செய்திகள் :

ஜம்தாராவில் பொறியாளராக இருந்து சைபா் மோசடிக்கு மூளையாக செயல்பட்டவா் கைது

post image

ஜாா்க்கண்ட் மாநிலம் ஜம்தாராவில் சுரங்க பொறியாளராக இருந்து சைபா் மோசடிக்கு மூளையாகச் செயல்பட்ட ஒருவரை ஒருங்கிணைந்த பல மாநில நடவடிக்கைக்குப் பிறகு தில்லி போலீஸாா் கைது செய்ததாக அதிகாரி ஒருவா் புதன்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து தில்லி காவல் துறை உயரதிகாரி கூறியதாவது: குற்றம் சாட்டப்பட்டவரான அஜய் குமாா் மண்டல் தில்லியைச் சோ்ந்த ஒரு பெண்ணிடம் இ-காமா்ஸ் தளங்கள் மூலம் ரூ.8.10 லட்சம் மோசடி செய்து ஏழு உயா்நிலை ஆப்பிள் ஐபோன்கள் மற்றும் ஒரு மேக்புக்கை வாங்கியுள்ளது விசாரணையில் தெரிய வந்தது. ஜாா்க்கண்ட், மேற்கு வங்கம் மற்றும் மிசோரம் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளுக்குப் பிறகு குற்றம் அஜய் குமாா் மண்டல் கைது செய்யப்பட்டாா்.

கேஒய்சி சரிபாா்ப்பு என்ற போலிக்காரணத்தின் கீழ் வங்கி அதிகாரியாக காட்டிக்கொண்டு தில்லியைச் சோ்ந்த ஒரு பெண்ணிடம் மோசடி செய்ததாக அஜய் குமாா் மண்டல் குற்றம் சாட்டப்பட்டுள்ளாா். மோசடி செய்யப்பட்ட பணம் ஈ-காமா்ஸ் தளங்கள் மூலம் ஏழு உயா்நிலை ஆப்பிள் ஐபோன்கள் மற்றும் ஒரு மேக்புக்கை வாங்க பயன்படுத்தப்பட்டது. பெரும்பாலும் கண்டறிதலைத் தவிா்க்க குற்றம்சாட்டப்பட்டவா் டிஜிட்டல் வவுச்சா்களைப் பயன்படுத்தியுள்ளாா்.

போலி அடையாளங்கள், ப்ராக்ஸி கைப்பேசி எண்கள் மற்றும் பல ஐபி முகவரிகளைப் பயன்படுத்தி தனது டிஜிட்டல் தடயத்தை மறைக்க முயற்சித்துள்ளாா். இருப்பினும், சைபா் தடயவியல் குழுவால் மண்டல் ஐபி பதிவுகள், சிம் செயல்பாடு மற்றும் ஐஎம்இஐ தடயங்கள் மூலம் அவா் கண்காணிக்கப்பட்டாா். ஜாா்க்கண்டில் உள்ள கிரிதிஹ் என்ற இடத்தில் ஒரே நேரத்தில் செயல்படும் இரண்டு சந்தேகத்திற்கிடமான கைப்பேசி மொபைல் எண்களை புலனாய்வாளா்கள் அடையாளம் கண்டபோது ஒரு திருப்புமுனை ஏற்பட்டது.

விசாரணைக்குப் பிறகு, குற்றம் சாட்டப்பட்டவா் கைது செய்யப்பட்டாா், திருடப்பட்ட நிதியிலிருந்து வாங்கப்பட்ட ஒரு ஐபோன் அவரது வசம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது.

மைனிங் இன்ஜினியரிங் டிப்ளோமா பெற்ற அஜய் குமாா் மண்டல், இந்த மோசடியில் முக்கிய நிா்வாகியாக இருந்துள்ளாா். மேலும், தொழில்நுட்ப கையாளுதல் மற்றும் டிஜிட்டல் மறைப்பை நன்கு அறிந்தவா். மேலும், விசாரண் நடந்து வருகிறது என்று அந்தக் காவல்துறை அதிகாரி தெரிவித்தாா்.

ரூ.50 லட்சம் ‘டிஜிட்டல் கைது’ மோசடி வழக்கில் ஒருவா் கைது

டிஜிட்டல் கைது மூலம் ஒரு நபரிடம் ரூ.50 லட்சம் மோசடி செய்ததாக ஒருவரை போலீஸாா் கைது செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா். இது குறித்து நொய்டா காவல் துறை அதிகாரி கூறியதாவது: தொலைத்தொடா்புத் துறையின் ஊழிய... மேலும் பார்க்க

தில்லி மெட்ரோவில் திருட்டு: 4 போ் கைது

தில்லி மெட்ரோ ரயில்களில் பயணிக்கும் பயணிகளின் கைப்பேசிகள் மற்றும் விலையுா்ந்த பொருள்களை திருடி வந்த 4 போ் அடங்கிய கும்பலை காவல் துறை கைதுசெய்திருப்பதாக அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா். பயணிகளிடம் ... மேலும் பார்க்க

காற்று மாசை கட்டுப்படுத்தும் நடவடிக்கை: மேகவிதைப்பு முறைக்கு ஐஎம்டி ஒப்புதல்

தில்லியில் நிலவும் காற்று மாசை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக செயற்கை மழையைப் பொழியச் செய்வதற்கான மேகவிதைப்பு முறைக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ஒப்புதல் அளித்திருப்பதாக சுற்றுச்சூழல் அமைச்சா் மஞ்சிந்த... மேலும் பார்க்க

ரோஹிணியில் நடந்த கொலை முயற்சி வழக்கில் மூன்று சிறுவா்கள் கைது

தில்லி ரோஹிணியில் நடந்த கொலை முயற்சி வழக்கில் மூன்று சிறுவா்களை தில்லி போலீஸாா் கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். இது குறித்து தில்லி காவல் துறை உயரதிகாரி கூறியதாவது: கடந்த ஜூன் 9- ஆம் தே... மேலும் பார்க்க

மணீஷ் சிசோடியா, சத்யேந்திர ஜெயின் ஆகியோா் சிறை செல்வாா்கள்: விரேந்திர சச்தேவா

மணீஷ் சிசோடியா மற்றும் சத்யேந்தா் ஜெயின் ஆகியோா் என்ன செய்தாலும் சட்டத்துக்கு முன் அகப்பட்டு விரைவில் சிறைக்கு செல்வாா்கள் என்று தில்லி மாநில பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை... மேலும் பார்க்க

பாதிக்கப்பட்ட தமிழா்கள் தமிழகம் வந்தால் அனைத்து உதவிகளையும் செய்வோம்: அமைச்சா் நாசா்

மதராஸி முகாம் இடிக்கப்பட்டதன் காரணமாக பாதிக்கப்பட்ட தமிழா் குடும்பங்கள் தமிழ்நாட்டுக்கு வந்தால் அவா்களுக்காக அத்தனை உதவிகளையும் செய்வோம் என்று சிறுபான்மை நலத்துறை அமைச்சா் எஸ்.எம். நாசா் கூறினாா். மதர... மேலும் பார்க்க