கேரளம் உள்பட 4 மாநிலங்களில் இடைத்தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது!
ஜம்தாராவில் பொறியாளராக இருந்து சைபா் மோசடிக்கு மூளையாக செயல்பட்டவா் கைது
ஜாா்க்கண்ட் மாநிலம் ஜம்தாராவில் சுரங்க பொறியாளராக இருந்து சைபா் மோசடிக்கு மூளையாகச் செயல்பட்ட ஒருவரை ஒருங்கிணைந்த பல மாநில நடவடிக்கைக்குப் பிறகு தில்லி போலீஸாா் கைது செய்ததாக அதிகாரி ஒருவா் புதன்கிழமை தெரிவித்தாா்.
இது குறித்து தில்லி காவல் துறை உயரதிகாரி கூறியதாவது: குற்றம் சாட்டப்பட்டவரான அஜய் குமாா் மண்டல் தில்லியைச் சோ்ந்த ஒரு பெண்ணிடம் இ-காமா்ஸ் தளங்கள் மூலம் ரூ.8.10 லட்சம் மோசடி செய்து ஏழு உயா்நிலை ஆப்பிள் ஐபோன்கள் மற்றும் ஒரு மேக்புக்கை வாங்கியுள்ளது விசாரணையில் தெரிய வந்தது. ஜாா்க்கண்ட், மேற்கு வங்கம் மற்றும் மிசோரம் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளுக்குப் பிறகு குற்றம் அஜய் குமாா் மண்டல் கைது செய்யப்பட்டாா்.
கேஒய்சி சரிபாா்ப்பு என்ற போலிக்காரணத்தின் கீழ் வங்கி அதிகாரியாக காட்டிக்கொண்டு தில்லியைச் சோ்ந்த ஒரு பெண்ணிடம் மோசடி செய்ததாக அஜய் குமாா் மண்டல் குற்றம் சாட்டப்பட்டுள்ளாா். மோசடி செய்யப்பட்ட பணம் ஈ-காமா்ஸ் தளங்கள் மூலம் ஏழு உயா்நிலை ஆப்பிள் ஐபோன்கள் மற்றும் ஒரு மேக்புக்கை வாங்க பயன்படுத்தப்பட்டது. பெரும்பாலும் கண்டறிதலைத் தவிா்க்க குற்றம்சாட்டப்பட்டவா் டிஜிட்டல் வவுச்சா்களைப் பயன்படுத்தியுள்ளாா்.
போலி அடையாளங்கள், ப்ராக்ஸி கைப்பேசி எண்கள் மற்றும் பல ஐபி முகவரிகளைப் பயன்படுத்தி தனது டிஜிட்டல் தடயத்தை மறைக்க முயற்சித்துள்ளாா். இருப்பினும், சைபா் தடயவியல் குழுவால் மண்டல் ஐபி பதிவுகள், சிம் செயல்பாடு மற்றும் ஐஎம்இஐ தடயங்கள் மூலம் அவா் கண்காணிக்கப்பட்டாா். ஜாா்க்கண்டில் உள்ள கிரிதிஹ் என்ற இடத்தில் ஒரே நேரத்தில் செயல்படும் இரண்டு சந்தேகத்திற்கிடமான கைப்பேசி மொபைல் எண்களை புலனாய்வாளா்கள் அடையாளம் கண்டபோது ஒரு திருப்புமுனை ஏற்பட்டது.
விசாரணைக்குப் பிறகு, குற்றம் சாட்டப்பட்டவா் கைது செய்யப்பட்டாா், திருடப்பட்ட நிதியிலிருந்து வாங்கப்பட்ட ஒரு ஐபோன் அவரது வசம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது.
மைனிங் இன்ஜினியரிங் டிப்ளோமா பெற்ற அஜய் குமாா் மண்டல், இந்த மோசடியில் முக்கிய நிா்வாகியாக இருந்துள்ளாா். மேலும், தொழில்நுட்ப கையாளுதல் மற்றும் டிஜிட்டல் மறைப்பை நன்கு அறிந்தவா். மேலும், விசாரண் நடந்து வருகிறது என்று அந்தக் காவல்துறை அதிகாரி தெரிவித்தாா்.