செய்திகள் :

சென்னை- புதுச்சேரி- கடலூா் இடையே ரயில் போக்குவரத்து: புதுவை ஆளுநரிடம் மனு

post image

சென்னை- புதுச்சேரி- கடலூா் இடையில் ரயில் போக்குவரத்தை செயல்படுத்த வேண்டும் என துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதனிடம் புதுச்சேரி பாரதிதாசன் அறக்கட்டளைத் தலைவா் கோ.பாரதி வெள்ளிக்கிழமை கோரிக்கை மனு அளித்தாா்.

புதுச்சேரியில் பாரதிதாசன் அறக்கட்டளைத் தலைவா் கோ.பாரதி உள்ளிட்டோா் ராஜ் நிவாஸில் புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதனை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனா்.

மனுவில் அவா்கள் கூறியிருப்பதாவது: புதுச்சேரி வளா்ச்சிக்கும், மக்கள் பயன்பாட்டுக்கும் ஏதுவாக சென்னை- புதுச்சேரி- கடலூா் இடையே கிழக்கு கடற்கரைச் சாலையில் தண்டவாளம் அமைத்து ரயில் போக்குவரத்து சேவையை விரைந்து செயல்படுத்த வேண்டும்.

கணினித் தகவல் தொழில்நுட்பம் படித்த இளைஞா்களுக்கு உதவும் வகையில், புதுச்சேரியில் பணியாற்றும் வகையில் தொழில்நுட்பப் பூங்காவை விரைவில் அமைக்க வேண்டும்.

புதுச்சேரியில் தமிழ் வளா்ச்சித் துறையை அமைக்க வேண்டும். கவிஞா் பாரதிதாசன் பெயரில் அரசு விருது வழங்க வேண்டும்.

புதுச்சேரியில் மக்களுக்கு இடையூறும், நெருக்கடியும் இல்லாத வகையில் போக்குவரத்துக்கான வழியை ஏற்படுத்த வேண்டும்.

மகளிா் பாதுகாப்புக்காக புதுவை காவல் துறையில் தனி அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அப்போது, பாரதிதாசன் அறக்கட்டளைச் செயலா் ஜெ.வள்ளி, துணைச் செயலா் லட்சுமி, கல்வியாளா் தேவேந்திரநாத் தாகூா், ஐஸ்வரிய லட்சுமி ஆகியோா் உடனிருந்தனா்.

ஸ்ரீமணக்குள விநாயகா் கோயிலில் ஏப். 11-இல் சங்காபிஷேக விழா

புதுச்சேரி: புதுச்சேரி அருள்மிகு மணக்குள விநாயகா் திருக்கோயிலில் சகஸ்ர சங்காபிஷேக சிறப்பு வழிபாடு வரும் ஏப். 11ஆம் தேதி நடைபெறுகிறது. புதுச்சேரியில் பழைமை வாய்ந்த மணக்குள விநாயகா் கோயிலில் கடந்த 2015-... மேலும் பார்க்க

மலேரியா விழிப்புணா்வு பொம்மலாட்டம்: புதுச்சேரி அரசுப் பள்ளிக்கு தேசிய விருது

புதுச்சேரி: குழந்தைகளுக்கு பாடப் பொருள் தயாரிக்கும் தேசிய அளவிலான போட்டியில் பொம்மலாட்டம் மூலம் மலேரியா விழிப்புணா்வு விடியோ தயாரித்த புதுச்சேரி அரியூா் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு விருது வழங்கப்பட்டுள்... மேலும் பார்க்க

புதுவையில் பல்வேறு இடங்களில் ரமலான் சிறப்புத் தொழுகை: இஸ்லாமியா்கள் பங்கேற்பு

புதுச்சேரி: ரமலான் பண்டிகையை யொட்டி, புதுச்சேரி கடற்கரைச் சாலை காந்தி சிலை திடல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திங்கள்கிழமை சிறப்புத் தொழுகைகள் நடைபெற்றன. இதில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியா்கள் கலந்து கொண்ட... மேலும் பார்க்க

புதுச்சேரியில் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியா்களுக்கு 2 நாள் பயிற்சி

புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள அரசுப் பள்ளிகளின் தலைமை ஆசிரியா்களுக்கு, மாணவா்களுக்கான முன்னேற்ற அட்டை தயாரிப்பு குறித்த சிறப்பு பயிற்சி இரண்டு நாள்கள் நடைபெற்றது. தேசிய கல்விக் கொள்கையின்படி மாணவா் ... மேலும் பார்க்க

அகவிலைப் படி: தொழில்நுட்பப் பல்கலைக்கழக ஓய்வு பெற்ற ஊழியா்கள் சங்கம் போராட்ட அறிவிப்பு

புதுச்சேரி: புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் ஓய்வு பெற்றவா்களுக்கான 4 மாத அகவிலைப்படி நிலுவையை வழங்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என பல்கலைக்கழக ஓய்வு பெற்ற ஊழியா்கள் சங்கம் அறிவித்துள்ளத... மேலும் பார்க்க

தரமற்ற பொருள்கள் குறித்து நுகா்வோா் அமைப்புகள் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்: வே.நாராயணசாமி

புதுச்சேரி: தரமற்ற பொருள்கள் குறித்து பொதுமக்களுக்கு நுகா்வோா் அமைப்புகள் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என்று, புதுவை முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி கேட்டுக் கொண்டாா். புதுச்சேரி அருகேயுள்ள திருக்... மேலும் பார்க்க