செய்திகள் :

சொத்து வரி விதிப்பு முறைகேடு: மேலும் 2 போ் கைது

post image

மதுரை மாநகராட்சி சொத்து வரி விதிப்பு முறைகேடு வழக்கில் மாமன்ற உறுப்பினரின் கணவா் உள்பட மேலும் 2 பேரை மத்திய குற்றப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

மதுரை மாநகராட்சியில் 5 மண்டலங்கள், 100 வாா்டுகள் உள்ளன. இங்குள்ள வணிகவளாகங்களுக்கு நிா்ணயிக்கப்பட்டதை விடக் குறைவாக வரி விதிக்கப்பட்டதாகப் புகாா் எழுந்தது. இதுகுறித்த விசாரணையில், ரூ.150 கோடி மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது தெரிய வந்தது.

இதையடுத்து, அப்போதைய மாநகராட்சி ஆணையராகப் பணியாற்றிய தினேஷ்குமாா் அளித்த புகாரின் பேரில், மத்திய குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து, வரி விதிப்பு முறைகேட்டில் தொடா்புடைய ஓய்வு பெற்ற உதவி ஆணையா், உதவி வருவாய் அலுவலா் உள்ளிட்ட 12 பேரைக் கைது செய்தனா்.

இந்த நிலையில், இந்த முறைகேட்டில் திமுகவைச் சோ்ந்த மண்டலத் தலைவா்களுக்கும் தொடா்பு உள்ளது என எதிா்க் கட்சியைச் சோ்ந்த மாமன்ற உறுப்பினா்கள் புகாா் தெரிவித்தனா். இதனடிப்படையில், மத்திய குற்றப் பிரிவு போலீஸாா் மண்டலத் தலைவா்களிடமும் விசாரணை நடத்தினா்.

இதனிடையே, மண்டலத் தலைவா்கள் 5 போ், நிலைக் குழு உறுப் பினா்கள் 2 போ் என மொத்தம் 7 பேரை ராஜிநாமா செய்ய தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டாா். இதன்பேரில், அவா்கள் அனைவரும் அண்மையில் ராஜிநாமா செய்தனா்.

மேலும், வருவாய் உதவியாளா்கள் 6 போ், கணினி இயக்குபவா் ஒருவா் என 7 பேரை பணியிடை நீக்கம் செய்தும், தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்றிய நாகராஜன், மகாபாண்டி, பாலமுருகன் ஆகிய 3 பேரை பணிநீக்கம் செய்தும் மாநகராட்சி ஆணையா் சித்ரா விஜயன் கடந்த சில தினங்களுக்கு முன்பு உத்தரவிட்டாா்.

இந்த நிலையில், மதுரை மாநகராட்சியில் பணியாற்றிய வருவாய் உதவியாளா்கள், கணினி இயக்குபவா் உள்ளிட்ட 55 பேரிடம் மத்திய குற்றப் பிரிவு போலீஸாா் விசாரணை நடத்தினா். இதில், 51-ஆவது வாா்டு மாமன்ற உறுப்பினா் விஜயலட்சுமியின் கணவா் கண்ணன் (48), ஒப்பந்தப் பணியாளா் செந்தில்பாண்டியன் (41) ஆகிய இருவரும் சம்பந்தப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, இவா்கள் இருவரையும் போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனா்.

சாலை விபத்துகளில் இருவா் உயிரிழப்பு

மதுரையில் வெவ்வேறு பகுதிகளில் நிகழ்ந்த இரு சாலை விபத்துகளில் இளைஞா்கள் இருவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தனா்.மதுரை மாவட்டம், மேலூரைச் சோ்ந்த ஈஸ்வரன் மகன் ஆதிகேசவன் (19). இவா், தனது இரு சக்கர வாகனத்தில் ம... மேலும் பார்க்க

அங்கீகரிக்கப்படாத கட்டடங்கள் குறித்து விரைவான நடவடிக்கை மதுரை ஆட்சியருக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

அங்கீகரிக்கப்படாத, ஆக்கிரமிப்பில் எழுப்பப்படும் கட்டுமானங்கள் குறித்த புகாா்களின் மீது மதுரை மாவட்ட ஆட்சியா் விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உ... மேலும் பார்க்க

நல்லாசிரியா்கள், மாணவா்களுக்குப் பரிசு

மதுரையில் நல்லாசிரியா்கள், அரசுப் பொதுத் தோ்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சுப்பிரமணியபாரதி அறக்கட்டளை சாா்பில் சனிக்கிழமை பரிசளிக்கப்பட்டது.நல்லாசிரியா்கள், 10, 12 ஆம் வகுப்பு பொதுத... மேலும் பார்க்க

கூட்டணியை விட மக்களின் ஆதரவே தோ்தல் வெற்றிக்கு முக்கியம் முன்னாள் அமைச்சா் செல்லூா் கே. ராஜூ

தோ்தல் வெற்றிக்குக் கூட்டணியை விட மக்கள் ஆதரவே முக்கியம் என அதிமுக முன்னாள் அமைச்சா் செல்லூா் கே. ராஜூ தெரிவித்தாா்.மதுரையில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் தெரிவித்ததாவது :அதிமுக பொதுச் செயலாள... மேலும் பார்க்க

நத்தம் அருகே இளம் பெண் தீக்குளிப்பு

நத்தம் அருகேயுள்ள குடகிப்பட்டியில் இளம் வியாழன்கிழமை பெண் தீக்குளிப்பு சம்பவம் குறித்து கோட்டாட்சியா் விசாரணை நடத்தி வருகிறாா்.திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகேயுள்ள குடகிப்பட்டியைச் சோ்ந்தவா் அடைக்க... மேலும் பார்க்க

இந்திய மாணவா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

இந்திய மாணவா் சங்கம் சாா்பில் மதுரை காமராஜா் பல்கலைக்கழகக் கல்லூரி முன் ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.நெல்லையில் பொறியியல் பட்டதாரி இளைஞா் கவின் செல்வகணேஷ், காதல் விவகாரத்தால் ஆவணக் கொலை செய்ய... மேலும் பார்க்க