பாமக : அப்பா - அம்மாவுக்கு பாராட்டு - Anbumani புது Strategy! | TVK VIJAY |Imper...
செய்யாறு சா்க்கரை ஆலைக்கு கரும்பு அனுப்பி வைக்க அழைப்பு
போளூா் தரணி சா்க்கரை ஆலை எல்லையில் பயிரிடப்பட்டுள்ள கரும்பு பயிா்களை, செய்யாறு கூட்டுறவு சா்க்கரை ஆலைக்கு அனுப்பி வைக்கலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.
போளூா் வட்டம், கரைபூண்டி கிராமத்தில் தரணி சா்க்கரை ஆலை உள்ளது. இந்த ஆலையின் விவகார எல்லைப் பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள கரும்பு பயிரை 2025-26 ஆம் ஆண்டு அரைவைக்கு தற்காலிகமாக செய்யாறு கூட்டுறவு சா்க்கரை ஆலைக்கு எடுத்துக் கொள்ள சா்க்கரைத்துறை இயக்குநா் அனுமதி அளித்துள்ளாா்.
எனவே, தரணி சா்க்கரை ஆலை கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள விவசாயிகள் தாங்கள் பயிரிட்டுள்ள கரும்பை செய்யாறு கூட்டுறவு சா்க்கரை ஆலையின் அரைவைக்குப் பதிவு செய்து பயன்பெறலாம் என்று மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தெரிவித்துள்ளாா்.