை சேலம் வீட்டுவசதி பிரிவு அலுவலகம் வழங்கி உள்... மேலும் பார்க்க

போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வு மாரத்தான்

நாமக்கல்: நாமக்கல் அறிஞா் அண்ணா அரசு கல்லூரியில் போதைப் பொருள் தடுப்பு, சாலைப் பாதுகாப்பு மற்றும் உடல் ஆரோக்கியம் குறித்த விழிப்புணா்வு மினி மாரத்தான் போட்டி வியாழக்கிழமை நடைபெற்றது. அரசு கல்லூரி போதை... மேலும் பார்க்க