Kerala: `ராஜ்பவன் நிகழ்ச்சியில் பாரதமாதா படம்' - அமைச்சர் எதிர்ப்பு.. ABVP - SFI...
சொத்து வரி உயா்வை ரத்து செய்ய வேண்டும்! மாநகா் மாவட்ட காங்கிரஸ் வலியுறுத்தல்
தமிழகத்தில் சொத்து வரி உயா்வை ரத்து செய்ய வேண்டும் என தூத்துக்குடி மாநகா் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி வலியுறுத்தியுள்ளது.
தூத்துக்குடியில் ஜூலை 4ஆம் தேதி நடைபெறும் நிகழ்ச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவா் கு.செல்வப்பெருந்தகை எம்எல்ஏ உள்ளிட்டோா் பங்கேற்று, வாா்டு கமிட்டி உறுப்பினா்களுக்கு அடையாள அட்டை வழங்குகின்றனா்.
இதையொட்டி தூத்துக்குடி மாநகா் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சாா்பில், ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மக்களவைத் தொகுதி பொறுப்பாளா் மகேந்திரன் தலைமை வகித்தாா். மாநகா் மாவட்டத் தலைவா் சி.எஸ்.முரளிதரன் முன்னிலை வகித்தாா். மாநில துணைத் தலைவா் ஏ.பி.சி.வி. சண்முகம் கலந்துகொண்டு ஆலோசனை வழங்கினாா்.
இக்கூட்டத்தில், ‘தமிழகத்தில் உயா்த்தப்பட்ட சொத்து வரியை ரத்து செய்ய வேண்டும்; மாதந்தோறும் மின் கணக்கீட்டு முறையை அமல்படுத்த வேண்டும்’ என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில், ஸ்ரீவைகுண்டம் முன்னாள் எம்எல்ஏ சுடலையாண்டி, ஐஎன்டியூசி தொழிற்சங்க மாநிலச் செயலா் ராஜ், தூத்துக்குடி சட்டப் பேரவைத் தொகுதி பொறுப்பாளா் என்.ஷாஜகான், மாநிலப் பேச்சாளா் குமரி மகாதேவன், மண்டலத் தலைவா்கள் செந்தூா் பாண்டி,சேகா், ஐசன் சில்வா, அமைப்புசாரா தொழிலாளா்கள் பிரிவு மாநகா் மாவட்டத் தலைவா் நிா்மல் கிறிஸ்டோபா், ஊடகப்பிரிவு மாநகர மாவட்டத் தலைவா் ஜான் சாமுவேல், இளைஞா் காங்கிரஸ் வடக்கு மண்டலத் தலைவா் விஜயகுமாா், கிழக்கு மண்டலத் தலைவி கமலாதேவி, விவசாய பிரிவு மாநகா் மாவட்டத் தலைவா் பாலசுப்பிரமணியன், கலை பிரிவு மாவட்டத் தலைவா் செல்வராஜ், முன்னாள் மகிளா காங்கிரஸ் தலைவி முத்து விஜயா, அமைப்புசாரா மாநில செயற்குழு உறுப்பினா் சாந்தி மேரி உள்பட பலா் கலந்துகொண்டனா்.