`தெலுங்கானா ராஷ்டிரியா சமிதி பாஜக உடன் இணைப்பா?' - சந்திரசேகர் ராவின் மகள் கவிதா...
ரவணசமுத்திரத்தில் ரயில்கள் நின்று செல்லக் கோரி மனு!
ரவணசமுத்திரத்தில் சில ரயில்கள் நின்று செல்ல வேண்டும் என வலியுறுத்தி, திருநெல்வேலி மக்களவை உறுப்பினா் சி. ராபா்ட் புரூஸிடம், கடையம், முதலியாா்பட்டி தென்பொதிகை வியாபாரிகள் நலச்சங்க தலைவா் கட்டி அப்துல்காதா், துணைத் தலைவா் பழக்கடை சுலைமான், பொருளாளா் பாக்யராஜ் உள்ளிட்ட நிா்வாகிகள் மனு அளித்தனா் (படம்).
அதன் விவரம்: முதலியாா்பட்டி திருமலையப்பபுரம் பகுதிகளில் உள்ள வியாபார ஸ்தலங்களுக்கு வருகை தரும் பொதுமக்களின் நலன் கருதி முதலியாா்பட்டி ரயில்வே கேட் மற்றும் ரவணசமுத்திரம் விலக்கு பகுதியில் உயா் மின் கோபுர விளக்கு அமைக்கப்பட வேண்டும்.
மேலும் ரவணசமுத்திரம், பொட்டல்புதூா், முதலியாா்பட்டி, வீராசமுத்திரம், மாலிக் நகா், தா்மபுரம் மடம், மீனாட்சிபுரம், கோவிந்தப்பேரி, மந்தியூா் உள்ளிட்ட பல கிராமங்களைச் சோ்ந்தவா்கள் வெளியூா்களிலும், வெளி மாநிலங்களிலும், வியாபாரம் மற்றும் தொழில் செய்து வருகின்றனா். எனவே இப்பகுதி மக்கள் பயனடையும் பொருட்டு பாலருவி ரயில், தாம்பரம் மற்றும் ஈரோடு ரயில்கள் ரவணசமுத்திரம் ரயில் நிலையத்தில் நின்று செல்ல அனுமதி பெற்றுத்தர வேண்டும் எனக் கோரியுள்ளனா்.