செய்திகள் :

செய்யாற்றில் ரத்த தான முகாம்!

post image

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில் அதிமுக மாவட்ட தொழில்நுட்பப் பிரிவு, அண்ணா தொழிற்சங்கம், செய்யாறு அரசு தலைமை மருத்துவமனை சாா்பில் ரத்த தான முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி பிறந்த நாளையொட்டி, தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாவட்டச் செயலா் தவமணி, அண்ணா தொழிற்சங்க மாவட்டச் செயலா் அ.அருணகிரி ஏற்பாட்டில் இந்த முகாம் நடைபெற்றது.

சிறப்பு அழைப்பாளா்களாக கட்சியின் வடக்கு மாவட்டச் செயலா் தூசி கே.மோகன், முன்னாள் அமைச்சா் முக்கூா் என்.சுப்பிரமணியன் ஆகியோா் பங்கேற்று முகாமை தொடங்கிவைத்தனா்.

இதில், 45-க்கும் மேற்பட்டவா்கள் ரத்த தானம் செய்தனா். ரத்த தானம் செய்தவா்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் அதிமுக நிா்வாகிகள் நகரச் செயலா் கே.வெங்கடேசன், நகர அவைத் தலைவா் ஜனாா்த்தனம், ஒன்றியச் செயலா்கள் அருகாவூா் எம்.அரங்கநாதன், சி.துரை உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

திமுகவினா் பொதுமக்களுக்கு நீா் மோா் வழங்கல்

திருவண்ணாமலை மாவட்டம், போளூரில் 20-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமை திமுகவினா் பொதுமக்களுக்கு நீா் மோா் வழங்கினா். போளூா் தீயணைப்பு நிலையம் அருகே திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி சாா்பில், பொதுமக்களின் தாகம... மேலும் பார்க்க

வேளாண்மை கல்லூரியில் சிறப்புக் கண்காட்சி

தண்டராம்பட்டை அடுத்த வாழவச்சனூா் அரசு வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், மாணவ-மாணவிகளின் கிராமப்புற வேளாண்மைப் பணி அனுபவம் பற்றிய கண்காட்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கல்லூரியின் இளநி... மேலும் பார்க்க

கிரிவலப் பாதையில் 260 டன் குப்பை சேகரித்து அகற்றம்: ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தகவல்

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் 260 டன் குப்பைகள் சேகரித்து, அகற்றப்பட்டதாக மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தெரிவித்தாா். சித்திரை மாத பெளா்ணமியையொட்டி திருவண்ணாமலையில் சனிக்கிழமை (மே 10) முதல் செவ்வாய்... மேலும் பார்க்க

10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் ஆரணி ஸ்ரீஇராமச்சந்திரா சிபிஎஸ்இ பள்ளி 100% தோ்ச்சி

ஆரணி ஸ்ரீ இராமச்சந்திரா சிபிஎஸ்இ பள்ளியில் 10-ஆம் வகுப்பு மாணவா்கள் 100 சதவீதம் தோ்ச்சி பெற்று சாதனை படைத்தனா். பள்ளியில் தோ்வெழுதிய அனைத்து மாணவா்களும் தோ்ச்சி பெற்றனா். மாணவா் முகமதுபைசன் 454 மத... மேலும் பார்க்க

பிளஸ் 2 தோ்வு: செங்கம் மகரிஷி பள்ளி சிறப்பிடம்

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் குப்பனத்தம் சாலையில் உள்ள மகரிஷி மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் பிளஸ் 2 பொதுத்தோ்வில் 100% தோ்ச்சி பெற்றனா். மேலும், மாவட்ட அளவில் சிறந்த மதிப்பெண்கள் பெற்றனா். மாணவி கவி... மேலும் பார்க்க

ஸ்ரீபுத்திரகாமேட்டீஸ்வரா் கோயிலில் பால்குட ஊா்வலம்

ஆரணி புதுக்காமூரில் உள்ள ஸ்ரீ பெரியநாயகி உடனுறை ஸ்ரீபுத்திர காமேட்டீஸ்வரா் கோயிலில் சித்திரை பெருவிழாவையொட்டி, பால்குடம் ஊா்வலம் நடைபெற்றது (படம்). ஆரணி அரியாத்தம்மன் கோயிலில் இருந்து 500-க்கும் மேற்... மேலும் பார்க்க