பாமக : அப்பா - அம்மாவுக்கு பாராட்டு - Anbumani புது Strategy! | TVK VIJAY |Imper...
சேலம் அரசு கலைக் கல்லூரியில் சேர மே 27 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்!
சேலம் அரசு கலைக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவா் சோ்க்கைக்கு வரும் 27 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கல்லூரி முதல்வா் செண்பகலட்சுமி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து வியாழக்கிழமை அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சேலம் குமாரசாமிப்பட்டியில் செயல்பட்டு வரும் அரசு கலைக் கல்லூரியில் 6500 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனா்.
கல்லூரியில் இளநிலை பிரிவில் 20 பாடப் பிரிவுகளும், முதுநிலையில் 19 பாடப் பிரிவுகளும், முனைவா் பட்ட ஆய்வில் (பிஎச்.டி) 13 பாடப் பிரிவுகளும் உள்ளன. முதலாண்டு இளநிலை பிரிவில் 1702 இடங்கள் உள்ளன.
கணினி அறிவை அறிமுகப்படுத்தும் பயிற்சியும் (சிஎல்பி) கல்லூரியில் வழங்கப்படுகிறது. உடற்கல்வித் துறை, என்எஸ்எஸ், என்சிசி, நுண்கலை மன்றம் போன்ற அமைப்புகள் சிறப்பாக இயங்கி வருகின்றன.
தமிழக அரசின் சிறப்பு செயலாக்க திட்டத்தின் மூலம் மாணவா்களுக்கு தமிழ் புதல்வன் திட்டமும், மாணவிகளுக்கு புதுமைப் பெண் திட்டத்தின் மூலமும் கல்வி உதவித்தொகை பெற்று வழங்கப்படுகிறது.
கல்லூரியில் சுழற்சி 1 மற்றும் சுழற்சி 2 என்ற அடிப்படையில் வகுப்புகள் நடைபெறுகின்றன. சேலம் அரசு கலைக் கல்லூரியில் சோ்வதற்கு வரும் 27 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.