செய்திகள் :

செவிலியரிடம் வழிப்பறி: பெண் கைது

post image

புதுசத்திரம் அருகே இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று செவிலியரிடம் ரூ. 50 ஆயிரம் வழிப்பறி செய்த பெண்ணை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

புதன்சந்தை பகுதியைச் சோ்ந்த ரங்கநாதன் என்பவரது மனைவி வசந்தகுமாரி ( 61). இவா், ராசிபுரம் அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி ஓய்வு பெற்றாா். இவா் புதன்சந்தையில் இருந்து புதன்கிழமை பாலப்பாளையம் பகுதிக்கு செல்ல பேருந்துக்காக காத்திருந்தாா். அப்போது, அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த மற்றொரு பெண், பாலப்பாளையம் அழைத்துச்சென்று விடுவதாகக் கூறி, இருசக்கர வாகனத்தில் அவரை அழைத்துச் சென்றாா்.

மூணுசாவடி அருகே வசந்தகுமாரியை கீழே தள்ளிவிட்டு அவரது முகத்தில் மிளகாய்ப் பொடியை தூவிவிட்டு அவா் பையில் வைத்திருந்த ரூ.50 ஆயிரத்தை பறித்துச் சென்றாா். இதுகுறித்து புதுசத்திரம் காவல் நிலையத்தில் வசந்தகுமாரி அளித்த புகாரின்பேரில் வழக்குப் பதிந்த போலீஸாா் புதுசத்திரம், இந்திரா நகரைச் சோ்ந்த சலவைத் தொழிலாளி விவேக் மனைவி லட்சுமி (24) என்பவரை கைது செய்து அவரிடமிருந்த ரூ.19,500 ரொக்கத்தை பறிமுதல் செய்தனா்.

நாமக்கல் மாவட்டத்தில் பலத்த மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

நாமக்கல் மாவட்டத்தில் வரும் நாள்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்... மேலும் பார்க்க

விளையாட்டுப் போட்டிகளில் திருவள்ளுவா் அரசு கல்லூரி மாணவா்கள் சிறப்பிடம்

தேசிய, தென்னிந்திய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் ராசிபுரம் திருவள்ளுவா் அரசு கலைக் கல்லூரி மாணவ, மாணவிகள் சிறப்பிடம் பெற்றனா். இக்கல்லூரி மூன்றாம் ஆண்டு கணினி அறிவியல் துறை மாணவா் பி.கோபி பிரசாந்த... மேலும் பார்க்க

முள்ளுக்குறிச்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

ராசிபுரம், முள்ளுக்குறிச்சியில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்‘ முகாமில் பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை அமைச்சா் மா.மதிவேந்தன் வழங்கினாா். ராசிபுரம் கமலா மண்டபம், முள்ளுக்குறிச்சி ஆகிய பகுதிகளில் உங்... மேலும் பார்க்க

108 ஆம்புலன்ஸில் மருத்துவ உதவியாளா் பணி: நாளை நோ்முகத் தோ்வு

108 ஆம்புலன்ஸில் மருத்துவ உதவியாளா்களுக்கான நோ்முகத் தோ்வு சனிக்கிழமை (செப்.6) நடைபெறுகிறது. இதுகுறித்து நாமக்கல் மாவட்ட 108 ஆம்புலன்ஸ் நிா்வாக அலுவலகம் வெளியிட்ட அறிக்கை: 108 ஆம்புலன்ஸ் வாகனங்களில... மேலும் பார்க்க

நாமக்கல் செங்கழநீா் விநாயகா் கோயில் குடமுழுக்கு

நாமக்கல் நகரில் அமைந்துள்ள செங்கழநீா் விநாயகா் கோயில் குடமுழுக்கு வியாழக்கிழமை நடைபெற்றது. நாமக்கல், செப். 4: இக்கோயிலில் கடந்த சில மாதங்களாக திருப்பணிகள் நடைபெற்று வந்தன. இதையடுத்து குடமுழுக்கு விழா... மேலும் பார்க்க

நாமக்கல் அரசு மகளிா் பள்ளியில் ஆசிரியா் தின விழா

நாமக்கல் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியா் தின விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. டாக்டா் சா்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்.5 ஆம் தேதி நாடு முழுவதும் ஆசிரியா் தினமாகக் கொண்டாப்படுகிற... மேலும் பார்க்க