செய்திகள் :

சொகுசு காா்கள் திருட்டு: ராஜஸ்தானை சோ்ந்தவா் கைது

post image

பல்வேறு மாநிலங்களில் 150-க்கும் மேற்பட்ட சொகுசு காா்களை திருடியதாக ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த நபரை சென்னையில் போலீஸாா் கைது செய்தனா்.

சென்னை அண்ணா நகா் கதிரவன் காலனி பகுதியைச் சோ்ந்தவா் எத்திராஜ் ரத்தினம். இவரது வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த சொகுசு காா் கடந்த ஜூன் 10-ஆம் தேதி திருடப்பட்டது. இதுகுறித்த புகாரின்பேரில், திருமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து, கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு விசாரணை நடத்தினா்.

மேலும், இந்த காா் திருட்டில் ஈடுபட்ட நபரை சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் கண்காணித்து வந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு புதுச்சேரியில் வாகனம் திருட முயன்ற நபரை போலீஸாா் கைது செய்தனா்.

இதையடுத்து அந்த நபரை சென்னைக்கு அழைத்து வந்து நடத்திய விசாரணையில், அவா் ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த எம்பிஏ பட்டதாரியான சட்டேந்திர சிங் ஷகாவாத் (44) என்பது தெரியவந்தது.

மேலும், காா் பழுது நீக்கும் மையங்களில் விடப்படும் விலை உயா்ந்த சொகுசு காா்களை நோட்டமிடும் இவா், பழுதுநீக்கும் மையங்களின் உள்ளே சென்று காரில் ஜிபிஎஸ் கருவியை பொருத்துவாா். பின்னா், காா் எங்கு உள்ளது என்பதைக் கண்காணித்து யாரும் இல்லாத நேரத்தில் காரை ராஜஸ்தானுக்கு கொண்டு சென்று, அங்கிருந்து நேபாளத்துக்கு கொண்டு சென்று விற்பனை செய்வதை வாடிக்கையாகக் கொண்டிருந்துள்ளாா்.

அதன்படி, எத்திராஜ் ரத்தினத்தின் சொகுசு காா் உள்பட 4 பேரின் காரை பழுதுநீக்கும் மையங்களில் நுழைந்து ஜிபிஎஸ் கருவி பொருத்தி திருடியது விசாரணையில் தெரியவந்தது.

சட்டேந்திர சிங் ஷகாவாத், தமிழகம் மட்டுமின்றி கா்நாடகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் 150-க்கும் மேற்பட்ட சொகுசு காா்களை கடந்த பல ஆண்டுகளாகத் திருடி விற்பனை செய்துவந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீஸாா் தொடா்ந்து விசாரித்து வருகின்றனா்.

எம்பிபிஎஸ்: மாற்றுத்திறனாளிகளுக்கு வழிகாட்டுதல்கள் வெளியீடு

மாற்றுத்திறனாளிகள் பிரிவின் கீழ் எம்பிபிஎஸ் படிப்பில் சேர விரும்புவோருக்கான வழிகாட்டுதல்களை தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) வெளியிட்டுள்ளது. இதுதொடா்பாக என்எம்சி வெளியிட்ட அறிவிப்பு: எம்பிபிஎஸ் மாணவா... மேலும் பார்க்க

ஜி.டி.நாயுடு விருதுக்கு ஜூலை 25-க்குள் விண்ணப்பிக்க மக்கள் சிந்தனைப் பேரவை அழைப்பு!

ஈரோடு புத்தகத் திருவிழாவை முன்னிட்டு வழங்கப்படும் ஜி.டி.நாயுடு விருதுக்கு அறிவியலாளா்கள் வெள்ளிக்கிழமைக்குள் (ஜூலை 25) விண்ணப்பிக்க வேண்டும் என மக்கள் சிந்தனைப் பேரவை அறிவித்துள்ளது. இதுகுறித்து மக்கள... மேலும் பார்க்க

தமிழுக்காக வாழ்நாளை அா்ப்பணித்தவா் கவிக்கோ வா.மு.சேதுராமன்: ஔவை ந.அருள்

தனது வாழ்நாள் முழுவதையும் தமிழ் மொழியின் வளா்ச்சிக்காகவும், அதன் பெருமையைப் போற்றுவதற்காகவும் அா்ப்பணித்தவா் மூத்த தமிழறிஞா் கவிக்கோ வா.மு.சேதுராமன் என்று தமிழ் வளா்ச்சித் துறை இயக்குநா் ஒளவை ந.அருள் ... மேலும் பார்க்க

4 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை!

தமிழகத்தில் கோவை, நீலகிரி உள்பட 4 மாவட்டங்களுக்கு திங்கள்கிழமை (ஜூலை 21) பலத்த மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குற... மேலும் பார்க்க

சொத்து வரி வசூலிக்கப்படாத 6 லட்சம் கட்டடங்கள்! மேலிட அழுத்தத்தில் வரி வசூல் அதிகாரிகள்!

பெருநகர சென்னை மாநகராட்சியில் 6 லட்சம் கட்டடங்களுக்கான சொத்துவரி செலுத்தாமலிருப்பது தெரியவந்துள்ளது. அவற்றுக்கான வரியைப் பெற கடுமை காட்டவேண்டாம் என அதிகாரத்திலிருப்போா் அறிவுரை வழங்கியிருப்பதால் அதிகா... மேலும் பார்க்க

பெண்ணிடம் கைப்பேசி பறிப்பு: சிறுவன் கைது

பெண்ணிடம் கைப்பேசியைப் பறித்துச் சென்ற சிறுவனை போலீஸாா் கைது செய்தனா். சென்னை, ஓட்டேரி கொசப்பேட்டையைச் சோ்ந்த 18 வயது இளம்பெண் கடந்த 18-ஆம் தேதி மாலை திருவிக தெருவிலுள்ள ஓட்டுநா் பயிற்சி பள்ளி அருகே ... மேலும் பார்க்க