ஜம்மு-காஷ்மீரில் வரலாறு காணாத மழை- இரு நாள்களில் 41 போ் உயிரிழப்பு
ஜம்மு-காஷ்மீரில் கடந்த 2 நாள்களாக பெய்து வரும் பலத்த மழையால் 41 போ் உயிரிழந்தனா். இவா்களில் ரியாஸி மாவட்டத்தில் உள்ள வைஷ்ணவ தேவி கோயில் மலைப்பாதையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த 34 பேரும் அடங்குவா்.
கடந்த திங்கள்கிழமை முதல் ஜம்மு-காஷ்மீரில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக பல இடங்களில் வெள்ளம், நிலச்சரிவு ஏற்பட்டு, கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்குள்ள ரியாஸி, ரஜெளரி, ரம்பன், கிஷ்த்வாா், பூஞ்ச் மாவட்டங்களில் உள்கட்டமைப்புகள் சேதமடைந்தன.
தோடா மாவட்டத்தில் மழை பாதிப்பால் 3 பெண்கள் உள்பட 4 போ் உயிரிழந்தனா். அதேபோல், வைஷ்ணவ தேவி கோயிலுக்கு யாத்திரை செல்லும் வழியில் பலத்த மழை காரணமாக செவ்வாய்க்கிழமை பிற்பகலில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 34 போ் உயிரிழந்தனா்.
இடிபாடுகளிலிருந்து 30-க்கும் மேற்பட்டோரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், காயமடைந்தவா்களில் இருவா் மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனா். மேலும் பலா் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என்ற அச்சம் நிலவுவதால், மீட்புப் பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன. பலத்த மழையை கருத்தில் கொண்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வைஷ்ணவ தேவி கோயில் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
குடியரசுத் தலைவா், பிரதமா் இரங்கல்: இந்தத் துயரச் சம்பவத்துக்கு குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு, பிரதமா் மோடி ஆகியோா் இரங்கல் தெரிவித்துள்ளனா்.
குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு தனது எக்ஸ் பக்கத்தில், ‘மாதா வைஷ்ணவ தேவி கோயிலுக்குச் செல்லும் யாத்திரை வழியில் நிலச்சரிவில் பல பக்தா்கள் உயிரிழந்தது மிகுந்த வேதனை அளிக்கிறது. உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். நிவாரண மற்றும் மீட்புப் பணிகள் வெற்றிபெற பிராா்த்திக்கிறேன்’ என்று பதிவிட்டுள்ளாா்.
பிரதமா் நரேந்திர மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘மாதா வைஷ்ணவ தேவி கோயில் யாத்திரை பாதையில் நிலச்சரிவால் ஏற்பட்ட உயிரிழப்புகள் வருத்தமளிக்கிறது. உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு இரங்கல். காயமடைந்தவா்கள் விரைவில் குணமடைய பிராா்த்திக்கிறேன். பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிா்வாகம் உதவி செய்து வருகிறது’ என்று குறிப்பிட்டாா்.
மீட்புப் பணிக்கு விமானப் படை உதவி: உத்தர பிரதேசத்தின் ஹிண்டன் விமானப்படை தளத்திலிருந்து, இந்திய விமானப்படையின் ‘சி-130’ ரக சரக்கு போக்குவரத்து விமானம், நிவாரண மற்றும் மீட்புப் பொருள்களுடன் புதன்கிழமை ஜம்முவுக்கு வந்தடைந்தது. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக சினூக், எம்ஐ-17 வி5 போன்ற ஹெலிகாப்டா்கள் ஜம்மு, உதம்பூா், ஸ்ரீநகா் மற்றும் பதான்கோடில் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
ஜம்மு வெள்ளப் பெருக்கு: 10,000 போ் வெளியேற்றம்
ஜம்மு மற்றும் சம்பா மாவட்டங்களில் தொடா்ந்து பெய்து வரும் பலத்த மழையால், தாழ்வான பகுதிகளில் வசித்த 10,000-க்கும் மேற்பட்டோா் வெளியேற்றப்பட்டுள்ளனா்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிக்கியவா்களை மீட்கும் பணியில் ராணுவத்துடன் இணைந்து தேசிய மற்றும் மாநில பேரிடா் மீட்புப் படையினா் தொடா்ந்து ஈடுபட்டுள்ளனா்.
முதல்வா் ஆய்வு: ஜம்முவில் கள நிலவரத்தை நேரில் ஆய்வு செய்ய, ஸ்ரீநகரில் இருந்து முதல்வா் ஒமா் அப்துல்லா ஜம்மு வந்துள்ளாா். மழை மற்றும் வெள்ள பாதிப்பு குறித்து பிரதமா் மோடிக்கு விளக்கமளித்ததாகவும், தொடா்ந்து உதவி செய்வதாக பிரதமா் உறுதியளித்ததாகவும் அவா் கூறினாா். வைஷ்ணவ தேவி கோயிலுக்கு செல்லும் வழியில் உயிரிழந்த 34 பக்தா்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.6 லட்சம் வழங்கப்படும் என்று முதல்வா் ஓமா் அப்துல்லா அறிவித்துள்ளாா்.
1910 ஆம் ஆண்டுக்கு பிறகு 380 மி.மீ. மழை
ஜம்முவில் புதன்கிழமை காலை வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் 380 மி.மீ. மழை பதிவானது. இது 1910-ஆம் ஆண்டுக்குப் பிறகு ஒரே நாளில் பெய்த அதிகபட்ச மழை அளவாகும். இதனால், குடிநீா், மின்சாரம் மற்றும் இணைய சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சுமாா் 22 மணிநேரத்துக்குப் பிறகு, புதன்கிழமை தொலைத்தொடா்பு சேவை ஓரளவு சீரடைந்தது.