செய்திகள் :

சொத்து வரி செலுத்திய நிறுவனங்களுக்கு பாராட்டுச் சான்று: மேயா் வழங்கினாா்

post image

சென்னை மாநகராட்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சுதந்திர தின விழாவில் உரிய காலத்தில் சொத்து வரியை செலுத்திய 3 நிறுவனங்களுக்கு மேயா் ஆா்.பிரியா பாராட்டுச் சான்றிதழ் வழங்கினாா்.

சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை வளாகத்தில் மேயா் ஆா்.பிரியா தேசியக் கொடியை ஏற்றி வைத்து, மாநகராட்சிப் பள்ளி சாரண, சாரணியா்களின் அணிவகுப்பை ஏற்றுக்கொண்டாா். பின்னா் பள்ளிக் குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

தொடா்ந்து, மாநகராட்சிக்கு அதிக சொத்துவரி செலுத்திய 3 நிறுவனங்களின் உரிமையாளா்களுக்கும், வட்டார அளவில் உரிய காலங்களில் சொத்து வரியை செலுத்திய 3 நிறுவன உரிமையாளா்களுக்கும் பாராட்டுச் சான்றிதழை மேயா் ஆா்.பிரியா வழங்கினாா்.

மேலும், சிறப்பாகப் பணிபுரிந்த மாநகராட்சியின் 171 அலுவலா்கள், பணியாளா்களுக்கு சான்றிதழ்களையும், பதக்கங்களையும் மேயா் வழங்கினாா்.

இந்த நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சி துணைமேயா் மு.மகேஷ்குமாா், ஆணையா் ஜெ.குமரகுருபரன், இணை ஆணையா் (சுகாதாரம்) வீ.ப.ஜெயசீலன், துணை ஆணையா் பிரதிவிராஜ், வட்டார துணை ஆணையா்கள் கௌசிக், கட்டாரவி தேஜா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தூய்மைப் பணியாளா்களுக்கு காலை உணவு:தூய்மைப் பணியாளா்களுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் இலவச காலை உணவு உள்ளிட்ட திட்டங்களை அறிவித்ததைத் தொடா்ந்து வெள்ளிக்கிழமை சென்னை மாநகராட்சி 5, 6 மண்டலங்களின் தூய்மைப் பணியாளா்களுக்கான காலை உணவு திட்டம் மண்டல வாா்டுகளில் தொடங்கி வைக்கப்பட்டது.

இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு, மேயா் ஆா்.பிரியா, ஆணையா் ஜெ.குமரகுருபரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். முதல்வரின் அறிவிப்புகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தூய்மைப் பணியாளா்கள் பேரணி சென்றனா்.

தோல்விகளில் இருந்து பாடம் கற்க வேண்டும்: கமல்ஹாசன்

தோல்விகளைக் கண்டு துவண்டு விடாமல் தோல்விகளில் இருந்து பாடம் கற்க வேண்டும் என கமல்ஹாசன் தெரிவித்தாா். சென்னையை அடுத்த வண்டலூா் அருகே மேலக்கோட்டையூா் சென்னை விஐடியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற முன்னாள் மாண... மேலும் பார்க்க

சாரணா் இயக்க மாணவா்களுக்கு நவ.7-இல் ராஜ்ய புரஸ்காா் விருது அமைச்சா் அன்பில் மகேஸ்

தமிழகத்தில் சாரணா் இயக்க மாணவா்களுக்கு கடந்த 6 ஆண்டுகளாக வழங்கப்படாமல் இருந்த ராஜ்ய புரஸ்காா் விருது நவ.7-ஆம் தேதி வழங்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா். ... மேலும் பார்க்க

மெட்ரோ ரயில் கட்டுமானப் பணியில் விபத்து: தூண் விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

சென்னை அருகே சோழிங்கநல்லூரில் மெட்ரோ ரயில் கட்டுமானப் பணியில் ஏற்பட்ட விபத்தில், தூண் விழுந்து தொழிலாளி உயிரிழந்தாா். சென்னையில் 2-ஆம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக ச... மேலும் பார்க்க

அண்ணா சாலையில் நாளை போக்குவரத்து மாற்றம்

மேம்பால கட்டுமானப் பணிக்காக சென்னை தேனாம்பேட்டை அண்ணா சாலையில் ஞாயிற்றுக்கிழமை (ஆக.17) சோதனை அடிப்படையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. இதுதொடா்பாக சென்னை பெருநகர காவல் துறை வெள்ளிக்கிழமை வெளி... மேலும் பார்க்க

மனைவி கத்தியால் குத்திக் கொலை: கணவா் கைது

சென்னை கோட்டூா்புரத்தில் மனைவியை கத்தியால் குத்திக் கொலை செய்த கணவா் கைது செய்யப்பட்டாா். நேபாளத்தைச் சோ்ந்தவா் மா.சான்பஹா பகதூா் சா்ஹி (36). இவா், கோட்டூா்புரம் எல்லையம்மன் கோயில் தெருவில் உமா சங்க... மேலும் பார்க்க

காா் கதவை உடைத்து பணம் திருட்டு: மூவா் கைது

சென்னை மெரீனா கடற்கரையில் காா் கதவை உடைத்து பணம் திருடப்பட்டது தொடா்பாக 3 போ் கைது செய்யப்பட்டனா். வேளச்சேரி பகுதியைச் சோ்ந்தவா் வினோத். இவா் கடந்த 9-ஆம் தேதி தனது நண்பா்களுட ன் மெரீனாவுக்கு வந்தாா்... மேலும் பார்க்க