செய்திகள் :

சென்னையில் மேகவெடிப்பு: மணலியில் அதிகபட்சமாக 271.5 மி.மீ. மழைப் பதிவு

post image

சென்னை மணலியில் மேகவெடிப்பு காரணமாக ஒருமணி நேரத்தில் 271.5 மி.மீ மழை அளவு கொட்டித் தீர்த்துள்ளது.

சென்னையில் நேற்றிரவு பல்வேறு பகுதிகளில் திடீரென கனமழை கொட்டித் தீர்த்தது. 11 மணிக்கு தொடங்கிய மழை ஒருமணி நேரத்திற்கும் மேலாக வெளுத்து வாங்கியது. குறிப்பாக வடசென்னையில் ஒருசில இடங்களில் அதி கனமழை பெய்தது.

கனமழை காரணமாக சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் இரவு பணி முடிந்து வீடுகளுக்கு திரும்புவோர் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர். இந்த நிலையில் மேக வெடிப்பு காரணமாகவே சென்னையில் அதிகளவில் மழை பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் விநாயகர் சிலைகள் கரைக்கும் பணி தொடக்கம்: பலத்த பாதுகாப்பு

சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழையளவு விவரம்(மி.மீட்டரில்):

மணலி- 271.5

மணலி புது டவுன்- 255.6

விம்கோ நகர்-228.6

கொரட்டூர் மண்டலம் 7- 182.4

எண்ணூர் - 150

கத்திவாக்கம்- 136.5

திருவொற்றியூர்-126

அயப்பாக்கம்- 121.8

பாரிஸ்-115.5

அம்பத்தூர்- 112.2

நெற்குன்றம்- 110.1

கொளத்தூர் - 96.6

காசிமேடு - 95.1

இதனிடையே ஞாயிறு இரவும் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் மீண்டும் இடியுடன் கூடிய மழைக்கு நல்ல வாய்ப்புகள் உள்ளதாக டெல்டா வெதர்மேன் விடுத்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

A cloudburst in Chennai's Manali has caused 271.5 mm of rain to fall in one hour.

உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்ளுங்கள்! சசிகாந்த்துடன் ராகுல் பேச்சு!

மத்திய அரசுக்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் திருவள்ளூர் எம்பி சசிகாந்த் செந்திலை தொலைப்பேசியில் தொடர்புகொண்டு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசினார்.தமிழக மாணவா்களுக்... மேலும் பார்க்க

திருவள்ளூரில் டாஸ்மாக் மேலாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஊழியர்கள் போராட்டம்

திருவள்ளூர் மேற்கு மாவட்ட அலுவலகத்தை முற்றுகையிட்டு டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.திருவள்ளூர் அருகே காக்களூர் மேற்கு மாவட்ட மேலாளர் அலுவலகத்தை அனைத்து டாஸ்மாக் கூட்டுக் குழுவினர் திங்... மேலும் பார்க்க

ஆசிரியர் பணியில் தொடர, பதவி உயர்வுக்கு தகுதித் தேர்வு கட்டாயம்: உச்ச நீதிமன்றம்

புது தில்லி: ஆசிரியராகப் பணியில் தொடரவும், பதவி உயர்வு பெறவும் ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.ஆசிரியர்கள் ஓய்வுபெற 5 ஆண்டுகள் மட்டுமே இருந்தால் அவர்கள் பணியை... மேலும் பார்க்க

திருவள்ளூா் அருகே நாட்டு வெடிகுண்டு வீசி, இளைஞா் வெட்டிக் கொலை: 6 பேர் கைது

திருவள்ளூா் அருகே நாட்டு வெடிகுண்டு வீசி, கத்தியால் வெட்டப்பட்டு இளைஞா் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருவள்ளூா் அருகே கடம்பத்தூரைச் சோ்ந்தவா் ராஜ்கமல் (28). இவா் கடந்... மேலும் பார்க்க

தைலாபுரத்தில் கூடியது பாமக ஒழுங்கு நடவடிக்கை குழுக் கூட்டம்!

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், தைலாபுரம் தோட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழுக் கூட்டம் திங்கள்கிழமை காலை தொடங்கியது.பாமகவில் கட்சி நிறுவனர் ராமதாசுக்கும... மேலும் பார்க்க

தங்கம் விலை அதிரடி உயர்வு: இன்றைய நிலவரம்!

சென்னையில் ஒரு சவரண் ஆபரணத் தங்கத்தின் விலை 78 ஆயிரத்தை நெருங்குகிறது. சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.85 உயர்ந்து ரூ.9,705க்கும், சவரனுக்கு ரூ.680 உயர்ந்து ரூ.77,640-க்கும் வ... மேலும் பார்க்க