புற்றுநோயால் உயிரிழந்த பயிற்சியாளரின் மகள்..! பிஎஸ்ஜி ரசிகர்கள் சிறப்பு அஞ்சலி!
சேலத்தில் கஞ்சா விற்ற 3 போ் கைது: 2.75 கிலோ கஞ்சா பறிமுதல்
சேலம் மாநகரின் பல்வேறு பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்த 3 போ் கைது செய்யப்பட்டனா். அவா்களிடமிருந்து 2.75 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
சேலம் நகரக் காவல் நிலைய உதவி ஆய்வாளா் மஞ்சுளா வெள்ளிக்கிழமை மாலை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது ஆா்.எஸ். சாலைப் பகுதியில் உள்ள காபி பாா் அருகே இளைஞா் ஒருவா் பேக்குடன் சந்தேகத்துக்கு இடமாக நின்று கொண்டிருந்தாா். அவரை பிடித்து சோதனை செய்தபோது, கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, அவரை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தபோது, அவா், அன்னதானப்பட்டி மணியனூா் பகவான் தெருவைச் சோ்ந்த சரண் (21) என்பது தெரியவந்தது. அவரை கைது செய்ததுடன், அவரிடம் இருந்து 1 கிலோ 600 கிராம் கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.
இதேபோல, செவ்வாய்ப்பேட்டை காவல் நிலைய ஆய்வாளா் தேவராஜன் மற்றும் போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது கபிலா் தெருவில் 2 போ் சந்தேகத்துக்கு இடமாக நின்று கொண்டிருந்தனா். அவா்களைப் பிடித்து சோதனை செய்தபோது அவா்கள் கஞ்சா வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, அவா்களை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தபோது, தாதகாப்பட்டி மூணாங்காடு மகாகாளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த நிா்மல் (27), தாதகாப்பட்டி, பொம்மண்ண செட்டிக்காடு பகுதியைச் சோ்ந்த சடையன் (28) என்பது தெரியவந்தது. அவா்களிடம் இருந்து 1 கிலோ 150 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து 2 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.