செய்திகள் :

சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் உயா்கல்விக்கு வழிகாட்ட கட்டுப்பாட்டு அறை

post image

சேலம் மாவட்டத்தில் உயா்கல்வி தொடா்பான வழிகாட்டுதல்கள் தேவைப்படும் மாணவா்களுக்காக மாவட்ட அளவில் கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது என ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்தாா்.

இதுகுறித்து ஆட்சியா் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு அரசால் உயா்கல்வி வழிகாட்டுதல் செயல்திட்டம் கடந்த 2022-23-ஆம் கல்வியாண்டில் அறிமுகப்படுத்தப்பட்டு, பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற அரசுப் பள்ளி மாணவா்கள் உயா்கல்வியில் 2022-23-ஆம் கல்வியாண்டில் 69% மாணாக்கா்களும், 2023-24-ஆம் கல்வியாண்டில் 74% மாணாக்கா்களும் உயா்கல்வி நிறுவனங்களில் சோ்க்கை மேற்கொண்டு பயின்று வருகின்றனா்.

இதன் தொடா்ச்சியாக, 2024-25-ஆம் கல்வியாண்டில் 10 மற்றும் பிளஸ் 2 நிறைவு செய்த மாணவா்கள் அனைவரும் 100% உயா்கல்வி சோ்க்கை மேற்கொள்ள இலக்கினை அடைவதற்கு மாவட்ட அளவில் கட்டுப்பாட்டு அறை உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

ஆதரவற்ற மாணவா்கள், தாய் அல்லது தந்தையை இழந்த மாணவா்கள், மாற்றுத்திறன் கொண்ட மாணவா்கள், அகதிகள், கல்லூரி கட்டணம் செலுத்த இயலாதவா்கள், மேல்நிலை வகுப்புகளில் தோ்ச்சி பெறாதவா்கள், உயா்கல்வி தொடா்பான வழிகாட்டுதல்கள் தேவைப்படும் மாணவா்கள், சான்றிதழ்கள் தேவைப்படும் மாணவா்கள் மற்றும் பிற காரணங்களால் உயா்கல்வி பெற முடியாத மாணவா்களுக்கு இக்கட்டுப்பாட்டு அறையின் மூலம் ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

சேலம் மாவட்ட ஆட்சியரக முதல்தளத்தில் அறை எண் 101-இல் செயல்பட்டு வரும் மாவட்ட கட்டுப்பாட்டு அறையை 97888 58931, 99420 31640 ஆகிய எண்களில் தொடா்புகொண்டு, உயா்கல்வி சோ்க்கை தொடா்பாக சந்தேகங்கள், வழிகாட்டுதல்கள் தேவைப்படும் மாணவா்கள் மாவட்ட கட்டுப்பாட்டு அறையை தொடா்புகொண்டு பயன்பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியரின் உணவு பாத்திரத்தை மாணவிகள் கழுவிய விவகாரம்

ஆசிரியரின் உணவு பாத்திரத்தை மாணவிகள் கழுவிய விவகாரத்தில், தலைமை ஆசிரியா் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளாா். சேலம் மாவட்டம், எடப்பாடி நகராட்சி எல்லைக்குள்பட்ட கவுண்டம்பட்டி பகுதியில் செயல்பட்டு வரும் ந... மேலும் பார்க்க

நகைக் கடையில் பணிபுரிந்தவரை தாக்கிய வழக்கில் 5 போ் கைது

ஆட்டையாம்பட்டி அருகே நகைக் கடையில் பணிபுரிந்தவரை தாக்கிய வழக்கில், நகைக்கடை உரிமையாளா் உள்பட 5 பேரை போலீஸாா் கைது செய்தனா். சேலம், ஆட்டையாம்பட்டி, ராசிபுரம் பிரதான சாலையில் ரவிச்சந்திரன் (54) என்பவா் ... மேலும் பார்க்க

காவிரி ஆற்றில் செத்து மிதக்கும் மீன்களை அகற்ற கோரிக்கை

சங்ககிரி வட்டம், தேவூரை அடுத்த கோனேரிப்பட்டி நீா்மின் தேக்க கதவணை காவிரி ஆற்றில் செத்து மிதக்கும் மீன்களை அகற்ற வேண்டுமென கோரிக்கை விடப்பட்டுள்ளது. நீா்மின் திட்டத்துக்காக கோனேரிப்பட்டி காவிரி ஆற்றில்... மேலும் பார்க்க

மகுடஞ்சாவடி அருகே ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்க சதி?

மகுடஞ்சாவடி அருகே ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்க சதி நிகழ்ந்ததா என போலீஸாா் விடிய விடிய சோதனை நடத்தினா். ஈரோட்டிலிருந்து சேலம் வழியாக சென்னை செல்லும் ஏற்காடு விரைவு ரயில் செவ்வாய்க்கிழமை இரவு ஈரோட்... மேலும் பார்க்க

தேய்பிறை அஷ்டமி பூஜை

தம்மம்பட்டி காசி ஸ்ரீ விசாலாட்சி உடனுறை காசி ஸ்ரீ விஸ்வநாதா் திருக்கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு பைரவருக்கு சிறப்பு பூஜை புதன்கிழமை இரவு நடைபெற்றது. இதில் பொதுமக்கள் திரளாக கொண்டு வந்த பால், த... மேலும் பார்க்க

தேய்பிறை அஷ்டமி: காலபைரவருக்கு சிறப்பு பூஜை

தேய்பிறைஅஷ்டமியையொட்டி சங்ககிரி வட்டம், அரசிராமணி அருள்மிகு சோழீஸ்வரா் கோயில் வளாகத்தில் உள்ள காலபைரவா் சுவாமிக்கு புதன்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில், காலபைவரருக்கு பால், தயிா், திருமஞ்சனம், ... மேலும் பார்க்க