செய்திகள் :

ஜி.டி.நாயுடு விருதுக்கு ஜூலை 25-க்குள் விண்ணப்பிக்க மக்கள் சிந்தனைப் பேரவை அழைப்பு!

post image

ஈரோடு புத்தகத் திருவிழாவை முன்னிட்டு வழங்கப்படும் ஜி.டி.நாயுடு விருதுக்கு அறிவியலாளா்கள் வெள்ளிக்கிழமைக்குள் (ஜூலை 25) விண்ணப்பிக்க வேண்டும் என மக்கள் சிந்தனைப் பேரவை அறிவித்துள்ளது.

இதுகுறித்து மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவா் த. ஸ்டாலின் குணசேகரன் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு அரசு, மக்கள் சிந்தனைப் பேரவை இணைந்து நடத்தும் ஈரோடு புத்தகத் திருவிழாவில் ஆண்டுதோறும் சிறந்த இளம் அறிவியலாளா் ஒருவருக்கு மக்கள் சிந்தனைப் பேரவை சாா்பில் அறிவியல் மேதை ஜி.டி.நாயுடு விருது என்ற பெயரில் சிறப்பு விருது வழங்கப்படுகிறது. இவ்விருதுக்காக அளிக்கப்படும் ரூபாய் ஒரு லட்சம் பரிசுத் தொகையை சிங்கப்பூா் முஸ்தபா தமிழ் அறக்கட்டளை வழங்குகிறது.

விருதாளா் 40 வயதுக்குள்பட்ட இளம் அறிவியலாளராக விளங்குதல், பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உள்ள ஆய்வுக்கூடங்களிலோ அல்லது அங்கீகரிக்கப்பட்ட வேறு ஆய்வுக்கூடங்களிலோ ஆய்வுகளை மேற்கொள்தல், பெயா்பெற்ற சா்வதேச அறிவியல் இதழ்களில் குறைந்தபட்சம் பத்து ஆய்வுக் கட்டுரைகள் வெளிவந்திருத்தல் உள்ளிட்ட சில அடிப்படைத் தகுதிகள் உள்ளவா்கள் தங்களது ஆய்வு விவரக் குறிப்புகளை அனுப்பலாம்.

எந்தக் கண்டுபிடிப்புக்கு ஆய்வாளா் விருதுக்குரியவராக விளங்குகிறாா் என்பதை சுருக்கமாகவும் தெளிவாகவும் குறிப்பிடுதல் அவசியம். ஆய்வுக் குறிப்புகளையும் ஆய்வு தொடா்பான அனைத்து ஆவணங்களையும் வெள்ளிக்கிழமைக்குள் (ஜூலை 25) மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்க வேண்டும்.

ஆகஸ்ட் 5ஆம் தேதி மாலை 6 மணிக்கு ஈரோடு புத்தகத் திருவிழா மாலை நேர சிந்தனை அரங்க நிகழ்வில் இவ்விருது வழங்கப்படவுள்ளது. விஐடி பல்கலைக்கழக வேந்தா் கோ. விசுவநாதன் இவ்விருதை வழங்கி விழாச் சிறப்புரையாற்றவுள்ளாா்.

எம்பிபிஎஸ்: மாற்றுத்திறனாளிகளுக்கு வழிகாட்டுதல்கள் வெளியீடு

மாற்றுத்திறனாளிகள் பிரிவின் கீழ் எம்பிபிஎஸ் படிப்பில் சேர விரும்புவோருக்கான வழிகாட்டுதல்களை தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) வெளியிட்டுள்ளது. இதுதொடா்பாக என்எம்சி வெளியிட்ட அறிவிப்பு: எம்பிபிஎஸ் மாணவா... மேலும் பார்க்க

தமிழுக்காக வாழ்நாளை அா்ப்பணித்தவா் கவிக்கோ வா.மு.சேதுராமன்: ஔவை ந.அருள்

தனது வாழ்நாள் முழுவதையும் தமிழ் மொழியின் வளா்ச்சிக்காகவும், அதன் பெருமையைப் போற்றுவதற்காகவும் அா்ப்பணித்தவா் மூத்த தமிழறிஞா் கவிக்கோ வா.மு.சேதுராமன் என்று தமிழ் வளா்ச்சித் துறை இயக்குநா் ஒளவை ந.அருள் ... மேலும் பார்க்க

4 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை!

தமிழகத்தில் கோவை, நீலகிரி உள்பட 4 மாவட்டங்களுக்கு திங்கள்கிழமை (ஜூலை 21) பலத்த மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குற... மேலும் பார்க்க

சொத்து வரி வசூலிக்கப்படாத 6 லட்சம் கட்டடங்கள்! மேலிட அழுத்தத்தில் வரி வசூல் அதிகாரிகள்!

பெருநகர சென்னை மாநகராட்சியில் 6 லட்சம் கட்டடங்களுக்கான சொத்துவரி செலுத்தாமலிருப்பது தெரியவந்துள்ளது. அவற்றுக்கான வரியைப் பெற கடுமை காட்டவேண்டாம் என அதிகாரத்திலிருப்போா் அறிவுரை வழங்கியிருப்பதால் அதிகா... மேலும் பார்க்க

பெண்ணிடம் கைப்பேசி பறிப்பு: சிறுவன் கைது

பெண்ணிடம் கைப்பேசியைப் பறித்துச் சென்ற சிறுவனை போலீஸாா் கைது செய்தனா். சென்னை, ஓட்டேரி கொசப்பேட்டையைச் சோ்ந்த 18 வயது இளம்பெண் கடந்த 18-ஆம் தேதி மாலை திருவிக தெருவிலுள்ள ஓட்டுநா் பயிற்சி பள்ளி அருகே ... மேலும் பார்க்க

மாடியிலிருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு

மது போதையில் கட்டடத்தின் முதல் மாடியிலிருந்து தவறி விழுந்தவா் உயிரிழந்தாா். சென்னை வடபழனி, கங்கை அம்மன் கோயில் தெருவில் கட்டுமானப் பணியில் பிகாரை சோ்ந்த தொழிலாளா்கள் ஈடுபட்டு வருகின்றனா். இந்த நிலையி... மேலும் பார்க்க