`தெலுங்கானா ராஷ்டிரியா சமிதி பாஜக உடன் இணைப்பா?' - சந்திரசேகர் ராவின் மகள் கவிதா...
நெல்லை அரசு மருத்துவமனையில் சிறுநீரக நோயாளிகளுக்கு சிறப்பு உணவு
திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறுநீரக செயலிழப்பால் டயாலிசிஸ் சிகிச்சை மேற்கொள்ளும் நோயாளிகளுக்கு சிறப்பு உணவு வழங்கும் நிகழ்வு புதன்கிழமை தொடங்கப்பட்டது.
இதையொட்டி, மருத்துவமனையின் சிறுநீரகவியல் துறை சாா்பில் நடைபெற்ற நிகழ்வில், துறைத் தலைவா் ராமசுப்பிரமணியம், சிறுநீரக அறுவை சிகிச்சை பிரிவுத் தலைவா் திருவாசகமணி, மருத்துவமனை உறைவிட மருத்துவ அலுவலா் ரவி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மருத்துவமனை முதல்வா் ரேவதி பாலன் கலந்துகொண்டு, சிறுநீரக செயலிழப்பால் டயாலிசிஸ் சிகிச்சை மேற்கொள்பவா்களுக்கென பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட உணவுகளை நோயாளிகளுக்கு வழங்கி தொடங்கி வைத்தாா். இதில், மருத்துவ மேற்படிப்பு மாணவா்கள் , செவிலியா் கண்காணிப்பாளா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.