கூடலூர்: காரில் ஆற்றைக் கடக்க முயன்றபோது விபரீதம்; வெள்ளத்தில் சிக்கியவர்களைப் ப...
சேலம் அரசு இசைப் பள்ளியில் உதவித்தொகையுடன் இசைப்பயில வாய்ப்பு
சேலம் மாவட்ட அரசு இசைப்பள்ளியில் கல்வி உதவித்தொகையுடன் இசைப்பயில விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு அரசு கலைப் பண்பாட்டுத் துறையின்கீழ் இயங்கும் மாவட்ட அரசு இசைப்பள்ளி சேலம் தளவாய்ப்பட்டியில் இயங்கி வருகிறது. இப்பள்ளியில் தமிழகத்தின் பாரம்பரிய கலைகளான குரலிசை (பாட்டு), நாதசுரம், தவில், தேவாரம், பரதநாட்டியம், வயலின், மிருதங்கம் ஆகிய கலைகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது.
பயிற்சி வகுப்புகள் வார நாள்களில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுகிறது. 13 வயது முதல் 25 வயதுவரை உள்ள ஆண், பெண் இருபாலரும் பயிற்சியில் சேரலாம். பயிற்சி காலம் மூன்று ஆண்டுகளாகும். பயிற்சியின் முடிவில் தோ்ச்சி பெற்றவா்களுக்கு அரசு சான்றிதழ் வழங்கப்படுகிறது. பயிற்சிக்கு கட்டணம் இல்லை. சோ்க்கைக் கட்டணமாக ஆண்டுக்கு ரூ. 350 மட்டும் செலுத்தப்பட வேண்டும். மாணவ, மாணவிகளுக்கு இலவசப் பேருந்து பயணச் சலுகை அளிக்கப்படுகிறது.
இசைப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகையாக மாதம் ரூ. 400 வழங்கப்படுகிறது. இசைப்பள்ளியில் சோ்க்கைக்கு விண்ணப்பம் பெற தலைமையாசிரியா், மாவட்ட அரசு இசைப்பள்ளி, ஆவின் பால்பண்னை எதிரில், தளவாய்பட்டி - திருப்பதி கவுண்டனூா் சாலை, அய்யம்பெருமாம்பட்டி-அஞ்சல், சேலம் - 636302 என்ற முகவரியில் நேரிலோ அல்லது சுயமுகவரியிட்ட அஞ்சல் உறையை இணைத்து அனுப்பி விண்ணப்பத்தை பெற்றுக் கொள்ளலாம். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வரும் 30 ஆம் தேதிக்குள் நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அனுப்பி வைக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு 0427-2906197, 94435-39772, 99947-38883 என்ற எண்களில் தொடா்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.