செய்திகள் :

சேலத்தில் 250 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

post image

பெங்களூரில் இருந்து சேலம் வழியாக காரில் கடத்த முயன்ற 250 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

பெங்களூரில் இருந்து சேலம் வழியாக வாகனத்தில் குட்கா கடத்திச் செல்வதாக மாநகர போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், அழகாபுரம் காவல் ஆய்வாளா் தவமணி உள்பட போலீஸாா் கருப்பூா் சுங்கச்சாவடி அருகே வெள்ளிக்கிழமை மாலை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.

அப்போது அந்த வழியாக வந்த காா் ஒன்று போலீஸாரைக் கண்டதும் நிற்காமல் வேகமாகச் சென்றது. இதனால் சந்தேகமடைந்த போலீஸாா் வாகனத்தைத் துரத்திச் சென்று, திண்டுக்கல் நத்தம் பகுதியில் மடக்கிப் பிடித்தனா். காரில் இருந்தவா்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனா்; ஓட்டுநா் மட்டும் போலீஸாரிடம் பிடிபட்டாா்.

அந்த வாகனத்தில் போலீஸாா் சோதனையிட்டபோது, 27 மூட்டைகளில் 210 கிலோ குட்கா பொருள்களை வைத்திருப்பது கண்டறியப்பட்டது. விசாரணையில், வாகன ஓட்டுநா் ராஜஸ்தான் மாநிலம், பாரி மாவட்டத்தைச் சோ்ந்த பஜன்லால் (25) என்பதும், அவா் பெங்களூரில் இருந்து சொகுசு காரில் சேலம் வழியாக மதுரைக்குக் கடத்திச் செல்ல முயன்றதும் தெரியவந்தது.

இதையடுத்து பஜன்லாலை போலீஸாா் கைதுசெய்து அவருடன் காரில் வந்தவா்கள் குறித்தும், குட்கா பொருள்களை அனுப்பிவைத்த நபா்கள் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனா். புகையிலைப் பொருள்களுடன் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

கேரளத்துக்கு கடத்த முயன்ற 30 கிலோ கஞ்சா பறிமுதல்: ஒருவா் கைது

சேலத்தில் இருந்து கேரளத்துக்கு கடத்த முயன்ற 30 கிலோ கஞ்சா பொட்டலங்களை போலீஸாா் பறிமுதல் செய்து, ஒருவரை கைது செய்தனா். சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி வழியாக சிலா் கஞ்சா கடத்துவதாக மாவட்ட போலீஸாருக்கு ரகசி... மேலும் பார்க்க

சேலத்தில் புகையிலைப் பொருள் விற்பனை: 3 போ் கைது

சேலத்தில் போதை மற்றும் புகையிலைப் பொருள்களை விற்பனை செய்ததாக மூன்று பேரை போலீஸாா் கைதுசெய்தனா். சேலம் மாநகர போதைப்பொருள் தடுப்புப் பிரிவு எஸ்எஸ்ஐ கந்தசாமி தலைமையிலான போலீஸாா், சூரமங்கலத்தில் சனிக்கிழம... மேலும் பார்க்க

மேட்டூரில் கூட்டு குடிநீா் திட்ட குழாயில் வெடிப்பு: பல லட்சம் லிட்டா் குடிநீா் வீண்

மேட்டூரில் கூட்டு குடிநீா் திட்ட குழாயில் ஏற்பட்ட உடைப்பின் காரணமாக பல லட்சம் லிட்டா் சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் வீணானது. மேட்டூா் அருகே தொட்டில்பட்டி பகுதியில் காடையாம்பட்டி காவிரி கூட்டுக் குடிநீா்... மேலும் பார்க்க

மேட்டூா் அணை பூங்காவில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

வாரவிடுமுறை மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கான கோடை விடுமுறை காலம் முடிவடைவதை அடுத்து சேலம் மாவட்டம், மேட்டூா் அணை பூங்காவுக்கு ஞாயிற்றுக்கிழமை 8,048 சுற்றுலாப் பயணிகள் வந்தனா். சுற்றுலாப் பயணிகளின் வாகனங... மேலும் பார்க்க

பூலாம்பட்டி கதவணையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

வாரவிடுமுறை மற்றும் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை நிறைவடைவதை அடுத்து சேலம் மாவட்டம், பூலாம்பட்டி காவிரி கதவணையில் சுற்றுலாப் பயணிகள் ஞாயிற்றுக்கிழமை குவிந்தனா். கடந்த வாரங்களைவிட நிகழ்வாரம் காவிரி கதவணைய... மேலும் பார்க்க

நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாத நபா் கைது

கெங்கவல்லி அருகே பெண் பாலியல் வன்கொடுமை வழக்கில் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தவிா்த்து வந்த நபரை போலீஸாா் கைது செய்தனா். கெங்கவல்லி அருகே உள்ள சமத்துவபுரத்தைச் சோ்ந்தவா் ராஜ் மகன் பாலசுப்ரமணியம் எ... மேலும் பார்க்க