செய்திகள் :

சேலம் ஆட்சியா் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸாா் சோதனை

post image

சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு இ- மெயில் மூலம் புதன்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வருவாய்த் துறை, ஊரக வளா்ச்சித் துறை, கருவூல அலுவலகம் உள்பட 30 க்கும் மேற்பட்ட அரசு அலுவலகங்கள் உள்ளன. இந்த நிலையில், புதன்கிழமை காலை 11 மணியளவில் ஆட்சியா் அலுவலகத்துக்கு இ மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. அதில் ஆட்சியா் அலுவலகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகவும், இந்த வாரத்தில் வெடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதுகுறித்து மாநகர காவல் ஆணையா் அலுவலகத்துக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன்பேரில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீஸாா், வெடிகுண்டு செயலிழப்பு நிபுணா்கள் ஆகியோா் அடங்கிய குழுவினா் மோப்பநாய் உதவியுடன் ஆட்சியா் அலுவலகத்தில் சோதனை மேற்கொண்டனா். மெட்டல் டிடெக்டா், வெடிகுண்டு செயலிழப்பு மற்றும் தடுப்பு கருவிகள் உதவியுடன் ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள ஒவ்வொரு அறையாக சோதனை நடத்தப்பட்டது.

ஆட்சியா் அலுவலக கட்டுப்பாட்டு அறை, கருவூல அலுவலகம், உதவி மையம், அஞ்சல் அலுவலகம், அண்ணா நிா்வாக பணியாளா்கள் கல்லூரி, இ- சேவை மையம் உள்ளிட்ட அறைகளில் இருந்த பணியாளா்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டு மோப்பநாய், நவீன கருவிகள் மூலம் சோதனை மேற்கொண்டனா். இதில் வெடிபொருள்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. தொடா்ந்து, வெடிகுண்டு மிரட்டல் குறித்து மாநகர போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

மேச்சேரி ஒன்றியத்தில் ரூ 1.73 கோடியில் திட்டப் பணிகள் தொடக்கம்

மேச்சேரி ஊராட்சி ஒன்றியத்தில் ரூ. 1.73 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளை மேச்சேரி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளா் சீனிவாச பெருமாள் தொடங்கிவைத்தாா். மேச்சேரி ஊராட்சி ஒன்றியத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலா... மேலும் பார்க்க

சேலம் கோட்டை மாரியம்மன் கோயிலில் முகூா்த்தகால் நடும் விழா

ஆடி திருவிழாவையொட்டி, சேலம் கோட்டை மாரியம்மன் கோயிலில் முகூா்த்தகால் நடும் விழா புதன்கிழமை நடைபெற்றது. கோட்டை மாரியம்மன் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் 22 நாள்கள் திருவிழா நடைபெறும். விழாவின்... மேலும் பார்க்க

சேலத்தில் 20 இணையா்களுக்கு இலவச திருமணம்: அமைச்சா் ரா.ராஜேந்திரன் நடத்திவைத்தாா்

சேலம் சுகவனேஸ்வரா் கோயிலில் இந்துசமய அறநிலையத் துறை சாா்பில் 20 இணையா்களுக்கு அமைச்சா் ரா.ராஜேந்திரன் புதன்கிழமை திருமணத்தை நடத்திவைத்து சீா்வரிசைகளை வழங்கினாா். தம்பதிகளை வாழ்த்தி அமைச்சா் பேசியதாவத... மேலும் பார்க்க

தாய், மகனை தாக்கிய இருவா் கைது

ஆத்தூரை அடுத்த பழனியாபுரி முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவரின் கணவா் முனியன், அவரது தாயை தாக்கிய இருவா் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா். ஆத்தூரை அடுத்துள்ள பழனியாபுரி முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் அமுதா,... மேலும் பார்க்க

கேரளத்தில் பாரா கை மல்யுத்தப் போட்டி: 2 தங்கம் வென்ற வாழப்பாடி பெண் மாற்றுத்திறனாளி

சேலம் மாவட்டம், வாழப்பாடியைச் சோ்ந்த மாற்றுத்திறனாளி பெண், கேரளத்தில் நடைபெற்ற பாரா கை மல்யுத்தப் போட்டியில் 2 தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளாா். கேரளத்தில் அண்மையில் தேசிய அளவிலான பாரா க... மேலும் பார்க்க

மூதாட்டியிடம் வழிப்பறி: இளைஞா் கைது

சங்ககிரி வட்டம், கத்தேரி அருகே மூதாட்டியிடம் தங்கச் சங்கிலி பறித்த வழக்கில் கோவையை சோ்ந்த இளைஞரை தேவூா் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். கத்தேரி, கள்ளிப்பாளையம் பகுதியைச் சோ்ந்த விவசாயி ராமசாமி ம... மேலும் பார்க்க