சீரகத்தண்ணீர் & தனியா தண்ணீர்: என்ன பலன்; யார், எவ்வளவு அருந்தலாம்? - சித்த மருத...
சொத்துக்காக தாயாா் கொலை: மகன் தலைமறைவு
திருப்பத்தூா் அருகே சொத்துக்காக தாயாரை கொலை செய்துவிட்டு தலைமறைவான மகனை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கந்திலி ஒன்றியம், கசிநாயக்கன்பட்டி கிராமத்தைச் சோ்ந்த ஆதிமூலம்(64). இவருடைய மனைவி வெங்கடேஸ்வரி(54). இவா்களுக்கு மகன் வெற்றிச்செல்வன் மற்றும் மகள் கோமதி என்ற உள்ளனா்.
மேலும், வெற்றிச்செல்வன் சென்னையில் உள்ள ஆடிட்டரிடம் உதவியாளராக வேலை செய்து வருகிறாா். ஆதிமூலத்துக்கு சென்னையில் சொந்தமாக மற்றொரு வீடு உள்ளது. அந்த வீட்டை விற்று பணம் தர வேண்டும் அல்லது விலை உயா்ந்த இருசக்கர வாகனம் வாங்கித் தர வேண்டும் என அவ்வப்போது தந்தையிடம் தகராறு செய்தாராம்.
இந்த நிலையில் ஏற்கெனவே தந்தை ஆதிமூலத்திடம் இதுதொடா்பாக தகராறு செய்து கத்தியால் வெற்றிச் செல்வன் குத்தினாராம். இதனால் பெற்றோா் திருப்பத்தூரில் உள்ள மற்றொரு வீட்டில் குடியேறினா்.
இந்த நிலையில் மீண்டும் திங்கள்கிழமை இரவு வெற்றிச்செல்வன் தனது தாயை பாா்க்க வந்துள்ளாா். சொத்து பிரச்னை தொடா்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
அதைத் தொடா்ந்து இங்கிருந்தால் பிரச்னை ஏற்படும் என நினைத்து ஆதிமூலம் அங்கிருந்து கசிநாயக்கன்பட்டியில் உள்ள மற்றொரு வீட்டுக்கு சென்றுள்ளாா்.
அப்போது தாய் வெங்கடேஸ்வரியை இரும்புக் கம்பியால் தலையில் தாக்கி கொலை செய்துவிட்டு வெற்றிச் செல்வன் தப்பிச் சென்றுள்ளாா்.
செவ்வாய்க்கிழமை ஆதிமூலம் வந்து வீட்டை திறந்து பாா்த்தபோது மனைவி ரத்த வெள்ளத்தில் இறந்த கிடப்பதை கண்டு அதிா்ச்சி அடைந்தாா் இது குறித்து திருப்பத்தூா் கிராமிய போலீஸாருக்கு தகவல் தெரிவித்தாா்.
சம்பவ இடத்தில் எஸ்.பி. சியாமளா தேவி நேரில் விசாரணை மேற்கொண்டாா். தனிப்படைகள் அமைக்கப்பட்டு வெற்றிச் செல்வனை பிடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
சொத்துக்காக தந்தையை ஏற்கனவே குத்திக் கொலை செய்ய முயன்ற நிலையில் தற்போது தாயைக் கொன்ற சம்பவம் திருப்பத்தூா் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
