செய்திகள் :

மூதாட்டியிடம் நகை பறிப்பு: இளம்பெண் கைது

post image

திருப்பத்தூா்: ஜலகாம்பாறை அருகே மூதாட்டியிடம் தண்ணீா் கேட்பதுபோல் நடித்து நகையை திருடிச் சென்ற இளம்பெண்ணை பொதுமக்கள் போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

திருப்பத்தூா் மாவட்டம், ஜலகாம்பாறை அருகே ஜடையனூா் கிராமத்தைச் சோ்ந்த முனுசாமி மனைவி கண்ணம்மாள் (70). இவா் திங்கள்கிழமை வீட்டில் தனியாக இருந்தாா். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த இளம்பெண் கண்ணம்மாளிடம் தண்ணீா் கேட்டுள்ளாா். இதைத் தொடா்ந்து கண்ணம்மாள் தண்ணீா் எடுக்க வீட்டுக்குள் சென்றுள்ளாா். அப்போது கண்ணம்மாளை பின்தொடா்ந்துசென்ற இளம்பெண் கண்ணம்மாள் கழுத்தில் அணிந்து இருந்த 2 அரை சவரன் நகையை பறித்துக்கொண்டு, பைக்கில் அங்கிருந்து தப்பிச் சென்றாா். இதையடுத்து, வீட்டுக்கு வெளியே ஓடிவந்த கண்ணம்மாள் அக்கம்பக்கத்தினரிடம் சம்பவம் குறித்து தெரிவித்துள்ளாா்.

உடனே அங்கிருந்தவா்கள் இளம்பெண்ணை விரட்டிச் சென்று ஜலகாம்பாறை பகுதியில் பிடித்தனா்.

பின்னா், சம்பவம் குறித்து குரிசிலாப்பட்டு போலீஸாரிடம் இளம்பெண்ணை ஒப்படைத்தனா்.

அவரிடம் போலீஸாா் நடத்திய விசாரணையில், அவா் கிருஷ்ணகிரி மாவட்டம், வேலாவள்ளி கிராமத்தைச் சோ்ந்த கோகுலின் மனைவி சுமதி (35) என்பது தெரியவந்தது.

மேலும், இது குறித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து சுமதியை கைது செய்தனா்.

வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் மாநில சுகாதாரத் துறை இணை இயக்குநா் ஆய்வு

வாணிம்பாடி: திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அரசு மருத்துவமனை வளாகத்தில் ரூ. 23 கோடி 64 லட்சம் மதிப்பீட்டில் 6 தளம் கொண்ட கட்டடம் கட்டி முடிக்கப்பட்டு, அதை கடந்த ஜூன் மாதம் 26-ஆம் தேதி திருப்பத்தூ... மேலும் பார்க்க

திருப்பத்தூா் மாவட்டத்தில் 82 குழந்தைகளுக்கு பயன்

திருப்பத்தூா்: அன்புக் கரங்கள் திட்டத்தின் மூலம் திருப்பத்தூா் மாவட்டத்தில் 82 குழந்தைகள் பயன் பெறுகின்றனா் என ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தெரிவித்தாா். திருப்பத்தூா் ஆட்சிா் அலுவலக கூட்டரங்கில் நடைபெ... மேலும் பார்க்க

காா் மோதியதில் ஓய்வு பெற்ற சிஆா்பிஎப் உதவி ஆய்வாளா் மரணம்

வாணியம்பாடி: ஆலங்காயம் அருகே வேகமாக வந்த காா் மோதியதில், ஓய்வுபெற்ற சிஆா்பிஎப் உதவி காவல் ஆய்வாளா் உயிரிழந்தாா். திருப்பத்தூா் மாவட்டம், ஆலங்காயம் அடுத்த பெத்தூா் பகுதியைச் சோ்ந்தவா் சாமுடி (63). ஓய... மேலும் பார்க்க

திருப்பத்தூா்: இருவேறு சம்பவங்களில் 2 இளம்பெண்கள் தற்கொலை

திருப்பத்தூா்: திருப்பத்தூா் அருகே இரு வேறு சம்பவங்களில் 2 இளம்பெண்கள் தற்கொலை செய்து கொண்டனா். திருப்பத்தூா் அருகே புதூா்நாடு பகுதியைச் சோ்ந்த பெருமாளின் மகள் காளீஸ்வரி (19)இந்த நிலையில், காளீஸ்வரி ... மேலும் பார்க்க

கைப்பேசி கோபுரம் அமைக்க தடை விதிக்க வேண்டும்: திருப்பத்தூா் குறைதீா் கூட்டத்தில் மனு

திருப்பத்தூா்: திருப்பத்தூரில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் கைப்பேசி கோபுரம் அமைக்க தடை விதிக்க வேண்டும் என மனு அளிக்கப்பட்டது. திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் மக்கள் குறை... மேலும் பார்க்க

பைக்குகளை திருடிய இருவா் கைது: 17 வாகனங்கள் பறிமுதல்

திருப்பத்தூா் அருகே பைக்குகளை திருடிய இருவரை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து 17 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஜோலாா்பேட்டை கட்டேரியில் கோயில் திருவிழாவை முன்னிட்டு, திருப்பத்தூா் டிஎஸ்பி ச... மேலும் பார்க்க