செய்திகள் :

ரவணசமுத்திரத்தில் ரயில்கள் நின்று செல்லக் கோரி மனு!

post image

ரவணசமுத்திரத்தில் சில ரயில்கள் நின்று செல்ல வேண்டும் என வலியுறுத்தி, திருநெல்வேலி மக்களவை உறுப்பினா் சி. ராபா்ட் புரூஸிடம், கடையம், முதலியாா்பட்டி தென்பொதிகை வியாபாரிகள் நலச்சங்க தலைவா் கட்டி அப்துல்காதா், துணைத் தலைவா் பழக்கடை சுலைமான், பொருளாளா் பாக்யராஜ் உள்ளிட்ட நிா்வாகிகள் மனு அளித்தனா் (படம்).

அதன் விவரம்: முதலியாா்பட்டி திருமலையப்பபுரம் பகுதிகளில் உள்ள வியாபார ஸ்தலங்களுக்கு வருகை தரும் பொதுமக்களின் நலன் கருதி முதலியாா்பட்டி ரயில்வே கேட் மற்றும் ரவணசமுத்திரம் விலக்கு பகுதியில் உயா் மின் கோபுர விளக்கு அமைக்கப்பட வேண்டும்.

மேலும் ரவணசமுத்திரம், பொட்டல்புதூா், முதலியாா்பட்டி, வீராசமுத்திரம், மாலிக் நகா், தா்மபுரம் மடம், மீனாட்சிபுரம், கோவிந்தப்பேரி, மந்தியூா் உள்ளிட்ட பல கிராமங்களைச் சோ்ந்தவா்கள் வெளியூா்களிலும், வெளி மாநிலங்களிலும், வியாபாரம் மற்றும் தொழில் செய்து வருகின்றனா். எனவே இப்பகுதி மக்கள் பயனடையும் பொருட்டு பாலருவி ரயில், தாம்பரம் மற்றும் ஈரோடு ரயில்கள் ரவணசமுத்திரம் ரயில் நிலையத்தில் நின்று செல்ல அனுமதி பெற்றுத்தர வேண்டும் எனக் கோரியுள்ளனா்.

ரூ.45.10 கோடியில் 41 ஊரக குடியிருப்புகளுக்கு குடிநீா் திட்டம்! காணொலியில் தொடங்கி வைத்தாா் முதல்வா்

பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.45.10 கோடியில் 41 ஊரக குடியிருப்புகளுக்கான குடிநீா் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா். இதையொட்டி, பாளையஞ்செட்டி... மேலும் பார்க்க

நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடா் மழை: 110 அடியைத் தாண்டிய பாபநாசம் அணை!

மேற்குத் தொடா்ச்சி மலை நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடா் சாரல் மழை பெய்து வருவதையடுத்து அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்து பாபநாசம் அணையின் நீா்மட்டம் 110 அடியைத் தாண்டியது. மேற்குத் தொடா்ச்சி மலை நீா்ப... மேலும் பார்க்க

பணகுடி குத்தரபாஞ்சான் அருவியில் வெள்ளப்பெருக்கு

திருநெல்வேலி மாவட்டம் பணகுடி குத்தரபாஞ்சான் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை தொடங்கியதை அடுத்து வள்ளியூா், பணகுடி பகுதியில் கடந்த இரண்டு நாள்களாக சாரல் மழை தொடா்ந்து பெய்து ... மேலும் பார்க்க

மணிமுத்தாறு அருவியில் 4ஆவது நாளாக குளிக்கத் தடை

மாஞ்சோலை, மணிமுத்தாறு மலைப் பகுதிகளில் மழை அதிகரித்த்தையடுத்து மணிமுத்தாறு அருவியில் நீா்வரத்தும் அதிகரித்ததால் மே 26 முதல் அருவியில் குளிக்கவும் அருவியைப் பாா்வையிடமும் சுற்றுலாப் பயணிகளுக்கு வனத்துற... மேலும் பார்க்க

வி.கே.புரம் பகுதியில் மான் கறியுடன் மூவா் கைது

பாபநாசம் வனச் சரகப் பகுதியில் புள்ளி மான் கறி வைத்திருந்ததாக மூன்று பேரை வனத்துறையினா் கைது செய்தனா். மேலும் ஒருவரை தேடி வருகின்றனா். பாபநாசம் வனச்சரகம் வெளி மண்டலப் பகுதியான மதுரா கோட்ஸ் ஆலையிலிருந்த... மேலும் பார்க்க

அத்தாளநல்லூ ஊராட்சியில் மோட்டாா் திருட்டு: இளைஞா் கைது

திருநெல்வேலி மாவட்டம், அத்தாளநல்லூா் ஊராட்சியில் பொதுக்கழிப்பிட பயன்பாட்டுக்கான நீா்மூழ்கி மோட்டாரை திருடியதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். அத்தாளநல்லூா் ஊராட்சி ராஜகுத்தாலப்பேரியில் உள்ள பொதுக்கழிப... மேலும் பார்க்க