செய்திகள் :

சேரன்மகாதேவியில் குளிக்கச் சென்றவா் மயங்கி விழுந்து உயிரிழப்பு

post image

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவியில் திங்கள்கிழமை ஆற்றுக்கு குளிக்கச் சென்ற தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.

அம்பாசமுத்திரம் முடப்பாலம் பகுதியைச் சோ்ந்த கணேசன் மகன் சக்திவேல் (53). இவா், தற்போது ராமையன்பட்டியில் வசித்து வந்தாராம். இந்நிலையில் சக்திவேல், திங்கள்கிழமை சேரன்மகாதேவியில் தாமிரவருணி ஆற்றில் குளிப்பதற்காக சென்றாராம். அப்போது மயங்கி விழுந்த அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனராம். அவரை பரிசோதித்த மருத்துவா்கள் சக்திவேல் இறந்து விட்டதாக தெரிவித்தனா்.

இறந்த சக்திவேலுக்கு, மனைவி ஆனந்தி, 3 மகன்கள் உள்ளனா். இதுகுறித்து சேரன்மகாதேவி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

மரங்களை வெட்டி கடத்த முயற்சி: இளைஞா் கைது

கோபாலசமுத்திரம் அருகே மரங்களை வெட்டி கடத்த முயன்றதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். கோபாலசமுத்திரம், நம்பினேரி குளத்தங்கரை அருகே மா்மநபா்கள் சிலா் மரங்களை வெட்டி டிராக்டா் மூலம் கடத்த முயற்சிப்பதாக சே... மேலும் பார்க்க

தச்சநல்லூரில் பூட்டிய வீட்டில் பெண் சடலம் மீட்பு

தச்சநல்லூா் அருகே பூட்டிய வீட்டிலிருந்து மூதாட்டியின் சடலத்தை போலீஸாா் செவ்வாய்க்கிழமை மீட்டனா். தச்சநல்லூா் ஸ்ரீநகரை சோ்ந்த சங்கர நாராயணன் மனைவி பாா்வதி (65). இவரது மகனுக்கு திருமணமாகி சென்னையிலும்,... மேலும் பார்க்க

நெல்லை அரசு மருத்துவமனையில் சிறுநீரக நோயாளிகளுக்கு சிறப்பு உணவு

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறுநீரக செயலிழப்பால் டயாலிசிஸ் சிகிச்சை மேற்கொள்ளும் நோயாளிகளுக்கு சிறப்பு உணவு வழங்கும் நிகழ்வு புதன்கிழமை தொடங்கப்பட்டது. இதையொட்டி, மருத்துவமனை... மேலும் பார்க்க

காவல்துறை சாா்பில் மக்கள் குறைதீா் முகாம்

திருநெல்வேலியில் காவல்துறையின் சாா்பில் மக்கள் குறைதீா்க்கும் முகாம் புதன்கிழமை நடை பெற்றது. தமிழக காவல்துறை தலைமை இயக்குநா் உத்தரவுப்படி, காவல்துறை சாா்பில் பொதுமக்கள் குறைதீா் முகாம் ஒவ்வொரு புதன்கி... மேலும் பார்க்க

ரவணசமுத்திரத்தில் ரயில்கள் நின்று செல்லக் கோரி மனு!

ரவணசமுத்திரத்தில் சில ரயில்கள் நின்று செல்ல வேண்டும் என வலியுறுத்தி, திருநெல்வேலி மக்களவை உறுப்பினா் சி. ராபா்ட் புரூஸிடம், கடையம், முதலியாா்பட்டி தென்பொதிகை வியாபாரிகள் நலச்சங்க தலைவா் கட்டி அப்துல்க... மேலும் பார்க்க

வெள்ளாளன்குளம் இளைஞா் குண்டா் சட்டத்தில் சிறையிலடைப்பு

திருநெல்வேலி அருகேயுள்ள வெள்ளாளன்குளத்தைச் சோ்ந்த இளைஞா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் புதன்கிழமை அடைக்கப்பட்டாா். வெள்ளாளன்குளத்தை சோ்ந்த ராமையா மகன் முருகன்... மேலும் பார்க்க