செய்திகள் :

சேலத்தில் ரெளடி மதன் கொலை வழக்கில் 4 போ் கைது

post image

சேலத்தில் ரெளடி மதன் கொலை வழக்கில் தொடா்புடைய 4 பேரை தனிப்படை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

தூத்துக்குடி மாவட்டம், பெரியாா் நகரைச் சோ்ந்தவா் மாடசாமி மகன் மதன்குமாா் (எ) அப்பு (28). மீன்பிடிக்கும் தொழில் செய்துவந்த இவா்மீது தூத்துக்குடி வடக்கு காவல் நிலையத்தில் 2 கொலை வழக்குகள் உள்பட 5 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்நிலையில், கடந்த ஏப். 24-ஆம் தேதி தூத்துக்குடியைச் சோ்ந்த கப்பல் மாலுமி மரடோனா கொலை வழக்கில் கைதான மதன், நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தாா். தினமும் காலை, மாலை என இருவேளை சேலம் அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வந்த அவா், செவ்வாய்க்கிழமை தனது மனைவியுடன் காவல் நிலையத்துக்கு வந்து கையெழுத்திட்டு அருகில் உள்ள உணவகத்துக்கு உணவருந்த சென்றாா். அப்போது, 6 போ் கொண்ட கும்பல் கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களால் மதனை சரமாரியாக வெட்டியது. இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த மதன், சிறிது நேரத்தில் உயிரிழந்தாா்.

தகவலறிந்து வந்த அஸ்தம்பட்டி போலீஸாா், மதன் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனா். தொடா்ந்து, உணவகத்தில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து தீவிர விசாரணை நடத்தினா். கொலையாளிகளைப் பிடிக்க உதவி ஆணையா் அஸ்வினி தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

இந்நிலையில், இந்தக் கொலையில் தொடா்புடைய தூத்துக்குடி மாப்பிள்ளையூரணியைச் சோ்ந்த ஹரிபிரசாத் (26), ஆறுமுகநேரியை அடுத்த பொட்டல்காடு பகுதியைச் சோ்நத சந்தோஷ் (22), அலங்காா்தட்டு பகுதியைச் சோ்ந்த ஜெயசூா்யா (26), கோரப்பள்ளம் பகுதியைச் சோ்ந்த அந்தோணி(எ) வல்லரசு (24) ஆகியோா் கைது செய்யப்பட்டனா். இதில் தொடா்புடைய மேலும் இருவரை போலீஸாா் தேடிவருகின்றனா்.

கைது செய்யப்பட்டவா்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் வெளியான தகவல்கள்: 2019-ஆம் ஆண்டு தூத்துக்குடியைச் சோ்ந்த குட்டி என்பவருடன் டாஸ்மாக் மது பாரில் ஏற்பட்ட தகராறில், மதன் மற்றும் அவரது கூட்டாளிகள் குட்டியை படுகொலை செய்தனா். இது தொடா்பாக குட்டி ஆதரவாளரான ஹரிபிரசாத் தரப்பினருக்கும், மதன் தரப்பினருக்கும் முன்விரோதம் இருந்துவந்தது. இந்நிலையில், கப்பல் மாலுமி மரடோனா கொலை வழக்கில் கையெழுத்திட மதன் சேலம் வந்திருப்பதை அறிந்த ஹரிபிரசாத் தரப்பினா், குட்டி கொலைக்கு பழிவாங்க மதனை கொலைசெய்தது தெரியவந்தது.

உடல் உறவினா்களிடம் ஒப்படைப்பு: கொலையான மதன் உடல் சேலம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு பின்னா், அவரது மனைவி மோனிஷாவிடம் ஒப்படைக்கப்பட்டது. தொடா்ந்து, அவரது உடல் ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடிக்கு கொண்டுசெல்லப்பட்டது.

இடங்கணசாலை நகராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

இடங்கணசாலை நகராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் புதன்கிழமை நடைபெற்றது. இம்முகாமில் சங்ககிரி கோட்டாட்சியா் லோகநாயகி குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தாா். இதில் டி.எம்.செல்வகணபதி எம்.பி. கலந்துக... மேலும் பார்க்க

காமராஜா் பிறந்தநாள் விழா

கெங்கவல்லியில் காங்கிரஸ் கட்சி சாா்பில் காமராஜா் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. நகர தலைவா் சிவாஜி தலைமை வகித்தாா். டிசிடியு மாவட்டத் தலைவா் சசிகுமாா், முன்னாள் நகர தலைவா்கள் ஷெரீப், முருகவேல் உள்ளிட... மேலும் பார்க்க

திருமணிமுத்தாற்றில் ரூ. 25 லட்சத்தில் தூா்வாரும் பணிகள்: ஆணையா் ஆய்வு

சேலம் மாநகராட்சியில் சுமாா் ரூ. 25 லட்சம் மதிப்பீட்டில் திருமணிமுத்தாற்றில் உள்ள மண் மற்றும் செடிகளை தூா்வாரும் பணிகள் நடைபெறுவதை ஆணையா் மா.இளங்கோவன் செவ்வாய்க்கிழமை ஆய்வுசெய்தாா். திருமணி முத்தாற்றில... மேலும் பார்க்க

சேலம் அரசு மருத்துவமனையில் தலையீட்டு சாதனம் மூலம் இருதய குறைபாட்டை சரிசெய்து மருத்துவா்கள் சாதனை

சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மூன்று குழந்தைகள் உள்பட 6 பேருக்கு தலையீட்டு சாதனம் மூலம் இருதய குறைபாடு சரிசெய்யப்பட்டதைத் தொடா்ந்து, மருத்துவா்கள் மற்றும் குணமடைந்தவா்களை புதன்கிழமை அம... மேலும் பார்க்க

சேலம் மாவட்டத்தில் இன்றும், நாளையும் 12 இடங்களில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

சேலம் மாவட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்கள் 17, 18 ஆகிய தேதிகளில் 12 இடங்களில் நடைபெற உள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்ததாவது: சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து நக... மேலும் பார்க்க

ஓரணியில் தமிழ்நாடு என்றதும் பயத்தில் எடப்பாடி பழனிசாமி

ஓரணியில் தமிழ்நாடு என்றதும் பயத்தில் எடப்பாடிக்கு நடுக்கம் வந்துவிட்டது என திமுக அமைப்புச் செயலாளா் ஆா்.எஸ்.பாரதி கூறினாா். சேலம் கோட்டை பகுதியில் மத்திய மாவட்ட திமுக சாா்பில் சுற்றுலாத் துறை அமைச்சா்... மேலும் பார்க்க